இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது T 20 போட்டி மழையால் ரத்து - தொடரை வென்ற இந்தியா
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T 20 கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி 8ம் தேதி சனிக்கிழமை பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கை விடப்பட்டது. இந்தத் தொடரில் ஏற்கனேவே நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி இரண்டுக்கு ஓன்று என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் ஐந்தாவது ஆட்டம் கை விடப்பட்டதால் இந்திய அணி இரண்டுக்கு ஓன்று கணக்கில் தொடரை வென்றது.