• Home
  • HEALTH
  • BIZARRE
  • LIVE RADIO
  • SPONSORS
    • HOTEL SUNRISE
    • ZOHO
  • Tamil EventS
  • TEAM
  • Daily News
  • More
    • Home
    • HEALTH
    • BIZARRE
    • LIVE RADIO
    • SPONSORS
      • HOTEL SUNRISE
      • ZOHO
    • Tamil EventS
    • TEAM
    • Daily News
  • Home
  • HEALTH
  • BIZARRE
  • LIVE RADIO
  • SPONSORS
    • HOTEL SUNRISE
    • ZOHO
  • Tamil EventS
  • TEAM
  • Daily News

NJSun Daily News

Thursday May 8, 2025

புதிய போப் ஆண்டவராக 14-ம் லியோ: அமெரிக்க கார்டினல் ராபர்ட்  பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு


புதிய போப் ஆண்டவராக ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்  தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் லியோ XIV என்ற பெயரை ஏற்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிகாகோவைச் சேர்ந்தவர் பதினான்காம் லியோ. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, போப் பிரான்சிஸ் காலமானார்.  இவரது மறைவையடுத்து, அடுத்து போப் யார் என்கிற ரகசிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாடிகனில் உள்ள கார்டினால்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியமாக நடைபெற்றது. இதற்காக சுமார் 250 கார்டினல்கள் உலகம் முழுவதும் இருந்து வாடிகன் நகருக்கு வந்தனர். இருப்பினும் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே போப் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர்.  அந்த வாக்கெடுப்பில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் அடையாளமாக, ரகசிய வாக்கெடுப்பு நடந்த வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் வெண்ணிற புகை வெளியேற்றப்பட்டது.

வெண்ணிற புகை வெளியேற்றப்பட்ட சில மணிநேரங்களிலேயே, புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காம் லியோ மக்கள் முன் தோன்றினார். க டந்த ஆண்டு ஜனவரி மாதம், இவரை கார்டினலாக நியமித்தார் அப்போது போப்பாக இருந்த போப் பிரான்சிஸ். போப் பதினான்காம் லியோவுக்கு காலநிலை மற்றும் சேவை இரு கண்கள். போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியே வந்து மக்களிடம் உரையாற்றிய போப் லியோவின் முதல் பேச்சின் மையம் 'அமைதி'யைச் சுற்றியே இருந்தது. 



Wednesday May 7, 2025

மூன்று நாள் போர் நிறுத்தத்தை நிராகரித்த ஜெலன்ஸ்கி 


இரண்டாம் உலகப் போரில்  ரஷ்யா ஜெர்மெனியிடம் வெற்றி பெற்றதன் ௮௦வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் இம்மாதம் 9ம் தேதி மாஸ்கோவில் நடை பெற உள்ளது.  இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு உக்ரைன் மீது வரும் 8, 9, மற்றும் 10ம் தேதி  ஆகிய  மூன்று நாட்கள்  போர் நிறுத்தத்தை  ரஷ்ய அதிபர் பூட்டின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மூன்று நாள் போர் நிறுத்தம் வெறும் கண் துடைப்பு  என்று கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி . இந்த போர் நிறுத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை என்றும் 80 வது  ஆண்டு வெற்றி விழாவில்  கலந்து கொள்ளும் உலகத்த தலைவர்களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் 3ம் தேதி சனிக்கிழமை தெரிவித்தார்  


Tuesday May 6, 2025

லண்டனில் தொடங்கிய ஐரோப்பா வெற்றி தின  80வது ஆண்டு  விழா


 1945ம் ஆண்டு மே 8ம் தேதி இரண்டாம் உலகப்போர் இறுதியில் நாஜி படைகள்  பிரிட்டன் உள்ளிட்ட  நேச படைகளுடன் சரணடைந்ததைக் கொண்டாடும் எண்பதாவது  ஆண்டு விழா லண்டனில் கோலாகலமாகத் தொடங்கியது. அதன் அடையாளமாக லண்டனின் பிக் பெண் கடிகாரம் ஒலி  எழுப்பியது. இதை அடுத்து அமைதிக்கான  சுடருடன்  வைட் ஹால் சதுக்கத்தில் இருந்து   ராணுவ அணி வகுப்பு தொடங்கியது. 

 தேசிய கீதம் ஒலித்ததும் 23 விமானங்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்தின


Monday May 5, 2025

தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தை கிளினிக்குக்காகப் பயன்படுத்த அர்ப்பணித்த போப் பிரான்சிஸ் 


மறைந்த போப் பிரான்சிஸ் தான் உபயோகித்த நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் கொண்ட நடமாடும் கிளினிக்குக்காக பயன்படுத்தக் கேட்டுக்கொண்டுள்ளார். காஸாவில் நடந்துவரும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரகள் தங்கி இருக்கும் இடத்திற்கே இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்றும் இதுவே அவரது கடைசி ஆசையாக இருந்தது என்றும் செய்தி வெளியாகி உள்ளது 


Sunday May 4, 2025

வாரன் பஃபெட் ஒய்வு பெறுவதாக அறிவிப்பு 


உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்  பெர்க்க்ஷயர் ஹாத்தவே (BerkshireHathaway )  தலைமை   நிர்வாகப் பதவியிலிருந்து ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். வாரன் பஃபெட்  பங்குச் சந்தையில் அதிகம் சம்பாதித்ததோடு , தனது பங்குச்   சந்தை அனுபவத்தை மற்ற முதலீட்டாளர்களுக்குக்  கற்றுக் கொடுத்தவர். பெர்க்க்ஷயர் ஹாத்தவே நிறுவனத்தின் ஆண்டு இறுதிக் கூட்டத்தில்  பேசிய 94 வயதான  வாரன் பஃபெட் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 



Saturday May 3, 2025

உக்ரைன்  போர் உடனடியாக முடிவுக்கு வராது - JDவான்ஸ் பேட்டி


உக்ரைன்-ரஷ்யா  இடையிலான போர்  உடனடியாக  முடிவுக்கு வராது என்று JDவான்ஸ்  ஃபாக்ஸ் நியூஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். போரை நிறுத்த இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பொதுப் புள்ளியை அடைய அமெரிக்கா  முயற்சி செய்து வருகிறது , இருந்தாலும் இந்தப் போர் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வராது. இந்தக் கொடூரமான போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் எப்போது எட்டுகின்றன என்பதை  பொறுத்துதான் இருக்கிறது என அந்தப் பேட்டியில் வான்ஸ் தெரிவித்துள்ளார். 



Friday May 2, 2025

வட கொரியா-ரஷ்யா இடையே பாலம் கட்டும் பணி தொடக்கம்


வட கொரியா - ரஷ்யா நாடுகளுக்கிடையில் டுமென் (Tumen River) என்னும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பாலம் கட்ட இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்தன.  இதை அடுத்து புதியபாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்தப் பாலம் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டி முடிந்தபின், வட  கொரியா, ரஷ்யா இடையிலான போக்குவரத்து,  சுற்றுலா,  பொருட் போக்குவரத்து ஆகியவை அதிகரிக்கும் என்றும், இது ஒரு வரலாற்றுச் சின்னமாக இருக்கும் என்றும் இரு நாட்டுப் பிரதமர்களும் கூறியுள்ளனர். 


Thursday May 1, 2025

கன்னியகுமாரியில் கடல் நடுவே உள்ள பாலத்தைக்கான அதிகரிக்கும் கூட்டம் 


கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர்  பாறைக்கும் , திருவள்ளுவர் சிலை உள்ள பாலத்திற்கும் இடையே கண்ணாடியால் ஆன நடை பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் கண்ணாடி பாலத்தில் நடந்து கொண்டே கீழே தெரியும் கடலைப் பார்க்க முடியும்  என்பதால் இந்தப் பாலத்தைப் பார்வையிட வரும்  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தக் கண்ணாடிப் பாலத்திற்கு கடந்த  ஏப்ரல் 21ம் தேதியிலிருந்து  மே 1ம் தேதி வரையிலான  11நாட்களில்  ஒரு  லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக பூம்புஹார் கப்பல் போக்குவரத்துக் கழகம்  தெரிவித்துள்ளது 


Wednesday April 30, 2025

இத்தாலி கார்டினல்  பியேட்ரோ பரோலின் அடுத்த போப்பாக வாய்ப்பு 


போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து  அடுத்த போப்பாண்டவரைத் தேர்வு செய்வதற்கான கர்தினால்களின்  மாநாடு மே மாதம் 7ம்  தேதி நடத்தப்படுகிறது.  உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில்  80 வயதுக்கு உட்பட்ட  135 பேர் மட்டுமே புதிய போப்பை தேர்ந்தெடுக்க தகுதி உடையவர்கள் ஆவர். தற்போது போப்பாண்டவருக்கான தேர்தலில் இத்தாலி, பிலிபைன்ஸ் ,  ஹங்கேரி  ஆப்பிரிக்காவின் கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கர்தினாலாகள்   முன்னிலை  வகிப்பதாக கூறப்படுகிறது. இதில் இத்தாலி கர்தினால் பியேட்ரோ பரோலின் 41 சதவீத ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகவும் அடுத்தபடியாக பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் அன்டோனியோ டாக்லே 29 சதவீத ஆதரவுடன்இரண்டாவது இடத்தில இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. 


Sunday April 27, 2025

எந்த நிபந்தனையும் இல்லாமல் உக்ரேனுடன் பேசத் தயார் - பூட்டின் அறிவிப்பு 


 ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் டிரம்ப்பின் தூதராக செயல் பட்டு வரும்  விப்காட் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் பூட்டினை சந்தித்துப் பேசினார்.  இந்நிலையில் விப்காட்டிடம் உக்ரேனுடன் எந்த நிபந்தனையும் இன்றி பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக பூட்டின் கூறியுள்ளார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார். 


Saturday April 26, 2025

போப் பிரான்சிஸ் உடல் புனித மேரி மேஜர் தேவாலயத்தில் நல்லடக்கம் 


கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப்  பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய சதுக்கத்தில் வைக்கப் பட்டிருந்தது. கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான மூன்று நாட்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவ்ரதுஉடலுக்கு சுமார் இரண்டரை  லட்சம்  மக்கள் அஞ்சலி செலுத்தியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்திலிருந்து  போப் பிரான்சிசின் உடல் 26ம் தேத்தி சனிக்கிழமை ஊர்வலமாக புனித மேரி மேஜர் தேவாலயத்திற்கு    

 எடுத்துச் செல்லப் பட்டு  நல்லடக்கம்  செய்யப்பட்டது.  இறுதிச் சடங்கில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு,  பிரான்ஸ் அதிபர் மேக்கரான்,  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவர்கள் உட்பட  150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


Friday April 25, 2025

நிதானத்தைக்  கடை  பிடிக்க  இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரை 


ஜம்மு காஷ்மீரின்  முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில்  கடந்த 22ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டைத்   தொடர்ந்து   இந்தியா பாக்கிஸ்தானிடயே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள பதட்டமான சூழ்நிலை கவலை அளிப்பதாகவும்  நிலைமை மேலும் மோசம் அடைவதத் தவிர்க்க  இரு நாடுகளும் அதிக பட்ச நிதானத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்றும்   ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.   மேலும் இந்த தாக்குதலுக்குக் கண்டனம்  தெரிவித்துள்ள  ஐ.நா.  செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன்,  நிலைமை மோசமடையாமல் இருக்க இரு நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  



Thursday April 24, 2025

 போப்பிரான்சிஸ் இறுதிச் சடங்கு அன்று துக்கம் அனுசரிக்கப்படும் - இந்தியா  அறிவிப்பு 


கத்தோலிக்கத் த்திருச்சபையின் தலைவராக இருந்த  போப் பிரான்சிஸ் கடந்த   21ம் தேதி சனிக்கிழமை காலமானார்.  போப் பிரான்சிசின் இறுதிச் சடங்கு 26ம் தேதி சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. போப் பிரான்சிசின் இறுதிச் சடங்கு நடைபெறும் 26ம் தேதி சனிக்கிழமை இந்தியாவில் மத்திய அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நடைபெறும் 26ம் தேதி  இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்  

கம்பத்தில் பறக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 


Wednesday April 23, 2025

உலக புத்தக தினம் 


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் தேதி   உலக புத்தக தினம்  கடை பிடிக்கப் படுகிறது.  உலக புத்தக தினத்தை முன்னிட்டு  தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம்  என அனைத்தையும் நமக்கு அறிமுகப் படுத்தும் நல்ல நண்பன்தான்  புத்தகங்கள்.  புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும். உலகத்தேயே புத்தகமாய்ப்  படித்தால்  அனுபவம் தழைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.  


Tuesday April 22, 2025

உக்ரைனுடன் அமைதிப்பேச்சு வார்தைக்குத் தயார்  - ரஷ்ய அதிபர் அறிவிப்பு 


ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஏறக்குறைய 3 ஆண்டுகள் நடந்து வரும் நிலையில் , அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாட்டுத் தலைவர்களிடமும் போர் நிறுத்தம் தொடர்பாகப்  பேச்சு வார்த்தை நடத்தினார்.  அதன் பிறகும் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன்அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் பூட்டின் தெரிவித்துள்ளார்.  மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்யா முன் வந்துள்ளது என்றாலும் இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 


Monday April 21, 2025

போப் பிரான்சிஸ் காலமானார் 


கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்  21ம் தேதி திங்கட்கிழமை  காலமானார். 88 வயதான  போப் பிரான்சிஸ் அண்மையில் உடல் நலக்குறைவால் ரோம் நகரில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 38நாட்கள் மருத்துவமனையில்  சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ்கடந்த மார்ச் 23ம் தேதி  மமருத்துவமனையில் இருந்து   வாடிகன் திரும்பினார்.   போப் பிரான்சிஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 20ம் தேதி  ஞாற்றுக்கிழமை மக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.  இந்நிலையில் 21ம் தேதி  திங்கட்கிழமை காலை 7.35 மணியளவில்  போப் பிரான்சிஸ் காலமானார்  என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி  உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Sunday April 20, 2025

காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் - போப் பிரான்சிஸ் ஈஸ்டர் செய்தி 


போப் பிரான்சிஸ் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி மக்களை நேரடியாக சந்தித்தார். அப்போது புனித பேதுரு தேவாலயத்திலிருந்து மக்களைப்  பார்த்து கையசைத்தவாறு ஈஸ்ட்டர் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது உரையாற்றிய  போப் பிரான்சிஸ் காசா நிலைமை பரிதாபகரமானது என்றும், அங்கு பசியால் வாடும்மக்களுக்கு  உதவ  நாம்  முன் வர வேண்டும் என்றும், அங்கு துன்பப்படும் மக்களுடன் தனது  எண்ணங்கள் இருக்கிறது என்றும்  கூறினார். மேலும்  காசாவில்   உடனடிப் போர் நிறுத்தம் வேண்டும் என்றும்  பிணைக் கைதிகள் விடுவிக்கப் பட வேண்டும் என்றும் போப்  பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். 


Saturday April 19, 2025

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன்  மீது தாக்குதலை நிறுத்திய ரஷ்யா 


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன்  மீதான   தாக்குதலை 24மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் பூட்டின்  அறிவித்துள்ளார். இது குறித்து பூட்டின் பிறப்பித்துள்ள உத்தரவில் ஈஸ்ட்டரை ஒட்டி19ம் தேதி  சனிக்கிழமை  இரவு முதல் ௨௦ம் தேதி ஞாயிறு இரவு  வரை    உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தி வைக்கபப்டுவதாகவும் , இதையே உக்ரைனும் பின்பற்றும் என்றும்  அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.



Friday April 18, 2025

ரஷ்ய உக்ரைன்  போர் நிறுத்தம் ஏற்படவில்லையென்றால்  அமைதி முயற்சி கை விடப்படும்  - அமெரிக்கா எச்சரிக்கை 


ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு மேல்  நடந்து வரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக  அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு அதிபர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்.  எனினும் இரு நாடுகளுக்குஇடையே தாக்குதல் நடந்துவருகிறது.  சவுதி அரேபியாவில் நடந்த பேச்சு வார்த்தையின் படி 30 நாட்கள் இடைக் கால போர் நிறுத்தமும் ஏற்படவில்லை. இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றால் அமைதி முயற்சியை அமெரிக்கா கைவிடும் என்று  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். 


Thursday April 17. 2025

வெளிநாடுகள் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின்   எண்ணிக்கை சரிவு 


அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து உயர்கல்வி பயில்வதற்காகச்  செல்லும்    இந்திய மாணவர்களின்   எண்ணிக்கை  கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் அமெரிக்காவிற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 34%  குறைந்துள்ளது.  பிரிட்டன் சென்று பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை  1.2 லட்சத்திலிருந்து 80000ஆகவும் , கனடா சென்று கற்போரின் எண்ணிக்கை 2.78 லட்சத்திலிருந்து 1.89 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.  இதற்கு அந்த நாடுகளின் அனுமதி மற்றும் விசா கட்டுப்பாடுகள் தான் காரணம் என தெரிவிக்க  ப்பட்டுள்ளது 


Wednesday April 16, 2025

லண்டனில் சூடான் நாட்டு நிவாரண உதவிக்காக நடந்த மாநாடு 


ஆப்பிரிக்க நாடான சூடானில்  அந்நாட்டு ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கி  இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி லண்டனில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.  சூடான் உள்நாட்டுப் போரில் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள அந்நாட்டு  மக்களுக்கு  நிவாரண உதவிகள் வழங்குவதற்காக நடத்தப்பட்ட இந்த ஒரு நாள் மாநாட்டில் பிரிட்டன்,  ஜெர்மனி,  பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் , ஆப்ரிக்க யூனியன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   சூடானின் இந்தப் போரால்  மிகப் பெரிய மனிதப் பேரழிவு நடப்பதற்கு முன்  அந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதை  உறுதி செய்ய வேண்டும் என்று மாநாட்டுக்கு முன்னதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட்  லாமி கூறினார். 



Tuesday April 15, 2025

ரோம் நகரில் அமெரிக்கா - ஈரான் இடையிலான அடுத்த கட்டப்பேச்சு வார்த்தை 


ஈரானின் அணுசக்தி  திட்டங்கள் தொடர்பான  அடுத்த கட்டப்பேச்சு வார்த்தைக்காக இரு தரப்பினரையும்  வரவேற்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்  எனஅமெரிக்க வெளியுறவுத் த்துறை அமைச்சர் அண்டானியோ  14ம் தேதி திங்கட்கிழமை தெரிவித்தார்.  மேலும் அவர் கூறும்போது எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சு வாரத்தை சிறந்த பலனைத் தரும்  என்றும் கூறினார். இந்தப் பேச்சு வார்த்தை ரோம் நகரில் வரும் சனிக்கிழமை நடை பெறும் என இத்தாலி தெரிவித்துள்ளதாக  செய்திகள் கூறுகின்றன. 


Monday April 14, 2025

இந்தியாவில் டிஜிட்டல் கல்வி அறிவில் கேரளா முதலிடம் 


டிஜிட்டல் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த கிராமின் டிஜிட்டல்  சாக்க்ஷர்தா அபியான் அபியான் என்ற திட்டத்தை கேரளா அரசு டிஜி  கேரளா என்ற  பெயரில் நடை முறைப் படுத்தி வருகிறது.  இதன் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வாய்ஸ் கால், வீடியோ கால் பேசுவது , டிஜிட்டல் வழியாக அரசுத் திரட்டங்களைத்  தெரிந்து  கொள்ளுதல், வங்கி சேவைகள் ஆகியவை குறித்து மூத்த குடி மக்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இந்தத்  திட்டம் மூலம் இதுவரை  21 லட்சத்திற்கும்   அதிகமானோர் டிஜிட்டல் கல்வி அறிவைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் அதிக டிஜிட்டல் கல்வி அறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக   கேரளா முதலிடம்  பிடித்துள்ளது.  

 



Sunday  April 13, 2025

இந்தியாவிலிருந்து ஒரே ஆண்டில் 55  லட்சம் பேர் சிங்கப்பூர் பயணம் செய்து சாதனை 


இந்தியா  சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா உட்பட பல விமானங்கள் இயக்கப் படுகின்றன. அதுபோல் சிங்கப்பூர்  ஷானி (changi ) விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் டெல்லி, மும்பை, பெங்களுரு உட்பட 16  நகரங்களுக்கு ஒவ்வொரு வாரமும்  280  விமானங்கள்    வரை வந்து செல்கின்றன.  கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் இந்திய சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்ட விமானங்களில்  55  லட்சம் பேர் பயணித்து வரலாறு படைத்துள்ளதாக சிங்கப்பூர் ஷானி  விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. 



Saturday April 12, 2025

உலகின்  மிக உயரமான பாலம் -சைனாவில் திறப்பு    


சீனாவில் கட்டப்பட்டு வரும் உலகின்  மிக உயரமான பலமான  ஹுவாஜியாங்  க்ராண்ட் கேன்யன் க்ராண்ட் என்ற பாலத்தின் உயரம் 1854 அடியாகும். இது ஐபில்  டவர் உயரத்தை விட 200  மீட்டர் அதிகம்  உயரம் கொண்டதாகும். இந்தப் பாலத்தின் வழியாகப்  பயணம்  செய்வதால்    ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டியிருக்கும்   தூரத்தை  ஒரு நிமிடத்தில் கடக்கலாம் என  தெரிவிக்கப் பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ள இந்தப் பாலம்  சைனாவின்  கிராமப்புற பகுதிகளில்  முக்கியமான போக்குவரத்துக்கு இணைப்புகளை வழங்குகிறது . இரண்டு மைல் நீளத்திற்கு ஒரு பள்ளத்தாக்கின் குறுக்கே  கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம்  ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் என கூறப் படுகிறது. 


Friday April 11, 2025

ஐ.பி.எல். கிரிகெட்டில் கொல்கத்தா அணி வெற்றி 


ஐ.பி.எல். கிரிகெட் தொடரில் 11ம் தேதி சென்னையில் நடந்த ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  முதலில் விளையாடிய  சென்னை அணி 20  ஓவர்களில் 9   விக்கெட் இழப்பிற்கு  103  ரன்கள் எடுத்தது. 104  ரன்கள் இலக்குடன் அடுத்து விளையாடிய  கொல்கத்தா  அணி  10.1 ஓவர்களில் ௨ விக்கெட் இழப்பிற்கு  107  ரன்கள்  எடுத்து 8  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


Thursday April 10, 2025

வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு


அதிபர் டொனால்டு டிரம்ப்  கடந்த 2ம் தேதி  பிற நாடுகளுக்குப்  பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். இதில் சீனப் பொருட்களுக்கு 34சதவீத கூடுதல் வரி விதத்ததால், சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு  34சதவீத வரி விதித்தது. இதை ரத்து செய்ய டிரம்ப்  கேட்டிருந்த நிலையில்    சீனா மறுத்ததால் சீனப் பொருட்களுக்கு   104  சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.  இதனால் சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு    34 சதவீத வரியை 84 சதவீதமாக அதிகரித்தது . இதற்குப் பதிலடியாக அமெரிக்கா சீனாவிற்கான வரி  விதிப்பை 124 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்றத்தன்மை உண்டாகும் என்பதால்  வரி விதிப்பை 90  நாட்களுக்கு தற்காலிகமாக  நிறுத்தி வைப்பதாகவும் சீனாவுக்கு மட்டும் விதி விலக்கு என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 


Wednesday April 8, 2025

பாலஸ்தீனர்களுக்கு  இந்தோனேசியாவில்  தற்காலிக  அடைக்கலம்  - அதிபர் பிரபவோ அறிவிப்பு 


இஸ்ரேல்  ஹமாஸ் இடையிலான போரில்   ஏராளமான மக்கள் உயிரிழந்ததோடு , லட்சக் கணக்கான மக்கள்  உறவுகளை இழந்தும், அடிப்படை உதவிகள் இல்லாமலும்  தவித்து வருகின்றனர். 

இவ்வாறு  பாதிக்கப் பட பால்ஸாதீன மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் வழங்குவதாக  இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.   மேலும் அவர் பாதிக்கப் பட்ட  பால்ஸாதீன மக்கள்   சிரும்பினால் காசாவிலிருந்து அவர்களை அழைத்து வர விமானங்களை அனுப்ப  திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


Tuesday April 8, 2025

ஐ.பி.எல்.கிரிக்கெட் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி 


ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில்  பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் 8ம் தேதி   செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ்    மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.  முதலில் விளையாடிய பஞ்சாப் அணி  20 ஓவர்களில் ஆறு விக்கெட்  இழப்பிற்கு  219  ரன்கள் எடுத்தது.  அடுத்து விளையாடிய  சென்னை அணி  20 ஓவர்களில் 5 விக்கெட்  இழப்பிற்கு 201 ரன்கள்  மட்டுமே எடுத்ததால்  18  ரன்கள் வித்தியாசத்தில்  பஞ்சாப் அணி வெற்றி  பெற்றது. 


Monday April 7, 2025

14 நாடுகளின் விசாக்களுக்குத்  தாற்காலிகத் தடை விதித்த சவுதி அரேபியா 


இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், ஈராக், எகிப்து, இந்தோனேசியா, ஏமன், சூடான் உள்ளிட்ட 14  நாடுகளின் விசாக்களுக்குத்   சவுதி அரேபிய அரசு தாற்காலிகத் தடை விதித்துள்ளது.  இந்த ஆண்டிற்கான  ஹஜ் புனித யாத்திரை  வரும் ஜூன் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த சூழலில் ம்முறையாகப் பதிவு செய்யாமல்  ஹஜ் புனித யாத்திரை செல்லும் தனி நபர்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாகவும், விதிகளை மீறுவோர் மீது சவுதி அரேபியாவிற்கு வர ௫ ஆண்டுகள் தடை விதிக்கப் படும் என்றும் சவுதி  அரேபிய அரசு தெரிவித்துள்ளது.  



Sunday April 6, 2025

டிக் டாக் செயலிக்கு மேலும் 75 நாட்கள் அவகாசம் 


அமெரிக்காவில் டிக் டாக் செயலி பயன்பாட்டில்  இருந்து  வரும்   நிலையில் அந்த செயலியால் தேசிய  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப் பட்டதை அடுத்து  டிக் டாக்கிற்கு தடை விதிக்கப் பட்டது. மேலும் டிக் டாக்கின் பெரும்பான்மை பங்குகளை  அமெரிக்காவில்  விற்பனை செய்து டிக் டாக்கின் கட்டுப்பாட்டை அமெரிக்காவுக்கு மாற்ற பைட்டான்ஸ் நிறுவனத்திற்குக் கால அவகாசம்  வழங்கப்பட்டது. இந்த வகாசம் விரைவில்  முடிவடைவதை அடுத்து  , அமெரிக்காவின் நிபந்தனைகளை நிறைவேற்ற வழங்கப் பட்ட  கால அவகாசத்தை மேலும் 75  நாட்களுக்கு நீட்டிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.  


Saturday April 5, 2025

ஐ.பி.எல்.கிரிக்கெட் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி 


18 வது  ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் 5ம் தேதி சென்னையில் நடந்த  17வது  லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணியும் மோதின.  முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் ஆறு  விக்கெட் இழப்பிற்கு   183 ரன்கள் எடுத்தது.  அடுத்து விளையாடிய சென்னை அணி 20  ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25ரன்கள் வித்தியாசத்தில்  சென்னை அணி தோல்வி அடைந்தது. 


 5ம் தேதி சனிக்கிழமை   பஞ்சாப் கிங்ஸ் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிய மற்றொரு ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி  20 ஓவர்களில் நான்கு   விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.  அடுத்து விளையாடிய  பஞ்சாப் அணி  20 ஓவர்களில் 9  விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்ததால்  50  ரன்கள் வித்தியாசத்தில்   ராஜஸ்தான்  அணி வெற்றி பெற்றது. 



Friday April 4, 2025

ஐந்து ஆண்டுகளில் 297 கோடி ரூபாய் வருவாய்  ஈட்டிய தாஜ்மஹால் 


டிக்கெட் விற்பனை  மூலம் கடந்த 5 ஆண்டுகளில் தாஜ்மஹால்  297 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  டிக்கெட் விற்பனை மூலம்  அதிக வருவாய்  ஈட்டியுள்ள சுற்றுலாத் தலங்களில்கடந்த 5 ஆண்டுகளாக   தாஜ்மஹால்  முதலிடத்தில் உள்ளதாகக் கூறிய அமைச்சர்  தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக டெல்லியிலுள்ள குதுப்மினார் இரண்டாவது  இடத்திலும், டெல்லி செங்கோட்டை மூன்றாவது இடத்திலும் உள்ளதாகத்  தெரிவித்தார் 


Thursday April 3, 2025

ஐக்கிய அரபு அமீரகம் - இந்தியாஇடையே கடலுக்கு அடியில்  ரயில் சேவை தொடங்கத்  திட்டம் 


துபாய் மற்றும் இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரயில் சேவை தொடங்க  ஐக்கிய அரபு அமீரக தேசியா ஆலோசனைக் குழு  பரிசீலனை i   செய்வதாக செய்தி வெளியாகி உள்ளது.  இந்த ரயில் பாதையில் ஓடும் ரயில்கள் மணிக்கு 600 முதல் 1000  கிலோ மீட்டர் வேகம் வரை இயங்கும்  என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் துபாய் மும்பை இடையில் உள்ள  2000  கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்க முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த் திட்டம் 2030ம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. 


Wednesday April 2, 2025

தென் கொரியாவிற்கு ம்மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் வெளிநாட்டவர் அதிகரிப்பு  


தென் கொரியாவுக்கு  மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வெளிநாட்டவர்களின்  எண்ணிக்கை  கடந்த 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு  மூன்று மடங்கு  அதிகரித்திருப்பதாக தென் கொரிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தென் கொரியாவுக்கு  கடந்த 2009ம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டு வரை சுமார் 50  லட்சத்து    50,000  வெளி நாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளனர் என்றும்,  101733 அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சைக்காக   தென் கொரியாவுக்கு  என்றும் அந்நாட்டு  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tuesday April 1, 2025

விண்வெளியில் கால் பாதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு உதவுவேன் - சுனிதா வில்லியம்ஸ் 


விண்வெளி நிலையத்துலிருந்து கடந்த மார்ச் மாதம்19ம் தேதி பூமிக்கு வந்து சேர்ந்த  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 31ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சுனிதா வில்லியம்ஸ் கூறும்போது விண்வெளியிலிருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது என்றும், இரவு நேரங்களில்  பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிர்ந்தபடி இருக்கும் என்றும், தந்தையின் சொந்த நாடான இந்தியாவிற்கு சென்று மக்களை சந்திப்பேன்  என்றும்  கூறிய சுனிதா மேலும் கூறும் போது  விண்வெளியில் கால் பாதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு  நான் உதவுவேன் என்றும் தெரிவித்தார். 


Monday March 31, 2025

போரை முடிவுக்கு கொண்டு  வராவிட்டால் கூடுதல் வரி - ரஷ்யயாவுக்கு எச்சரிக்கை 


ரஷ்யா  உக்ரைன்  இடையிலான போரை முடிவுக்குக்  கொண்டு வர    ரஷ்ய அதிபர் பூட்டினுடனும்  உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனும் அதிபர்  டொனால்டு டிரம்ப்  பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்  படுத்தியுள்ளது. இதுபற்றி டிரம்ப் அளித்த பேட்டியில்,  உக்ரைனில் நடந்து வரும் போரை  நிறுத்த  ரஷ்யா மற்றும் என்னால் முடியவில்லை என்றால், ரஷ்யாவிலிருந்து வரும் அனைத்து எண்ணெய்களுக்கும் இரண்டாவது முறையாக வரி விதிக்கப் போகிறேன்  என  எச்சரித்துள்ளார்/



Sunday March 30, 2025

ஐ.பி.எல் கிரிக்கெட் - ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி 


18வது  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 30ம் தேதி நடந்த இரண்டு லீக் ஆட்டங்களில் விசாகப்பட்டினத்தில் ஹைதராபாத் டெல்லி அணிகளுக்கிடையில் நடந்த முதல்ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி  163ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய  டெல்லி அணி 16ஓவர்களில் 3  விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து  7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  


Saturday March 29, 2025

X  வலைத்தளத்தைத் தனது  சொந்த நிறுவனத்திற்கு விற்பனைனை செய்த  இலான்  மஸ்க் 


உலகின்  பிரபல சமூக   வலைத்தளமாக இருந்த ட்விட்டரை  இலான்  மஸ்க்  கடந்த 2022ம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.  பிறகு அதன் பெயரை X என்று மாற்றிய மஸ்க்  பல அதிரடி மாற்றங்களை செய்தார்.  இந்நிலையில் மஸ்க் தனது  X   வலைத்தளத்தை   தனது சொந்த நிறுவனமான  X AIநிறுவனத்திற்கு 33 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து  இலான்  மஸ்க்  கூறும்போது  இதன் மூலம் தரவு மாதிரிகள்    , கணினி, திறமியா மற்றும் விநியோகம் ஆகியவற்றை இணைக்க  நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினார். 


Thursday March 27, 2025

இசை ஞானி இளையராஜாவுக்குப் பாராட்டு விழா 


இசை ஞானி இளையராஜா கடந்த  8ம் தேதி சனிக்கிழமை லண்டனில் உள்ள ஈவென்ட்  அப்பல்லோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இந்நிலையில்  லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றியதற்காகவும் அவரது 50 ஆண்டுகால  இசைப் பயணத்தைக்  கொண்டாடும் வகையிலும் இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில்  அவருக்குப்  பாராட்டு விழா நடத்தப்படும் என்று  தமிழக முதல்வர்  ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை அறிவித்தார் 


Tuesday March 25, 2025

ஐ.பி.எல். கிரிக்கெட் குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி 


18வது  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 25ம் தேதி குஜராத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும்,  பஞ்சாப்  கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு   243ரன்கள் எடுத்தது 244ரன்கள் இலக்குடன் அடுத்து விளையாடிய  குஜராத் அணி 20  ஓவர்களில்   ஐந்து விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்ததால்  11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி  பெற்றது.


Monday March 24, 2025

கனடாவில் ஏப்ரல் 28ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் 


கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி முன்கூட்டியே கனடா நாடாளுமன்றத் தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.  நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் வரை  இருக்கும்  நிலையில்   ஏப்ரல் 28ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்த மார்க் கார்னி உத்தரவிட்டுள்ளார்.  கனடாவில் உள்ள 343 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடத்தப்பட உள்ள இந்தத் தேர்தலில் 172  தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் 


Sunday March 23, 2025

ஐ.பி.எல் கிரிக்கெட் ஹைதராபாத் அணி 286  ரன்கள் குவித்து வெற்றி 


இந்தியாவில் நடந்து வரும் 18வது   ஐ.பி.எல்  கிரிக்கெட்  போட்டியில் 23ம் தேதி ஞாயிறு  ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்  ஹைதராபாத்  அணியும் ராஜஸ்தான்  ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20  ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 286  ரன்கள் குவித்தது. அடுத்து 287 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20  ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 242  ரன்கள் மட்டுமே எடுத்ததால் 44  ரன்கள் வித்தியாசத்தில்  ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 



 23ம் தேதி சென்னையில் நடந்த மற்றொரு போட்டியில்  சென்னை அணியும் மும்பை அணியும் மோதின.  முதலில் விளையாடிய  மும்பை அணி 20  ஓவர்களில் 9 விக்கெட்  இழப்பிற்கு 155  ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து விளையாடிய சென்னை அணி ௧19.1  ஓவர்களில்  ஆறு விக்கெட் இழப்பிற்கு 158  ரன்கள் ஏடுத்து நான்கு விக்கெட்  வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.


Friday March,21, 2025

அமெரிக்காவில் மத்திய கல்வித் துறை கலைப்பு-மாகாணங்களுக்கு முழு அதிகாரம்  


அமெரிக்காவில் கல்வித்தரம் மேம்படாததால்  1979ம் ஆண்டு உருவாக்கப்பட்ட  மத்தியக்கல்வித் துறையைக்  கலைக்கும்  உத்தரவில்  அதிபர் டொனால்டு டிரம்ப் 20ம் தேதி வியாழக்கிழமை கையெழுத்திட்டார் . இதன் மூலம் கல்வித் துறையின் முழு அதிகாரமும்  இனி  மாகாணங்களுக்கு வழங்கப் பட உள்ளது என்றும் , இந்த உத்தரவு அமெரிக்காவின் கூட்டாட்சிக் கல்வித் துறையை நிரந்தமாக  நீக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கல்வித்துறையை மூடுவதற்கும்  , கல்வி  அதிகாரத்தை  மாகாணங்களுக்கு வழங்குவதற்கும்  தேவையான நடவடிக்கைகளை எடுக்க கல்வித் துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை வலியுறுத்தும் வகையில்  இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 



Thursday March 20, 2025

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு 


சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மார்ச் 20ம் தேதி  ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழக நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் 2025ம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்   பட்டியலை வெளியிட்டுள்ளது. 147நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தர ஆய்வுகளின் படி   உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பைந்ல்லாண்டு முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும், சுவீடன் ,நெதர்லாந்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.  இந்தப் பட்டியலில் அமெரிக்கா 24வது இடத்திலும், இந்தியா 118வது இடத்திலும் உள்ளன. 


Wednesday March 19, 2025

விண்வெளியிலியிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார். 


சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏறக்குறைய 9 மாதங்களாக இருந்த நாசா விண்வெளி வீராங்கனைசுனிதா வில்லியம்ஸ்,  புட்ச் வில்மோர் இருவரையும் பூமிக்கு அழைத்து வர 15ம் தேதி பால்க்கன்  ராக்கெட் ௯டிராகன் விண்கலத்ததுடன் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் 16ம் தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஆகியோர் இந்த டிராகன் விண்கலத்த்தில் 17ம் தேதி பூமிக்குப் புறப்பட்டனர். இந்த விண்கலம் 18ம் தேதி புளோரிடா மாநிலம் தலஹாசி அருகே கடலில் தரை இறங்கியது. அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 


Tuesday  March 18, 2025

உங்களை வரவேற்பதில் இந்தியா மகிழ்ச்சி - சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி  கடிதம்


பூமியில்  தரை இறங்கப்போகும்  சுனிதா வில்லியம்ஸுக்குப்  பிரதமர் மோடி  எழுதியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது,  நான் இந்திய மக்கள் சார்பில் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன் . உங்கள் சாதனைகளால் 140 கோடி இந்தியர்களும் பெருமை கொள்கின்றனர்.  உங்கள் உடல் நாளத்திற்காகவும், பயணம் வெற்றி அடையவும்  இந்திய மக்கள் பிரார்த்தனை செயகின்றனர்.  நீங்கள் பூமிக்குத் திரும்பியதும் இந்தியாவுக்கு வருவீர்கள் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம். மிகவும் பெருமைக்குரிய மகள் ஒருவரைத் தங்கள்  நாட்டுக்கு வரவேற்பதில்  இந்தியா மகிழ்ச்சி அடைகிறது, நீங்களும் வில்மோரும் பத்திரமாக பூமியை வந்தடைய வாழ்த்துக்கள்  . இவ்வாறு அந்த கடிதத்ததில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


Monday March 17, 2025

போப்  பிரான்சிஸ் புகைப்படத்தை வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்  


போப்  பிரான்சிஸ் உடல் நலம் குன்றியதையடுத்து கடந்த பெப்ரவரி 14ம் தேதி  ரோம் நகர்  ஜெமெல்லி (Gemelli) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மருத்துவக்  கண்காணிப்பில் இருந்து வரும் போப்  பிரான்சிசின் புகைப்படத்தை   வாடிகன் நிர்வாகம்   வெளியிட்டுள்ளது. இதில்  போப்  பிரான்சிஸ் ஊதா நிற உடையுடன்  பலிபீடத்தின் முன்  சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதைப்  பார்க்க முடிகிறது.  இந்தப்   புகைப்படத்தை வெளியிட்டுள்ள  வாடிகன் நிர்வாகம்,  போப்  பிரான்சிஸ் ஜெமெல்லி (Gemelli) மருத்துவமனையில் சக பாதிரியார்களுடன்  திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவருடைய உடல் நலம் தற்போது முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.  


Sunday March 16, 2025

நியூசிலாந்து  பிரதமர் இந்தியா வந்தார்   


நியூசிலாந்து  பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஐந்து நாள் அரசு முறைப்  பயணமாக   இந்தியா இன்று வந்தார். அவருடன் உயர் மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். இந்தியா வந்துள்ள  கிறிஸ்டோபர் லக்சன்  பிரதமர் மோடியை சந்தித்துப்பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிசடையே  பொருளாதார ஒத்துலுழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து  17ம் தேதி திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் கிறிஸ்டோபர் லக்சன் சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 


Saturday March 15, 2025

அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் பயணிக்கும் - இலான் மஸ்க் அறிவிப்பு


இலான்  மஸ்க்கிற்கு   சொந்தமான ஸ்பேஸ் ஸ்நிறுவனத்தின் ஸ்டர்ஷிப்  ராக்கெட் 2026ம் ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்குப்  பயணிக்கும் என இலான்  மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் ராக்கெட்டுடன்  மனித ரோபோவும் சேர்த்து அனுப்பப் பட உள்ளது என்றும், 2029ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தரை  இறங்கலாம் என்றும்  இது 2031ம் ஆண்டிற்குள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 



Friday March 14, 2025

சிரியாவின் மின் உற்பத்திக்காக இயற்கை  எரிவாயு வழங்கும் கத்தார்


சிரியா நாட்டின் மின்சாரத் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய கத்தார் நாட்டிலிருந்து நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு வழங்க  ஒப்பந்தம் கையெழுத்தாகி உளதாக செய்தி வெளியாகி உள்ளது.  கத்தார்  நாட்டிலிருந்து சிரியாவிற்கு வழங்கப்படும்  இந்த இயற்கை எரிவாயுவின் மூலம் ஒரு நாளைக்கு 400 மெகா வாட்ஸ் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்று சிரியா நாட்டு மின்துறை அமைச்சர் ஒமர் தெரிவித்துள்ளார். 


Thursday March 13, 2025

தாற்காலிகப் போர் நிறுத்திற்குத் தயார் - ரஷ்ய அதிபர்  பூட்டின் அறிவிப்பு


ரஷ்யா-உக்ரைன் இடையிலான 30 நாள் போர் நிறுத்தப் பேச்சவார்த்தை 11ம்  தேதி செவ்வாய் க்கிழமை சவுதி அரேபியாவில் நடை பெற்றது. இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின்னர்  உக்ரைன்  அதிபர் ஜெலன்ஸ்கி  30 நாள் போர் நிறுத்த்திற்கு ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இந்தப் போர் நிறுத்தத்திற்கு  ஒப்புக் கொள்வதாக அறிவித்துள்ளார்ரஷ்ய அதிபர்  பூட்டின் . இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாகவும் , எந்த ஒரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான  அஸ்திவாரமாக இருக்க வேண்டும் என்றும் . பூட்டின் என்று கூறியுள்ளார். 


Wednesday March 12, 2025

பாட வாரியான உலகத் தர வரிசையில் இடம் பிடித்த இந்திய பல்கலைக் கழகங்கள்


உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களின் பாட வாரியான தர வரிசையை  Quacquarelli Symonds என்ற கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் 50பல்கலைக் கழகங்களில் 9 இந்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.   இதில் IIT டெல்லி , IIT மும்பை உட்பட 9 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. 


Tuesday March 11, 2025

ஏர்டெல் நிறுவனத்துடன் இலான்  மஸ்க்கின்  ஸ்டார் லிங்க்  நிறுவனம் ஒப்பந்தம் 


ஏர் டெல் நிறுவனம்  இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதி வேக இன்டர்நெட் சேவை கிடைப்பதற்காக இலான்  மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பைஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஸ்டார் லிங்க்  நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது,  இதன் மூலம் வணிக நுகர்வோர்களுக்கு  ஏர்டெல்  மூலம்  ஸ்டார் லிங்க் சேவை கிடைப்பதால் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை  இணைக்க எளிதாக இருக்கும் என்று ஏர்டெல்  கூறியுள்ளது. 



Monday March 10, 2025

கனடாவின் புதிய பிரதமர் ஆகும் மார்க் கார்னி  


கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ம் தேதி  தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவர் பதவியை ராஜினாமா செய்ததால் லிபெரல் கட்சியின் அடுத்ததலைவரை  தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் மார்க் கார்னி 131 ,674வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து லிபெரல் கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட மார்க் கார்னி  கனடாவின் அடுத்த பிரதமராகவும்  தேர்ந்தெடுக்கப்  பட்டுள்ளார். பிரதமராகத் தேர்வு செய்யப் ப்பட்டுள்ள மார்க் கார்னிகனடா வங்கியின் கவர்னராகவும், நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியவர் 



Sunday March 9, 2025

சாம்பியன் ட்ரோபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி 


துபாயில் 9ம் தேதி ஞாயிறுக்கிழமை நடந்த ஒன்பதாவது ICC சாம்பியன் ட்ரோபி கிரிக்கெட்  தொடரின் இறுதிப்  போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கிட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து 252  ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  49 ஓவர்களில் ஆறு விளக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள்  எடுத்து  சாம்பியன் ட்ரோபியை வென்றது. 


Saturday March 8, 2025

ரஷ்யா மீது அதிக வரி, பொருளாதாரத் தடை விதிக்கப்படும் 


ரஷ்யா உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர  அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு அதிபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.   இந்நிலையில் உக்ரைன் மீது   கடுமையானத் தாக்குதல்கள் நடத்தி   வரும் ரஷ்யாவிற்கு  பொருளாதாரத் தடை விதிக்கப் படும்  என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் போர்க்களத்தில்   உக்ரைனுக்கு எதிராகக் கடுமையாகத் தாக்குதல்களை நடத்தி   வரும் ரஷ்யாவிற்குமிகப் பெரிய  அளவிலான பொருளாதாரத் தடைகளையும், வரிகளையும் விதிக்க பரிசீலனை  செய்து வருகிறேன். போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதித் தீர்வுக்கான ஒப்பந்தம்  ஏற்படும்  வரை இந்தத் தடைகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 


Friday March 7, 2025

சவுதி அரேபியாவில் அடுத்தவாரம்  உக்ரைன் ரஷ்யா அதிகாரிகள்  போர் நிறுத்த பேச்சு வார்த்தை 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டு காலமாக நடந்து வரும் நிலையில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபருடனும்,   உக்ரைன் அதிபருடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார்.  இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான  போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்ய  அதிகாரிகள்  அடுத்தவாரம் சவுதி அரேபியாவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.


Thursday March 6, 2024

டெல்லியில் 3 நாட்கள் ரைசினா  மாநாடு 


இந்தியாவில் ஆண்டு தோறும் புவி அரசியல் குறித்து விவ்வ்திக்கப் படும் ரைசினா மாநாடு டெல்லியில் நடை பெற்று வருகிறது. அந்த  வகையில் இந்த ஆண்டு  டெல்லியில்  ரைசினா மாநாடு மார்ச் 17ம்  தேதி முதல்19ம் தேதி வரை மூன்று  நாட்கள் நடை பெறவிருக்கிறது.  நியூசிலாந்து  பிரதமர்   கிறிஸ்டோபர்  லக்சன்இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல ஐரோப்பிய நாட்டு அமைச்சர்களும், துருக்கி, லிதுவேனியா  ஸ்லோவேனியா நாட்டு அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து  கொள்கின்றனர். 


Wednesday March 5, 2025

அமெரிக்காவின் பொற்காலம்தொடங்கிவிட்டது - நாடளுமன்றத்தில் டிரம்ப் உரை


அமெரிக்க ஜனாதிபதியாக  நான் பொறுப்பேற்ற உடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நாடளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்ப் கூறினார். மேலும், கடந்த ஆறு வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையழுத்திட்டு  400க்கும்  மேற்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்றும், நாட்டின் மீதான படையெடுப்பைத் தடுக்க எல்லையில் ராணுவத்தையும்  , எல்லைப்   படையையும் நிறுத்தினேன் அதனால் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும், 4 அல்லது 8ஆண்டுகளில் செய்ததை  விட  43நாட்களில் நாம் அதிக சாதனை   செய்துள்ளோம் என்றும் கூறினார். 



Tuesday March 4, 2025

சாம்பியன் ட்ரோபி கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா 


சாம்பியன் ட்ரோபி கிரிக்கெட் தொடரில் 4ம் தேதி செவ்வாய்கிழமை  துபாயில் நடைபெற்ற  முதலாவது  அரை இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49 .3ஒவர்களில் ஆல் அவுட் ஆகி 264ரன்கள் எடுத்தது.  அடுத்து விளையாடிய இந்திய அணி 48 .1ஒவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 267  ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்  போட்டிக்குள் நுழைந்தது.



Monday March 3, 2025

ஆஸ்கர் விழாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுந்த குரல் 


லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற  2025ம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதுநோ அதர் லாண்ட்  (No Other Land) என்ற படத்திற்கு வழங்கப் பட்டது. இவ்விருதைப்  பெற்றுக்கொண்ட இந்தப் படத்தின் நான்கு இயக்குனர்களில் ஒருவரான பாலஸ்தீன  பத்திரிகையாளர்  பேஸல் அட்ரா (Basel Adra) பேசும்போது,  காசா போரை முடிவுக்குக்  கொண்டு வர வேண்டும்,  பாலஸ்தீன மக்களின் இன அழிப்பை நிறுத்த வேண்டும், இதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து  சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கூறினார்.  மேலும் படத்தின் மற்றொரு  இயக்குநரான ஆப்ரஹாம் கூறுகையில், இந்தப் படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியுள்ளோம். காரணம் இஸ்ரேல், பாலஸ்தீனமும் இணைந்து குரல் கொடுத்தால் அந்தக் குரல் வலுவானதாக இருக்கும் என்று கூறினார். 


Sunday March 2, 2025

அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக அறிவிப்பு  


அமெரிக்காவின் அதிகாரப்  பூர்வ  ஆட்சிமொழியாக ஆங்கிலம் என நிர்ணயித்துள்ள புதிய அரசாணையில் இன்று 2ம் ஞாற்றுக்கிழமை அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.  பெடரல்  அரசு நிர்வாகம், அரசிடம் நிதி  பெறும் அமைப்புகள், மற்றும் பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழி பெயர்ப்பு உதவிகளை வழங்க வேண்டும் என  90களில் முன்னாள் அதிபர் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவு இதன் மூலம் ரத்து செய்யயப்பட்டுள்ளது. இனி மொழி பெயர்ப்பு உதவி வழங்குவது அந்தந்த அமைப்புகளின் முடிவுக்கு  உட்பட்டது.  அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்றாலும்  வெள்ளை மாளிகை ஆவணங்களில் ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   



Saturday March 1, 2025

இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் - இந்திய வானிலை மையம் அறிவிப்பு 


இந்தியாவில் இந்த ஆண்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு  மையம்  தெரிவித்துள்ளது.  மார்ச் முதல் மே மாதம் வரை வட கிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள் மற்றும் தென் மேற்கு இந்திய பகுதிகளில்  கடந்த ஆண்டுகளை விட வெப்ப அலை அதிகமாக  வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 


Friday February 28, 2025

அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்த சந்திப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல்     வெளியேறிய ஜெலென்ஸ்கி 


அமெரிக்கா வந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி  வெள்ளை மாளிகையில் அதிபர்  டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.  போரின் போது உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த நிதி உதவிக்குப் பதிலாக, உக்ரைனில் உள்ள கனிமவளங்களை வெட்டியெடுக்கும் உரிமையை டிரம்ப் கேட்டிருந்தார். இது குறித்த ஒப்பந்தமிந்த சந்திப்பின் போது நடை பெறுவதாக இருந்த நிலையில் போரில் உக்ரைனுக்கு  உத்திரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையழுத்திடுவேன் என ஜெலென்ஸ்கி  தெரிவித்தார். இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.  இதனால் ஒப்பந்தத்தில் கையழுத்திடாமல்   ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.  இந்நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தாத தயார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 



அதிபர் டிரம்ப், ஜெலென்ஸ்கி  சந்திப்பு 


ரஷ்யா  உக்ரைன் இடையிலான போர் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் நடந்து வரும் நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு  வர  அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலெஸ்னகி அதிபர் டிரம்ப்பை  சந்திக்க உள்ளதாக அறிவிக்கபப்ட்டது. இந்நிலையில் இன்று  28ம்  தேதி வெள்ளிக்கிழமை அமெரிக்கா வந்த ஜெலன்ஸ்கி  வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்தார். அவரை டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.



சென்னை விமான நிலையத்தில் பத்து ரூபாய்க்கு  தேனீர் விற்பனை


சென்னை விமான நிலையத்தில் உதான் யாத்ரி கஃபே   என்னும்  பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் திறந்து வைத்தார். இந்த உணவகத்தில்     தேனீர் பத்து ரூபாய்க்கும் காபி ௨௦ ரூபாய்க்கும், தண்ணீர் பத்து ரூபாய்க்கும் விற்கப் படுகிறது. இந்த உதான் யாத்ரி கஃபே பயணிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது 



Thursday February 27, 2025

முதலீட்டாளர்களை ஈர்க்க5மில்லியன் டாலர் மதிப்பிலான கோல்ட் கார்டு அறிமுகம்- அதிபர் டிரம்ப் அறிவிப்பு


அமெரிக்காவில் புதிதாகக் குடியேறும்   முதலீட்டாளர்களுக்கு  விசாவுக்குப் பதிலாக 5மில்லியன் டாலர் மதிப்பிலான   கோல்ட் கார்டு எனப்படும் தங்க அட்டை விற்பனை செய்யப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் கூறும்போது இந்த தங்க அட்டையைப் பெறுபவர்கள் அமெரிக்கா வந்து தொழில் செய்வார்கள் , அதனால் நிறய வரி செலுத்துவார்கள், அதிக  தொழிலார்களை வேளைக்கு அமர்த்துவார்கள் . எனவே இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாக  அவர் கூறினார். 




Wednesday February 26, 2025

ரஷ்யா உக்ரைன் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது - அதிபர் டிரம்ப் அறிவிப்பு


அமெரிக்காவுக்கு வந்துள்ள  பிரான்ஸ்  அதிபர் இம்மானுவேல் மேக்கரான்    அதிபர் டொனால்டு டிரம்ப்பை  சந்தித்துப் பேசினார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ரஷ்யா உக்ரைன்  இடையிலான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட தாகவும், ஐரோப்பிய அமைதிப்  படையினரை உக்ரேனில் நிலை நிறுத்த  ரஷ்ய அதிபர் பூட்டின் சம்மதிப்பார் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.  மேலும்,  ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்   என்றும் டிரம்ப் கூறினார். 


Tuesday February 25, 2025

போப் பிரான்சிஸ் குணமடைய 4000 பேர் ஓன்று கூடி பிரார்த்தனை 


உடல் நல குறைவு காரணமாக போப் பிரான்சிஸ்  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இந்நிலையில் போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்  சதுக்கம் அருகே சுமார் 4000 பேர் ஓன்று  கூடி  பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனையின் போது மழை பெய்த நிலையிலும் மக்கள் குடைகளைப் பிடித்தவாறு  பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்தப்  பிரார்த்தனை  சுமார் 45  நிமிடங்கள் நடைபெற்றது. 



Wednesday February 12, 2025

ஆந்திராவில் பெண்கள் வீட்டிலிருந்தே ITபணி செய்யும் திட்டம் 


இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் பெண்களின் வேலை வாய்ப்புக்களை மேம்படுத்த , பெண்கள் வீட்டிலிருந்தே பணி செய்யும்  work from home திட்டத்தை புதிய IT கொள்கையில் செயல் படுத்த உள்ளதாக மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் Home Working Space எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும்  ITஅலுவலகங்கள் அமைக்கவும் , கிராமங்களில் வேலை வாய்ப்புக்களை உருவாக்க IT நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Tuesday February 26, 2025





Tuesday February 11, 2025

பிரேசிலில் 40கோடி ரூபாய்க்கு விற்பனையான இந்திய பசு  கின்னசில் பதிவு 


இந்தியாவின் நெலார்  இனப் பசு மாடுகள்  1868 ம்  ஆண்டு கப்பல் மூலம் பிரேசில் நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில்  1101  கிலோ எடை கொண்ட இந்த வகை பசு ஓன்று பிரேசில் நாட்டில் ஏலம் விடப் பட்ட போது 40 கோடி ரூபாய்க்கு  அது ஏலத்தில் எடுக்கப் பட்டது. அந்த வகையில் அதிக தொகைக்கு விற்பனையான கால்நடை என்று  

கின்னஸ் புத்தகத்தில் பதிவாகி உள்ளது.  வையாடினா எனப் பெயர் சூட்டப் பட்ட இந்தப் பசுவின் வயது சுமார் 53  மாதங்கள் ஆகும் 



Monday February 10, 2025

காஸாவின்   நெட்சரிம் (Netzarim பகுதியிலிருந்து இஸ்ரேல் படை வாபஸ் 


இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி  ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.  அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள ஏராளமான பாலஸ்தீன பிணைக் கைதிகளைவிடுவித்து  வருகிறது.  . போர் காரணமாக காசாவிலிருந்து இடம்   பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில் வடக்குக் காஸாவையும் தெற்குக்  

 காஸாவையும் இணைக்கும்  நெட்சரிம்  (Netzarimஎன்ற பகுதியிலிருந்து இஸ்ரேல்  தங்கள் படைகளை வாபஸ் பெற்றுள்ளது. 


Sunday February 9, 2025

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது ஒரு நாள் போட்டி - இந்தியா வெற்றி 


இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி  மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாடி  வருகிறது. இதில் முதலாவது நடந்த ஆட்டத்தில் இந்திய  அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி  ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49.5  ஓவர்களில் 304 ரன்கள் எடுத்து  ஆல் அவுட் ஆனது.  அடுத்து விளையாடிய இந்திய அணி 44.3  ஓவர்களில்  ஆறு விக்கெட் இழப்பிற்கு 308  ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்தத் தொடரில், இந்திய அணி இரண்டுக்குப் பூஜ்யம் என்ற கணக்கில்  தொடரைக்  கைப்பற்றியது 


Saturday  February 8, 2025

உக்ரேன் அதிபரை சநதிக்க உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு 


உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் உக்ரேன் அதிபர் ஜெலின்ஸ்கியை அடுத்த வாரம்  சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் தெரிவித்தார். 


Friday Feb

Monday Feb19, 2024

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் 


உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஹென்லி  பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டு வருகிறது.  இதில் பிரான்ஸ் முதல் இடத்தில உள்ளது.  ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் முலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப்  பயணம் செய்யலாம். பின்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 85வது இடத்தில உள்ளது. 



பிரிட்டனில் உக்ரேன் அகதிகளுக்கு  மேலும் 18 மாதங்கள் விசா நீட்டிப்பு 


கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷயா உக்ரேன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு லட்சத்து எண்பதினாயிரதுக்கும் அதிகமான  உக்ரேன் நாட்டினர் பிரிட்டனில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் அகதிகளாகத் தங்கியுள்ள உக்ரேன் நாட்டினருக்கு விசா மேலும் பதினெட்டு மாதங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது.  உக்ரேனில் தொடர்ந்து போர் நடந்து வருவதால் பிரிட்டனில் தங்கியுள்ள உக்ரேன் நாட்டவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விசா நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் குடியேற்றத்துறை அமைச்சர் டாம்  பெஸ்குரோ தெரிவித்தார்.




Sunday Feb 18, 2024

போர் நிறுத்தப் பேச்சுக்கு இடமில்லை  நேத்தன்யாஹூ 


 இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நடந்து வரும் நிலையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின்  

தலையீட்டில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ  கூறும்போது, பாலஸ்தீனத்தை ஒருதலைப் பட்சமாக அங்கீகரிப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கும்.  ஹமாஸுடன் போர் நிறுத்தப் பேச்சு வாரத்தை இல்லை, ஹமாஸ் அமைப்பினரின் கோரிக்கை ஏமாற்றும் வகையில் உள்ளது, அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று நேத்தன்யாஹு கூறினார்.


Saturday Feb 17, 2024

தமிழ்நாட்டில் பஞ்சு  மிட்டாய் விற்பனைக்குத் தடை 


தமிழ் நாடு முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடைவிதித்து தமிழ் நாடு  அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் ல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மிட்டாயில்  புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதால் தமிழகத்தில் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க உணவு பாதுகாப்புத் துறை  அதிகாரிகளுக்கு தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. 



Friday Feb.16, 2024

காசா எல்லையில் புதிய சுவர் எழுப்பும் எகிப்து 


இஸ்ரேல் காஸாவின் ரபா  பகுதியில் தனது இராணுவ நடவடிகைகளை விரிவு படுத்த உள்ள நிலையில் எகிப்து நாடு காஸாவின் எல்லையை ஒட்டிய தனது பிராந்தியப்  பகுதிகளில்சுவர் எழுப்பி வருவதை செயற்கைக் கோள்   வழியாக பெறப்படும் படங்களிலிருந்து   அஸோஸியேட் பிரெஸ் உறுதி செய்துள்ளது. சுவர் எழுப்பி வருவது குறித்து எகிப்து அதிகாரப்பூர்வமான எதையும் அறிவிக்கவில்லை 


Thursday Feb 15, 2024

புற்று நோய்க்கு எதிராக  விரைவில் தடுப்பூசி  - பூட்டின்  அறிவிப்பு 


உலகம் முழுதும் பல அமைப்புகள் புற்று நோய் தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் பூட்டின் மாஸ்கோவில் எதிர்காலத்  தொழில்  நுட்பம் குறித்து உரையாற்றிய போது, எங்கள் ஆரய்ச்சியாளர்கள் புற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள் என்றும் தனிப்பட்ட வகையில் அவை நோயாளிகளுக்குப்  பயன் படும் வகையில் பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என  நம்புகிறேன்  என்றும் கூறினார் 


மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்குப்  பாதுகாப்பு ஏற்பாடு 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ  ரயில் நிறுவனம் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட பிங்க் ஸ்குவார்ட என்ற பாதுகாப்பு சேவையை இன்று பிப்ரவரி 15ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்தக் குழுவில் முதற்கட்டமாக இருபத்தி மூன்று  பெண்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மெட்ரோ பயணிகள் அதிகமாகப் பயணிக்கும் ரயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 


பாலித்  தீவிற்கு சுற்றுலா செல்ல வரி - இந்தோனேசியா அறிவிப்பு 


இந்தோனேசியாவிற்கு சுற்றுலாப் பயணம் செல்பவர்களில் அதிக மக்கள் செல்லும் இடமாக பாலித்  தீவு திகழ்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர்  மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்  இங்கு  சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர் . இந்நிலையில் பாலித் தீவுக்கு சுற்றுலா வருபவர்கள் பத்து டாலர் சுற்றுலா வரி  கட்டவேண்டும் என்று இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிக்கப் படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது  


உலகின் பெரிய பொருளாதாரநாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை இழந்த ஜப்பான் 


உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா  இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது . அதேநேரத்தில் ஜெர்மனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது  



Wednesday Feb 14, 2024

இந்தியா  அமெரிக்கா இடையே சிறந்த இராணுவ உறவு - பென்டகன் தகவல் 


இந்திய இராணுவ தலைமைத்  தளபதி அமெரிக்க்காவுக்கு நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில் இரு நாடுகளின் இராணுவ உறவுகள் குறித்து பென்டகனின்  ஊடக துணை செயலாளர் கூறும்போது , நாங்கள் இந்தியாவுடன் சிறந்த இராணுவ ஊறவைக் கொண்டுள்ளோம் என்றும், நாங்கள் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கூறினார். இந்திய இராணுவ தலைமைத் தளபதி, அமெரிக்க இராணுவ தலைமைத்  தளபதியுடன் உயர் மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சாம்பல் புதன் - தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனை 


இயேசு சிலுவையில் அறையப் பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடை பிடிக்கப் படுகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப் படுகிறது. சாம்பல் புதனை முன்னிட்டு இன்று உலகெங்கினும் தேவாலங்களில் பிரார்த்தனை  நிகழ்ச்சிகள் நடைபெற்றன


Tuesday Feb 13, 2024

பெண் நீதிபதியான பழங்குடி பெண்ணிற்கு முதல்வர் வாழ்த்து


திருவண்ணாமலை புலியூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீமதி என்ற பெண் பிஏ, பி எல் சட்டப் படிப்பை முடித்து  சிவில் நீதிபதித் தேர்வில்  வெற்றி பெற்று நீதிபதி ஆகியுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், பெரிய வசதிகள் இல்லாத மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதிலேயே இந்நிலையை எட்டியிருப்பதைக்  கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்  


பாகிஸ்தானில் அமையும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றத் தயார்-அமெரிக்கா 


பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த பொதுத்  தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது 


Monday Feb 12,2024

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்ட இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை 


கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக  எழுந்த குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் அரசு கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்திய வெளியரவுத் துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக  

எட்டு முன்னாள்  கடற்படை வீரர்களையும்  கத்தார் அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப் பட்ட எட்டு பேரும் 12ம் தேதி திகட்கிழமை புது  டெல்லி வந்து சேர்ந்தனர்.


Sunday Feb 11, 2024

ஜூனியர்  உலகக் கோப்பை கிரிக்கெட் - சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா


 தென்னாப்பிரிக்காவில் நடந்தை பதினைந்தாவது  ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில்  பதினாறு அணிகள் பங்கேற்ற நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரை இறுதிக்குத்   தகுதிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு  இடையிலான இறுதி போட்டி பிப்ரவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெனோனியில் நடை பெற்றது.  முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது . அடுத்து விளையாடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றி பெற்று சாம்பியன் பட்டதைக் கைப் பற்றியது. 


Saturday Feb 10, 2024

கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது - அமெரிக்கத்  தூதர் 


படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் அமெரிக்கா ஒரு அற்புதமான இடம் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கூறினார். அவர் மேலும் கூறுகயில் உலகில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். கடந்த ஆண்டு இரண்டு லட்சம் விசாக்கள் வழங்கப் பட்டன. கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்வாரகள் எனபதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என்று அவர் கூறினார்.


Friday Feb 9, 2024

விண்வெளி நிலையம் அமைக்க பணிகளைத் தொடங்கியது இஸ்ரோ 


விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. சீனாவும் விண்வெளிநிலையத்தை  அமைத்துள்ளது. மூன்றாவதாக இந்தியாவும் சொந்தமான விண்வெளி நிலையம் அமைக்க இஸ்ரோ தனது பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது.  இந்த விண்வெளி நிலையம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு 2035ம் ஆண்டிற்குள் செயல் பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.  


Thursday Feb 8, 2024

புதிய கால நிலை செயற்கைக் கோளை செலுத்திய நாசா 


உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைக் கோளை நாசா பிப்ரவரி 8ம் தேதி வியாழக் கிழமை விண்ணில் செலுத்தியது . சுற்று வெட்டப் பாதையை நிலை நிறுத்தப் பட்ட இந்த சீயற்கைக் கோள் பூமியிலிருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்த படி கடற்பகுதி மற்றும் வழி மணடலத்தை  சுமார் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்யும். முன்னெப்போதும் இல்லாத  வகையில் இந்த செயற்கைக் கோள்  பூமியைத் தெளிவாகக் காட்டும் என்று விஞ்ஞானி வெர்டெல் தெரிவித்தார்.


வேலை நேரம் ம்முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை - புதிய சட்டம் 


தொழிலார்கள் வேலை  நேரம் முடிந்து  சென்ற பின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள்,மின்னஞ்சலகள் போன்றவற்றை நிராகரிக்க  உரிமை வழங்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் கொண்டு வரப்  பட்டுள்ளது. இதன் படி நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம். நியாயமற்ற காரணமாக இருந்தால் அழைப்பை நிராகரிக்கலாம். ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி  மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த புதிய சட்டத்திருத்தம்  ஓரிரு நாட்களில் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 



Wednesday Feb 7, 2024

தற்காப்புப்  போருக்குத் தயார் - போலந்து எச்சரிக்கை 


ரஷ்யா உக்ரைன்  போர் நடந்து வரும் சூழலில் போலந்து நாட்டின் கிழக்கு எல்லையில் வார்சாவிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலந்து நாட்டின் இராணுவ டாங்க்கிகள்,  கவச வாகனங்கள், போர் விமானங்கள் போலந்து வான் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன  என்றும், தற்போதைய சூழலில் நாங்கள் தற்காப்பு நடவடிக்கையாக போருக்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்றும், ரஷயா உக்ரைனில் வெற்றி பெற்றால்  உலக ஜனநாயகத்திருக்கு  ஒரு பெரும் பிரச்னையாக அது இருக்கும் என்றும் போலந்து பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். 


காசா  போர் நிறுத்தம்  தொடர்பாக சவூதி மற்றும் எகிப்து நாடு தலைவர்களுடன் பிளிங்கன்  பேச்சு 


காசா போரை முடிவுக்குக்  கொண்டுவர கடந்த திங்கட்கிழமை சவூதி அரேபியா வந்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பிளிங்கன், சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் எகிப்து அதிபர் அல்சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சுற்றுப் பயணத்தின் போது காஸாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும், ஹமாஸ் இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் கொள்வதற்கும் வசதியாக சண்டையை உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை உருவாக்க பிளிங்கன் தலைமையிலான குழு முயற்சிக்கும் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர் 


Tuesday Feb 6, 2024

18 கலைஞர்களுக்குக்  கலைச் செம்மல் விருது 


உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ  சென்னையை இசை நகரமாக அறிவித்திருந்தது.  இதைக் கொண்டாடும் விதமாக  சென்னை இசைக் கல்லூரியில்  5ம் தேதி திங்கட் கிழமை இசை விழா நடத்தப்பட்டது. இதில் மரபு ஓவியம், மரபு சிற்பம், நவீன ஓவியம், நவீன சிற்பம் என்னும் பிரிவுகளில் 18 சிறந்த கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் சாமி நாதன் விருதுகள் வழங்கி கவுரவித்தார். 


இருள் அடைந்த காசாவிற்கு ஒளி தரும் இளம் விங்ஞானி 


இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகிய நிலையில் , அதில் கிடைத்த பொருட்களை வைத்து பதினைந்து வயதான குஸாம் அல் அத்தார்  என்ற சிறுவன் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளான். இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காகக்  காற்று மூலம்  மின்சாரம் தயாரிக்க வழி  வகை செய்துள்ளார். இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன 


Monday, Feb 5, 2024

இந்திய சக்தி இசைக் குழுவிற்கு கிராமி விருது 


லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்து வரும் 66வது  கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கிராமி விருதுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இசை, பாப், ராக், நடனம் என   பல்வேறு பிரிவுகளில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப் பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழாவில், சங்கர் மஹாதேவன், விநாயக் ராம், செல்வ கணேஷ், கணேஷ் ராஜ கோபாலன்,  உஸ்தாத் ஜாஹிர் ஆகியோரைக் கொண்ட சக்தி  இசைக் குழுவின் திஸ் மொமெண்ட் (This Moment)   என்ற இசை ஆல்பத்திற்கு  கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



Sunday Feb 4, 2024

அமேசானில்  புதிய செய்யறிவு அறிமுகம் 


அமேசானில் நாம் பொருட்களை வாங்க உதவும் செய்யறிவை அமேசான் அறிமுகபப்டுத்தியுள்ளது. ரெபஸ் என்னும் இந்த செய்யறிவு தொழில் நுட்பம் நம்மிடம் எழுத்து வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளக் கூடியதாகும். பொருட்களை பற்றி நாம் முழுவதுமாகத்  தெரிந்து கொண்டு தரமான பொருட்களை வாங்க  உதவும் இந்த ரெபஸ் தொழில் நுட்பம்  அமேசானில் கடந்த வெள்ளிக்கிழமை  அறிமுகப் படுத்துள்ளது. 


Saturday Feb 3, 2024

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் 6 வது இடங்களில் இந்திய நகரங்கள் 


நெதெர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் உலகின் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்த ஆய்வை  நடத்தி  2023ம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் முதல் இடத்திலும், அயர்லாந்தின்  டப்ளின் நகரம் இரண்டாவது இடத்திலும், கனடாவின் டொராண்டோ மூன்றாவது இடத்திலும், இத்தாலியின் மிலன் நகரம் நான்காவது இடத்திலும்,பெரு தலை நகர் லீமா ஐந்தாவது இடத்திலும், இந்தியாவின் பெங்களூரு ஆறாவது இடத்திலும்,  புனே நகரம் ஏழாவது இடத்திலும் உள்ளது அந்த பட்டியலில் அறிவிக்கப் பட்டுள்ளது .


காசா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்- கத்தார் 


 இஸ்ரேல் ஹமாசிடையேயான போரில் கத்தார் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையின் காரணமாக கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத்  தொடர்ந்தது.  இந்நிலையில்  மீண்டும் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் ஹமாஸிடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பேச்சு வார்த்தையை  நடத்தி வரும்  கத்தார் நாடு அறிவித்துள்ளது  


Friday Feb 2, 2024

மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டைக் கொண்டடடும் வெனிஸ் நகரம் 


உலகின்  புகழ் பெற்ற  வணிகப் பயணியான மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டை அவர் பிறந்த இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம் கொண்டடாடுகிறது.  இத்தாலியில் பிறந்தவர் என்றாலும் இந்தியாவை உலகம் அறிய வைத்ததில் பெரும் பங்காற்றியவர் மார்க்கோ போலோ பாண்டியர்கள் மற்றும் தென்னிந்திய வரலாற்றுத் தகவல்களை தம் நூலில் பதிவு செய்து வைத்தவர் மார்க்கோ போலோ. அவரை பெருமைப் படுத்தும் வகையில் அவரின் எல்லாம் நினைவு நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வெனிஸ் நகர மக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் 


Thursday Feb 1, 2024

இலங்கையில்  அசோகர் தூண் - இந்திய தூதர் அடிக்கல் நாட்டினார் 


இலங்கையில் அசோகர் தூண் அமைக்க இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினார். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியா இலங்கை இடையேயான கலாச்சார உறவை பலப் படுத்தும் வகையில் வஸ்கடுவவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுகுதி மகா விகாரையில் பேரரசர் அசோகரின் தர்ம தூண் கட்டுமானப் பணிகளை இந்திய தூதர் சந்தோஷ்  ஜா அடிக்கல் நாட்டித்  தொடங்கி வைத்தார் 



Wednesday Jan 31, 2024

இஸ்ரேல் செல்லும் பத்தாயிரம்  இந்தியத் தொழிலார்கள் 


கடந்த அக்டோபர் மாதம் முதல்  நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலேயான போரினால், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனை மறு  கட்டமைப்பு செய்ய  இஸ்ரேல் முடுவு செய்துள்ள நிலையில், அங்கு போதிய மனித வளம் இல்லாததால், வேறு நாடுகளில் இருந்து தொழிலார்களைக் கொண்டு வர முடிவு  செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து பத்தாயிரம் தொழிலார்கள் பல கட்டங்களாக இஸ்ரேல் செல்ல உள்ளனர் 


மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் பதவியேற்ப 


மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத்  ஷாவின் பதவிக் காலம்  ஜனவரி 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மலேசியாவின் பதினேழாவது புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரதுபதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. 


Tuesday Jan 30, 2024

ஜெர்மனியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை 


ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை  என்ற புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலையும்,  மூன்று நாட்கள் விடுமுறையும் அளிப்பதால் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம்  அடைவதோடு அவர்களின் செயல் திறனும் அதிகரிக்கும்  என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. பெப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த நடைமுறை சோதனை முயற்சியில் ஜெர்மனியில் உள்ள 

நாற்பத்தி ஐந்து நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


மனித மூளையில்  சிப் சோதனை தொடங்கிய நியூரா லிங்க்  நிறுவனம் 


இலான்  மஸ்கின் நியூரா நிறுவனம், மனித மூளையில் சிப்களைப்  பொருத்தி  அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் , மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறியதால் மனிதரிடம் சோதனை நடத்த, அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி கோரிய நிலையில் அதற்கான அனுமதி கிடைத்தது. இதனால் நியூரா லிங்க் நிறுவனம் மனித மூளையில்  சிப்பைப்  பொருத்தி சோதனையைத்  தொடங்கி இருக்கிறது. 



Monday  Jan 29

2023ல் பதினான்கு  லட்சம் இந்தியர்களுக்கு விசா- அமெரிக்கத் தூதரகம் தகவல் 


கடந்த 2023ம் ஆண்டு பதினான்கு லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காத தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் நட்புறவு தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது. இதை அடுத்து கடந்த ஆண்டில் இந்தியர்களின் விண்ணப்பங்ளைப் பரிசீலனை செய்து  ஹச் ஒன் பி  விசா உட்பட 14 லட்சம் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கபப்ட்டது . இது 2022ம் ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது . 


Saturday Jan 27, 2024


கூடங்குளம் அணு உலைகள்  மூலம் இதுவரை 94000 மில்லியன்  யூனிட்  மின்சாரம் உற்பத்தி 


நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகள் மூலம் இதுவரை 94,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது என்றும், கடந்த நிதி ஆண்டில் இரண்டு அணு உலைகள் மூலம் 14,226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும், முதல் அணு உலை கடந்த 2021 மார்ச் மாதம் முதல் 638 நாட்கள் தொடர்ந்து இயங்கி மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்றும்  அணு மின் நிலைய வளாக இயக்குனர் R.S.ஷவான்த் கூறினார்  


ஹவுதி  தாக்குதலால் 42 சதவீதம் சரிந்த சூயஸ் கால்வாய் வர்த்தகப்  போக்குவரத்து 


இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சிப்  படையினர்  நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 42 சதவீதம் குறைந்து விட்டதாக ஐநாவின் வர்த்தகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது. இது போல் கடல் வணிகம் பாதிக்கப் படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் உலக அளவில் உயர்வதற்கான அபாயம் உள்ளதென்று அந்த அமைப்பின் தலைவர் ஜான் ஹாப்மேன் தெரிவித்துள்ளார்.


Friday Jan 26, 2024


குடவோலை  முறையை விளக்கும் தமிழக அலங்கார ஊர்தி 


டெல்லியில் நடை பெற்ற குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெற்றது இதில்  குடவோலை முறையை விளக்கும் வகையில் தமிழக அலங்கார ஊர்தி அணி வகுப்பில்  வலம்  வந்தது. பழங்காலத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதை ஓலையில்  குறித்து , அது பானையில் சேகரிக்கப்பட்டு, பின்னர் முடிவு அறிவிக்கப் படும் முறைதான் குடவோலை முறை ஆகும். 


பாலஸ்தீனர்களைப்  பாதுக்காக்க வேண்டியது - உரிமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவு 


 இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் தொடரும் நிலையில் , காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தி ஐய்யாயிரத்தைத்  தாண்டியுள்ளது.  இது தொடர்பாக தென் ஆப்ரிக்கா சர்வதேச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.  26ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், தென் ஆப்ரிக்காவின் நியாயமான கோரிக்கையை ஏற்று , காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் இனப் படுகொலையில் இருந்து தங்களைப்  பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது, இதை சர்வதேச நீதிமன்றம்

அங்கீகரிக்கிறது   என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .


Thursday Jan 25, 2024


தமிழகத்தைச் சேர்ந்த பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது 

 

இந்தியாவின் குடியரசசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த  வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புர கலைஞர்  பத்திரப்பன் என்பவருக்கு  மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் படுகிறது. பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது 


Wednesday Jan 24, 2024


இன்று ஜனவரி 24ம் தேதி பெண்  குழந்தைகள்  தினம் 


இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  இந்திய பிரதமர் பெண் குழந்தைகள் தான் மாற்றத்தை உருவாக்குபர்கள், பெண் குழந்தைகள் கல்வி கற்று வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழத்  தேவையான அணைத்து முயற்சிகளையும் தானுந்து அரசு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார். 


சுற்றுலாப் பயணிகள் வருகைப் பட்டியலில் தமிழகம் முதலிடம் 


 மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப் பட்டிருப்பதாவது,  கடைந்த 2021ம் ஆண்டில்   இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் மொத எண்ணிக்கை  67.8 கோடி பேர். அதே நேரத்தில் மாநிலங்கள் வாரியாகச்  சென்றோரின்  பட்டியலில் 15,53 கோடிஎன்ற எண்ணிக்கையில் தமிழ் நாடு முதளிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 10.97  கோடி பேர் என்ற எண்ணிக்கையுடன் உததிரப்  பிரதேசமும், 8.14 கோடி பயணிகள் சுற்றுப் பயணம் செய்த கர்நாடகா  மூன்றாவது இடத்தையும், 4.37 கோடி  சுற்றுலாப்பயணிகளுடன் மஹாராஷ்டிரா நான்காவது இடத்திலும் உள்ளது  என்று  அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது  



Tuesday Jan 23, 2024

வெளிநாட்டு மாணவர் விசாக்களுக்கு 2 வருட வரம்பு - கனடா புதிய உத்தரவு  


கனடாவிற்குக்  கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப் படும் விசா காலம் 2 வருடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குக்  கல்வி பயில வரும்  மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35% அளவுக்கு மாணவர் விசாக்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் இதனால் 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப் படும் என்றும் இந்த விசா இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கனடா குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார் 



Monday Jan 22, 2024

மின்மினி என்னும் உலகின் முதல்  தமிழ் ஹைப்பர் லோக்கல்   செயலி அறிமுகம்! 


உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே  நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மின் மினி என்ற தமிழ் செயலி ஜனவரி  22ம் தேதி திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மல்டி சானல் மற்றும் நெட் ஒர்க்குகளைக்  கொண்ட மின்மினி செயலியானது கான்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிகாப் பட்ட செய்தியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் , சிறந்த சமூக ஊடக தளமாக  விளங்கும்  என்றும், அங்கீகரிக்கப் பட்ட செய்தியாளர்கள்  ப்ளூ டிக் மூலம் அடையாளம் காணப்படுவார்கள் என்றும்  கூறப் படுகிறது. 


Saturday  Jan 20,  2024


விக்ரம்  லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா  விண்கலம் 


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ  அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லாண்டரும் பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப் பட்டது  இந்நிலையில் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர்கருவி விக்ரம் லாண்டருடன் லேசர் கற்றை மூலம்  தொடர்பை ஏற்படுத்தியதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா கூறும்போது,  நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டரின் லேசர் அல்ட்டிமீட்டர் கருவி விக்ரம் லாண்டரை சுட்டிக் காட்டியது என தெரிவித்துள்ளது.  



Friday Jan 19, 2024


ஜப்பான் விண்கலம் நிலவில் தரை  இறங்கியது 


நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம்  தேதி அனுப்பியது.  இந்த விண்கலம்  இன்று 19ம்  தேதி வெள்ளிக்கிழமை  காலை நிலவில் தரை  இறங்கியது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் நிலவின் ஸ்னைப்பர் என அழைக்கப் படுகிறது.  இந்த விண்கலம் நிலவில் தரை இறங்கியதன்  மூலம், நிலவில் வெற்றி கரமாக விண்கலத்தைத்  தரை இறக்கிய  ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. 



Thursday Jan.18 2024


உலகின் மிகப் பெரிய அம்பேத்கார் சிலை ஆந்திராவில் இன்று திறப்பு 


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் 125 அடி உள்ள சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது 81 அடி உயர பீடத்திற்கு மேல்  அமைக்கப் பட்டுள்ளதால் இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப் பட்டு, இந்தப் பகுதிக்கு ஸ்மிரிதி வனம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. சிலை அமைக்கப் பட்டுள்ள மைதானத்தில், அருங்காட்சியகம், மினி தியேட்டர், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்  பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 18ம் தேதி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார்



Wednesday Jan.17 2024


உலகின் வலிமையான  கரன்சி - 10 வது இடத்தில அமெரிக்க டாலர்  


உலகின் வலிமையான 10 கரன்சிகளின் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குவைத் டினார் முதல் இடத்திலும், பஹரைன் டினார் இரண்டாவது இடத்திலும், ஓமன் ரியால் மூஒன்றாவது இடத்திலும், ஜோர்டான் டினார்  நான்காவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த வரிசையில அமெரிக்க டாலர் பத்தாவது இடத்திலும், இந்திய ரூபாய் 15 வது இடத்திலும் உள்ளது. 



Tuesday Jan.16 2024


திருவள்ளுவர் தினம்


திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்  செய்தியில்,  தமிழினத்தில் பிறந்து அவர் தமிழில் அறம் உரைத்து  உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன  வான் புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துக்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்ற சமூக நீதி கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும்  என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அரண் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர்  வள்ளுவர். குரள் நெறி நம் வழி . குறள் வழியே நம் நெறி என்று  முதல்வர் தெரிவித்துள்ளார். 



ஏற்காட்டில் முதல் முறையாக விமானத்திர்க்குள் உணவகம் 


 சுற்றுலாத் தலமான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் உணவகம் ஓன்று ஒரு விமானத்தை விலைக்கு வாங்கி அதில் உணவகம் நடத்தி வருகிறது.  மலைப்  பிரதேசத்தில் பெரிய விமானம் ஓன்று  இருப்பதைப்  பார்க்கும் சுற்றுலாப் பயணிகள்  அருகில் சென்று பார்க்கும் போது விமானத்துக்குள் உணவகம் செயல் படுவது தெரிய வருகிறது. இந்த விமான உணவகத்திற்கு  கூட்டம் அதிகரித்து வருகிறது.  வணிக நோக்கில் வித்தியாசமான முறையில் தனியார் நிறுவனம் செய்துள்ள இந்த ஏற்பாடு  சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றுள்ளது. 


Monday Jan15 2024


அவனியாபுரம் ஜல்லிகட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு 


பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது காலை ஏழு மணிக்குத் தொடங்கிய ஜல்லிகட்டுப் போட்டி மாலை 5.15க்கு நிறைவுபெற்றது. இந்தப் போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்குக்  கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு பதினேழு காளைகளை அடக்கி இரு சக்கர வாகனத்தைப்  பரிசாகப்பெற்றிருந்தார். அடுத்து அவனியாபுரத்தைச்  சேர்ந்த ரஞ்சித்  என்பவர் 14 காளைகளை அடக்கி  இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேனீ மாவட்டத்தைச்  சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் பத்து காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 


Sunday Jan 14 2024


சீனப் பெருசுவரில் உலகின்மிக நீளமான ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த பெண் 


உலக அதிசயங்களில் ஒன்றான சீனாப் பெருஞ்சுவர்  ஏறக்குறைய 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட சுவராகும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த  குவோ ஃபெங்  என்ற பெண் ஓவியர்  சீனப் பெருஞ்சுவரின் மேல் அறுபது நாட்களுக்கு மேலாக அமர்ந்து 1014 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஓவியத்தை வரைந்துள்ளார். இதன் மூலம் இந்தப் பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.



Saturday  Jan.13 2024


உலகின் சிறந்த அரிசியாக பாசுமதி அரிசி தேர்வு 


பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ், 2023-24ம்  ஆண்டின் உலகின்  மிகச்சிறந்த  அரிசியாக  பாசுமதி அரிசியை அறிவித்துள்ளது. நீளமான, தனித்துவமான, சுவை மற்றும் வாசனை கொண்ட பாசுமதி அரிசி இந்திய துணைக்  கண்டத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது.  இந்திய பாசுமதி அரசிக்கு அடுத்த படியாக இத்தாலியைச் சேர்ந்த ஆர்போரியோ அரிசி இரண்டாவது இடத்தையும், போர்ச்சுகலின் கரோலினோ  அரிசி  மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 


ஆயிரத்து அறுநூறு ஆண்டு பழமையான வழிபாட்டுத்தலம் கண்டு பிடிப்பு 


அமெரிக்காவின் மிசௌரி மாநிலம் செயின்ட் லூயிஸ் பல்கலைக்  கழகத்தைச் சேர்ந்த  வரலாற்றுப் பேராசிரியர் டக்லஸ் தலைமயில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழாராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது கான்ஸ்டன்டைன் நகர மக்கள் பேரரசரின் மூதாதையருக்கு அமைத்துக் கொடுத்த வழிப்படுத்தலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது . இத்தாலி தலை நகர் ரோமிலிருந்து நூற்றி அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்பேல்லோ என்னும் நகரில் 1600 வருட பழமையான இந்த வழிபாட்டுத் தலத்தை டக்லஸ் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர் 


Friday Jan12 2024


ஹமாசின் 700 ஏவுகணைத்  தளங்கள்  அழிப்பு - இஸ்ரேல் அறிவிப்பு 


காஸாவில்  சோதனைகளில்  ஈடுபட்டு வரும் இஸ்ரேல் இராணுவம்  ஹமாஸ் அமைப்பினரின் நூற்றுக் கணக்காண சிறிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய  ஏவுகணைகளையும், ஏவுகணைத் தளங்களையும் அளித்துள்ளது.  அந்த வஃயில் இதுவரை  எழுநூறுக்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.  ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் திறன்களை அழித்து, இஸ்ரேல் மக்களைப்  பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



Thursday  Jan.11 2024


அயலக தமிழர் தின விழா  இன்று தொடங்கியது 


 தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும்  மறுவாழ்வுத்  துறை  தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு  அயலக தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவை இன்று  ஜனவரி 11ம் தேதி வியாழக் கிழமை சென்னை நந்தம் பாகம் வர்த்தக மையத்தில் அமைச்சர் உதயநிதி  ஸ்டலின் தோடங்கி வைத்தார். பதினொன்று மற்றும் பனிரெண்டு ஆகிய இரு தினங்கள் நடை பெறும்    இந்த விழாவில் இலங்கை மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் , இங்கிலாந்து,அமெரிக்கா உட்பட 58 நாடுகளில் இருந்துதமிழ் வம்சா வழியினர் பங்கேற்றுள்ளனர்.  இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள  218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகிய வற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் பங்கேற்றனர். 


Wednesday Jan.3 2024


சென்னையில் புத்தகக் கண் காட்சி 


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும்  பதிப்பாளர்கள்  சங்கம் சார்பில்,  47 வது சென்னை புத்தகக்  கண் காட்சி  நந்தனம் ymca  மைதானத்தில்  ஜனவரி 3ம் தேதி புதன்கிழமை தொடங்கியது.  இந்த புத்தகக்  கண்  காட்சியை  அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இந்த புத்தகக் கண் காட்சி வரும் 21ம் தேதி வரை நடை பெற உள்ளது.  இந்த புத்தகக் கண் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் கண் காட்சிக்கு சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது  

 புத்தகக் கண்  காட்சி 


Tuesday Jan.2 2024


குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 2 நாட்களில் 15,500 பேர் பார்வை 


கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  தொடர் விடுமுறை காரணமாக , இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்  தலமான  கன்னியாகுமரிக்கு  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்ய  சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில்  காத்திருந்தனர்.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 15,500 பேர் சுற்றுலாப் படகில் சவாரி செய்து கடல்நடுவே  அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தைக்  கண்டு மகிழந்ததாக பூம்புகார் நிர்வாகம்  தெரிவித்துள்ளது 




Thursday  Dec.21 2023


100 அடி உயரத்தில்  இந்தியாவின் உயரமான கிறிஸ்துமஸ் மரம் 


ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் போது , ஆலயங்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில்  கிறிஸ்துமஸ் மரம் , கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் ஸ்டார் ஆகியவற்றால் அலங்கரிப்பது வழக்கம்.  இந்த ஆண்டு கர்ணாவதாக மாநிலம் பெங்களூருவில் பிரபல மால் ஒன்றில்  வைக்கப் பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம்  இந்தியாவின் மிகப் பெரிய மரமாக காண்போரைக் கவர்ந்துள்ளது.  இந்த கிறிஸ்துமஸ் மரம்  செயற்கை நீரூற்றுக்கு மத்தியில், நூறு அடி  உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு  ஓங்கி உயர்ந்து காட்சி அளிக்கிறது.  இதை சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்தும் , புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். 


அகதிகள் வருவதைத் தடுக்க   பிரான்சில் புதிய சட்டம் 


அல்ஜீரியா, போர்ச்சுகல் , மொராக்கோ, துருக்கி உட்பட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்ட  விரோதமாக அகதிகள் நுழைவது வழக்கமாக உள்ளது, அகதிகளால் உல் நாட்டுப் பிரச்சனைகள் எழுவதால்,பிரான்ஸ் அதிபர் மேக்ரான்  கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து , சட்ட மாற்றங்களைக் கொண்டு வர புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் , அகதிகளால் அமைதியின்மை தோன்றக் கூடிய நிலை இருந்ததாகவும், அதனைத் தடுக்க வெட்னரியது அரசின் கடமை என்றும் , வெள்ளம் போல் நுழையும் அகதிகளைத் தடுக்குக் கவசமாக இந்த சட்டம் அமையும் என்றும் தெரிவித்தார்.



Wednesday Dec.20 2023


எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது 


எழுத்தார்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் சாஹித்ய அகாடமி விருது  வழங்கி வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்கான  சிறந்த புத்தகங்களுக்கான சாஹித்ய அகாடமி விருது இன்று  20ம் தேதி புதன் கிழமை அறிவிக்கப் பட்டது. இந்த விருது 24 மொழிகளில் வெளிவந்த புத்தகங்களுக்காக  அறிவிக்கப்பட்டது.  அந்த வாயில் தமிழில் நீர்வழிப் படூஉம் என்ற நாவலுக்காக, எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்ப ட்டுள்ளது .  விருது அறிவிக்கப் பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி  விருதுகள் வழங்கப் பட உள்ளன. 


  உலகில் முதல் முறையாக தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம் 


கலிஃபோர்னியா மாகாணத்தில் பசடேனா பகுதியில் கலி  எக்ஸ்பிரஸ் என்ற தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம் திறக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் தானியங்கி சமையல் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் மிஸோ ரோபோட்டிக்ஸ், கலி குழுமம் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு உதவும் பாப் ஐடி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த உணவகத்தை 

செயல் படுத்தி உள்ளன.  இங்குள்ள மிசோ ரோபோடிக்ஸ் இயந்திரங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ருசிகரமான உணவுகளைத் தயார் செயகின்றன. பாப் ஐடி தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை படம் பிடித்து  அவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து உணவுக்குத் தேவையான பணம் பெறப்படுகிறது



தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி  உட்பட 26 பேருக்கு அர்ஜூனா   விருது 


விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு நாட்டின் இறங்காவது உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப் படுகிறது .இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதில் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி , தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேர் அர்ஜுனா விருதுக்குத்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 



Tuesday, Dec.19 2023


ஐ பி எல் வரலாற்றில் அதிகதொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க் 


அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ பி எல்  20 ஓவர் கிரிக்கெட்  பதினேழாவது சீசன் போட்டிக்கான மினி ஏலம் கடந்த 19ம் தேதி டுபாயில் நடந்தது.  இந்த  ஏலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த  333 வீரர்களில் 77 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அதிக பட்சமாக ஆஸ்திரேலிய அணி வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்  24.75 கோடிக்கு  கோல்கட்டா அணியால் ஏலத்தில் எடுக்கப் பட்டார். ஐ  பி  எல்   கிரிக்கெட்  வரலாற்றில்  ஒரு வீரர் இவ்வளவு அதிக தொகைக்கு  ஏலம் போவது இதுவே முதல் முறையாகும்.


ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் இண்டிகோ சாதனை 


ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ விமான நிறுவனம் பெற்றுள்ளது கடந்த 2022ம் ஆண்டு இண்டிகோ விமானங்களில்  7.8 கோடி பேர் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு இண்டிகோ விமானம் 10 கோடி பேரை ஏற்றிச்  சென்று புதிய சாதனை படைத்துள்ளது . கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 22 சதவீதம் அதிகமாகும். 18ம் தேதி டெல்லி பெங்களூரு விமானப் பயணம் முடிவடைந்த நிலையில் இண்டிகோ இந்த சாதனையை எட்டியுள்ளது .



Monday, Dec.18 2023


போரை நிறுத்த  பிரான்ஸ்   வலியுறுத்தல் 


காசாமீது இஸ்ரேல் தாக்குதல்  தொடரும் நிலையில், போரை நிறுத்த பிரான்ஸ் நாடு வலியுறுத்தி உள்ளது.   இந்தப் போரில் அப்பாவி மக்கள் அதிக அளவில் கொல்லப் படுவதாக பிரான்ச கடந்த ஞாயிற்றுக் கிழமை வருத்தம் தெரிவித்த நிலையில், அந்நாட்டில் கவலையை பிரான்ஸ் நாட்டு  வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா இஸ்ரேலிடம் தெரிவித்தார். 



சுவீடன்  நாட்டில் புதிய விசா கட்டுப் பாடுகள் 


ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு  பாஸ்போர்ட் இல்லாமல் ஷெங்கன்  விசா எனப்படும் ஒரே விசா முறை  நடைமுறையில் உள்ளது.  இதை சுவீடன் நாடும் அங்கீகரித்து  வந்தது.  இந்நிலையில் சுவீடெனில் தங்க விரும்புபவர்கள் தாங்களாகவே  வேலை தெடிக் கொள்ள வேண்டும் என்றும் ,   சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூகக்  குறீயியீடுகளைக்  குறித்த புரிதல் இருக்க வேண்டுமென்பது கட்டாயம் என்றும், சுவீடிஷ் மொழயில் தேர்ச்சி  பெற்றவர்கள் மட்டுமே  இனி அனுமதிக்கப் படுவர் என்றும், சுவீடெனில் கல்வி கற்று,வேலையில் சேர்ந்து பணியாற்ற  அனைவருக்கும்  வாய்ப்பு வழங்கும் விதமாக  விசா திட்டங்கள் மாற்றப் படும் என்றும், சுவீடெனில் தொழிலாளர்  மற்றும் வேலைவாய்ப்புத்  துறை அறிவித்துள்ளது.




Sunday, Dec.17.2023


ஹோட்டலில் உணவு விநியோகிக்கும் பணியில் ரோபோ 


திருப்பூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் முதல் முறையாக  ரோபோ பயன்படுத்தப் படுகிறது.  உணவகத்தில்  உள்ள சப்ளையர்கள்  வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்து சமையல் செய்பவர்களிடம் வழங்கி, உணவு தயாரானதும் ரோபோவின் அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் வைக்கப் படுகிறது. ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் டேபிள் எண் ரோபோவில்  பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், வாடிகையாளர்கள் டேபிள் எண்ணை  அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்துச் செல்கிறது 


Saturday, Dec.16 2023


துணிச்சலான நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்-ஜனாதிபதி திரௌபதி முர்மு 


பாகிஸ்தானுடன் 1971ம் ஆண்டுப் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டு தோறும் வெற்றிகரமாகக்  கடை பிடிக்கப் படுகிறது. வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ முகாமில் டிசம்பர் 15ம் தேதி நடந்த  வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இது குறித்து டிசம்பர் 16ம் தேதி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,1971 போரின் போது நமது ஆயுதப் படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூறுகிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு வெற்றி தினம் அன்று தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  



ஈரான் செல்ல 33 நாடுகளுக்கு விசா தேவையில்லை 


 இந்தியா உட்பட 33 நாடுகளைச்  சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் நாட்டுக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை என டிசம்பர் 15ம் தேதி அந்நாட்டு அரசு அறிவித்தது. இது குறித்து ஈரான் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில் ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன  என்றும்,  இதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார். 




Friday, Dec.15 2023


இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இணைய  சேவை முடக்கம் 


ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஏறக்குறைய இரண்டரை மாதங்களாக நடந்து வருகிறது. காஸாவின் வடக்கு , மத்திய  மற்றும் தெற்கு காசா என அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் காஸாவில் மீண்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், காசாவில் அரசாங்க ஊடக அலுவலக  தகவல் தொடர்பு முடக்கப் பட்டதால், பலியான மக்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் என்றும்  பாலஸ்தீன தொலைத்த தொடரபு நிறுவனங்கள் கூறியுள்ளன 



Thursday Dec.14.2023


ஒடிசாவில் ஐந்து ரூபாய் கட்டணத்தில் அதி நவீன பேருந்துப் பயணம் 


ஒடிசா மாநில முதல்வர் நவீன்  பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவையை முதற்கட்டமாக ஒடிசாவில் கோரபத்    மாவட்டத்தில்  அறிமுகம் செய்துள்ளார். கிராமப்புறங்களில்  இருந்து மாவட்டத்தின் தலைநகருக்கு செல்ல விரும்பும் பெண்கள் மாணவர்கள் , மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஐந்து ரூபாய் கட்டணத்தில்இந்த பேருந்து சேவையை  பயன்படுத்திக் கொள்ள முடியும். முதற்கட்டமாக ஆறு மாவட்டங்களில்   234 கிராமப் பஞ்சாயத்துகளைச்  சேர்ந்த  மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். 



சர்வதேச திரைப்பட விழாவில்  தேர்வான கொட்டுக்காளி  திரைப்படம் 


நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த சிவா கார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன்ஸ்  மற்றும் தி லிட்டில் வேவ் ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்த கொட்டுக்காளி   திரைப்படம் எழுபத்தி நான்காவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதசே திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்திரைப்  படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம்  பெற்றுள்ளது.



Wednesday, Dec.13 2023


காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா 


காசா மீதான இஸ்ரேலின்  தாக்குதல்  இரண்டு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் உடனடியாக  மனிதாபிமானப்  போர் நிறுத்தம் கோரி, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட  மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலை நிறுத்துதல் என்ற தீர்மமானத்தை ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கிற்கான ஐக்கியநாடுகளின் பொதுச்சபை  அவசர அமர்வில் இந்தியா போர் நிறுத்தத்  தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.



போலந்து நாடு பிரதமராக டொனால்ட் டஸ்க் பதவியேற்பு 


போலந்தில் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி நடை பெற்ற பொதுத் தேத்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மத்தியவாதக் கட்சித்  தலைவர் டொனால்டு டஸ்க் தலைமையில் அரசு அமைக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில்  டிசம்பர் 12ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் டொனால்டு டஸ்க் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றதால் இன்று  13ம் தேதி புதன் கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் டொனால்டு டஸ்க் பிரதமராகப் பதவியேற்றார். 






NJ Sunrise Tamil Radio

E-Mail: admin@njsunriseradio.com

Copyright © 2020 NJ sunrise tamil radio - All Rights Reserved.