Friday July 26, 2024
2024பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்கம்
33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று 26ம் தேதி வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் தொடங்கி வைத்தார்
ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
Wednesday July 23, 2024
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் - சிங்கப்பூர் முதலிடம்
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்தி வாய்ந்த 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தர வரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சிங்கப்பூர் முத்லிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இந்தத் தர வரிசையில் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரியா, பின்லாந்து, ஐயர்லாந்து, லக்ஸம்பர், நெதர்லாந்து, தென்கொரியா,சுவீடன் ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
Tuesday July 23, 2024
மூன்றாவது முறையாக ஒலிம்பிக்ப்போட்டி - பிரான்ஸ் புதிய சாதனை
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஏற்கெனவே 1900, மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் நடை பெற்றுள்ளன. வரும் 26ம் தேதி அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற உள்ளதால், மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இதற்கு முன் லண்டனில் 1908, 1948, மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்றன.
Monday July 22, 2024
இந்தியாவில் 2050ம் ஆண்டிற்குள் முதியோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் - ஐ.நா.தகவல்
இந்தியாவில் வரும் 2050ம் ஆண்டிற்குள் முதியோர் எண்ணிக்கை 34.60 கோடியாக உயரும் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் இந்தியப் பிரதிநிதி ஆண்ட்ரியா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இதனால் சுகாதாரம், வீட்டு வசதி, ஓய்வூதியத் திட்டங்களில் அதிக முதலீடு தேவைப் படுகிறது, இந்தியா பத்து முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட 25 கோடி இளம் மக்களைக் கொண்டிருப்பதால் சுகாதாரம், கல்வி, வேலைக்கான பயிற்சிகள், புதிய பணிகள் உருவாக்குதலில் முதலீடு செய்வதன் மூலம் இளம் வயதினரின் திறன்களை பயன் படுத்தி நாட்டை நிலையான முன்னேற்றத்தை நோக்கி செலுத்த முடியும் என்றார்.
Sunday July 21, 2024
டெல்லியில் முதல் முறையாக உலக பாரம்பரியக் குழு கூட்டம்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வு மற்றும் கூட்டங்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது. . ஜூலை 21ம் தேதி தொடங்கும் இந்தக் கூட்டம் வரும் 31ம் தேதி வரை பத்து நாட்கள் நடை பெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 150க்கும் அதிகமான நாடுகளிருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
Saturday July 20, 2024
ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரும் தொலை பேசியில் உரையாடினர். இது குறித்து டிரம்ப் அவரது சமூக வலைத்ததளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , உக்ரேன் அதிபர் ஜெலின்ஸ்கியும் நானும் தொலை பேசியில் பேசிக் கொண்டோம். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப் பட்டதற்கு எனக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அடுத்த அமெரிக்க அதிபராக உலகத்திற்கு நான் அமைதியைக் கொண்டு வருவேன். ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று ஜெலின்ஸ்கியிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
Friday July 19, 2024
மைக்ரோசாப்ட் மென்பொருள் சேவை முடக்கம் - உலகளவில் வாங்கி சேவை, விமான சேவைகள் பாதிப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு துறைகளின் செயல் பாடுகள் முடங்கின. விண்டோஸ் மென்பொருள் சேவை பாதிப்பால் சர்வதேச அளவில் ஐ.டி நிறுவனங்கள், வங்கி சேவைகள், விமான சேவைகள்பாதிக்கப் பட்டதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான விமான சேவைகள் பாதிக்கப் பட்டன. Crowd Strike மேம்படுத்தலில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது.
Thursday July 18, 2024
தமிழ் நாடு விழா - தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு வாழ்த்து!
ஜூலை 18ம் தேதி கொண்டாடப்படும் தமிழ்நாடு விழாவை முன்னிட்டு, தமிழ் நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதலமைச்சர் ஸ்டாப்லீன் X தளத்தில் வெளியிட்டுப் பேசுகையில் கடல் கண்டு,மலை கண்டுபயன் கண்ட தமிழ் நாடு வாழ்க. ஜூலை பதினெட்டு 18 தமிழ் நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. தமிழ் நாடு வாழ்க என்று கூறியுள்ளார்.
Wednesday, ஜூலை 18, 2024
அதிக அளவு காற்றாலை மின் உற்பத்தி - தென் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றுத் துவங்கிய நிலையில் முதல் முறையாக தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி 4500 மெகா வாட்டைத் தாண்டியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி 4564 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதிக அளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் தென் மாநிலங்களின் பட்டியலில் தமிழ் நாடு முதலிடம் வகிக்கிறது.
Tuesday July 17, 2024
ஐரோப்பிய யூனியன் பார்லிமமென்ட் தலைவராக ரூபெர்ட்டா மீண்டும் தேர்வு
கடந்த 2022ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் பார்லிமென்ட் தலைவராக இருந்து வரும் ரூபெர்ட்டா மெட்சோலாவின் (Roberta Metsola) பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் நடை பெற்றது. இதில் 699 எம்.ஈ.பி க்கள் (MEPs )
வாக்களித்ததில் 562 பேர் ரூபெர்ட்டா மெட்சோலாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதை அடுத்து ஐரோப்பிய யூனியன் பார்லிமென்ட் தலைவராக ரூபெர்ட்டா மெட்சோலா மீண்டும் தேர்வானார்.
Monday July 15, 2024
கல்வியில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது - பிரதமர் மோடி புகழாரம்
காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி X வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , காமராஜரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூறுகிறேன் . கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது தொலை நோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மதிக்கத் தக்கது. அவருடைய லட்சியங்களை நிறைவேற்றி நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Sunday July 14, 2024
புதுச் சேரியில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் கொணடாட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ம் தேதி பிரான்ஸ் நாட்டுத் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் புதுச் சேரியில் 14ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டு வீரர்கள், மற்றும் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டுக் கொடிகள் ஒரு சேர ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப் பட்டன.
Saturday ஜூலை 13, 2024
ஜிம்பாப்வேக்கு ரதிரான நான்காவது T 20 போட்டியில் இந்தியா வெற்றி
ஜிம்பாப்வே-இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T 20 போட்டியின் மூன்று ஆட்டங்கள் முடிந்த நிலையில் நான்காவது போட்டி ஹராரேயில் 13ம் தேதி நடை பெற்றது. இதில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி இருபது ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து 153 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து, பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை, மூன்றுக்கு ஓன்று என்ற கணக்கில் இந்திய அணி கைப் பற்றியுள்ளது.
Friday July 12, 2024
ரஷ்யாவை சீனா இயக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு
அமெரிக்காவில் நடந்த நேட்டோ அமைப்பின் 75வது ஆண்டு விழாவில் உறுப்பு நாடுகளின் 32 தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை ஒரு உதவியாளராக சைனா இயக்குகிறது என்றும், ரஷ்யாவுக்கு சைனா ராணுவ தளவாடங்களை வழங்கி வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டிருந்தது. நேட்டோ அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சைனா தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
Thursday July 11, 2024
காசாவிலிருந்து பொதுமக்கள் உடனே வெளியேற எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரின் தொடர்ச்சியாக தற்போது இறுதிக்கு கட்டப் போருக்கு இஸ்ரேல்தாயாராகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் போர் நடவைடிக்கையை அதிகப் படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக காசாவிலிருந்து பொது மக்கள் பாதுகாக்கப்பட்ட வழியாக உடனே வெளியேருமாறு இஸ்ரேல் ராணுவம் ம் எச்சரிக்கை விடுத்துள்ளது, இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
Wednesday July 10, 2024
போரை நிறுத்த ரஷ்யாவுடனான உறவைப் பயன்படுத்த இந்தியாவிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்
உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க்ரெட் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் உக்ரேனில் அமைதியை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமானது என நாங்கள் கருதுகிறோம் என்றும், போருக்கு எதிராக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இந்த சிறப்புக் கூட்டாண்மையைப் பயன் படுத்த விரும்புகிறோம் என்றும் கூறினார்.
Tuesday July 9, 2024
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளின் நேரம் மாற்றம்
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் நேரம் மாற்றப் படுவதாகக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள் தற்போது காலை 9 மணி முதல்
மாலை 3.45 மணி வரை நடைபெற்று வருகிறது. இனி காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12.25 மணிக்கு இடைவேளை விடப்படும் என்றும், அதன் பிறகு 1.35 மணிக்குத் தொடங்கி மாலை 4.20 வரை பள்ளிகள் செயல்படும் என்றும் இந்தப் புதிய நடைமுறை வரும் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது
Monday July 8, 2024
ரஷ்யா உக்ரேன் நேரடிப் பேச்சு வார்த்தைக்கு உதவ சைனா அழைப்பு
ரஷ்யா உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்வதற்காக ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன்
கடந்த வாரம் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தின் தொடர்ச்சியாக சைனாவுக்குச் சென்ற விக்டர், சீன அதிபர் ஜி ஜின்பிங்ஐ சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக ரஷ்யா உக்ரேன் நாடுகள் நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும், இதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sunday July 7, 2024
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது T 20 ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான T 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் 7ம் தேதி ஹராரேவில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி இருபது ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. அடுத்து 235 ரன்கள் இலக்காகக் கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Saturday July 6, 2024
ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி
ஈரான் நாட்டு அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூன் 28ம் தேதி நடை பெற்றது. இதில மசூத் பெசெஷ்கியன் 42.5 சதவீத வாக்குகளும். சயீத் ஜலீலி 38.6 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். ஈரான் நாட்டு சட்டப்படி அந்நாட்டு அதிபராக 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என்பதால் முதல் இரண்டு இடங்களளில் உள்ள வேட்பாளர்களுக்கிடையே இரண்டாம் சுற்றுத் தேர்தல் கடந்த 5ம் தேதி நடத்தப்பட்டது. இதில் மசூத் பெசெஷ்கியன் 56 சதவீத ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதால் ஈரான் நாட்டின் அதிபராகப் பதவியேற்க உள்ளார்
Monday July 1, 2024
மாணவர்களின் விசா கட்டணத்தை உயர்த்தியது ஆஸ்திரேலியா
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசு இரு மடங்காக உயர்த்தியுள்ளது. அதன்படி இதுவரை 710 ஆஸ்திரேலியன் டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1600 ஆஸ்திரேலியா டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tuesday June 25, 2024
நிலவுக்குச் சென்ற சீன விண்கலம் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது
சைனா கடந்த மே மாதம் மூன்றாம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய சாங்கே 6 (Chang'e 6) என்ற விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் 53 நாட்கள் களைத்து பூமிக்குத் திரும்பியது. இந்த விண்கலம் நிலவிலிருந்து பாறை மற்றும் மணல் மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த மாதிரிகள் நிலவின் தென்துருவம் குறித்த வித்தியாசங்களை அறிய உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாதிரிகளை மற்ற நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஆராய உள்ளதாகவும் சைனா தெரிவித்துள்ளது.
Friday June 21, 2024
விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல இந்திய விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவின் தலைவர் பில் நெல்சன் தனது X வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மனித குலத்தின் நலனுக்காக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா முன்முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. விண்வெளியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை நாங்கள் ஒன்றாக விரிவு படுத்துகிறோம். அதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்குப் பயிற்ச அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
Thursday June 20, 2024
T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி வெற்றி.
T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிகொண்டது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி
இருபது ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அடுத்து 182 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இருப்பது ஓவர்கள் முடிவில் பத்து விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Wednesday June 19, 2024
T 20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா வெற்றி
T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் சூப்பர் 8 சுற்று 19ம் தேதி புதன் கிழமை தொடங்கியது. ஆன்டிகுவாவில் நடந்த சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணியும் தென்னாபிரிக்க அணியும் மோதின. முதலில் விளையாடிய தென்னாபிரிக்க அணி இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய அமெரிக்க அணி இருபது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.
Tuesday June 18, 2024
சீனாவில் உலகின் முதல் பறக்கும் கார் அறிமுகம்
சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான 'எக்ஸ்பெங்' (XPENG) உலகின் முதல் பறக்கும் காரைத் தயாரித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் கடந்த 2022ம் ஆண்டு துபாயில் நடத்தப்பட்டது. 680 கிலோ எடையுள்ள இந்த பறக்கும் கார் ஹெலிகாப்டர் தொழில் நுட்பத்தில் கார் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பட்சம் 160 கிலோ எடையைத் தாங்கி பறக்கக் கூடிய வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Monday June 17, 2024
ஜம்மு காஷ்மீரின் உள்ள உயரமான பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்
ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றில் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில் பாலம் 1178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலமாகும். உலகின் உயரமான இந்தப் பாலம் லிம்கா சாதனைப் லிம்கா சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தப் பாலத்தில் சங்கல் தான் ரியாஸ் இடையே ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்துப் பேசிய ரயில்வே அமைச்சர் இந்தப் பாலத்தில் முதல் முறையாக வெற்றிகரமாக ரயில் இயக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Sunday June 16, 2024
உக்ரைன் போரில் விரைவில் முடிவு எட்டப்படும்- ஜெலென்ஸ்கி நம்பிக்கை
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான சர்வதேச மாநாடு ஸ்விசர்லாந்தில் 15ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் முன் மொழியப்பட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ஒருமைப் பாட்டுக்கு மதிப்பளிக்கப் படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள உலக நாடுகளின் தலைவர்கள், போர் நிறுத்தத்திற்கு அனைத்து தரப்பும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் போரில் விரைவில் முடிவு எட்டப்படும் என நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
Saturday June 15, 2024
தென்னாபிரிக்க அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு
தென்னாப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் ஆளும் கட்சியான ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே பிடித்தது. இதனால் எதிர்கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நடந்த அதிபருக்கான வாக்கெடுப்பில் சிரில் ரமபோசா 283 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளும் பெற்றனர். இதனால் தென்னாபிரிக்காவின் அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
Wednesday June 12, 2024
T 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அமெரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
T 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 12ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த ஆட்டத்தில் அமெரிக்க அணியும் இந்திய அணியும் மோதின. முதலில் விளையாடிய அமெரிக்க அணி இருபது ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. அடுத்து 111 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
Tuesday June 11, 2024
பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு
பால்டிமோர் நகர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி சிங்கப்பூர் சரக்குக் கப்பல் ஓன்று மோதியதால் பாலம் உடைந்தது . இதனை சரி செய்யும் பணி இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடை பெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
Monday June 10, 2024
பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை விரைந்து வழங்க போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்
இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அனைத்து வழிகளிலும் சர்வதேச நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார் . பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை யாரும் தடுக்கக்கூடாது என்றும், பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களின் நலன்களுக்காக முன்வைக்கப்பட்ட, மற்றும் பழைய கைதிகளை விடுவிப்பதற்கான முன்மொழிவுகளை ஏற்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.
Sunday June 9, 2024
ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டதால் பரபரப்பு
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் எட்டாம் தேதி சனிக்கிழமை இருபத்தியேழாவது ஓடுபாதையில் ஏர் இந்திய விமானம் புறப்படும் போதே அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரை இறங்கியது. இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Saturday June 8, 2024
நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றமேக்னஸ் கார்ல்சன்
நார்வேயில் நடைபெற்ற 12வது நார்வே செஸ் சாம்பியன் போட்டியில் ஆண்கள் பிரிவின் கடைசி சுற்றில் முன்னணி வீரரான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் அமெரிக்காவின் பாபியானோவை எதிர்கொண்டார். இதில் அபாரமாக விளையாடிய கார்ல்சன் பாபியானோவை வீழ்த்தினார். இதன் மூலம் இவரது புள்ளி எண்ணிக்கை 17.5 ஆக உயர்ந்தது. இதனால் ஆறாவது முறையாக நார்வே செஸ் போட்டியின் சாம்பியன்ஷிப் படத்தைக் கார்ல்சன் வென்றார். நகமுரா 15.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த ப்ரக்யானந்தா 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
Friday June 7, 2024
சீனாவில் நடைபெற்ற டிராகன் படகு திருவிழாவில் உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை
சீனாவின் பாரம்பரிய டிராகன் படகுத் திருவிழா சீனாவின் பல்வேறு மாகாணங்களில் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. சீனக் கவிஞர்
கக்யூ யுவானின் நினைவைப் போற்றும் வகையில் சீன காலண்டரின் ஐந்தாம் மாதத்தின் ஐந்தாம் நாளில் இந்த டிராகன் படகுத் திருவிழா கொண்டாடப் பட்டது. சீனாவில் போயாங் ஏரியில் நடை பெற்ற படகுத் திருவிழாவில் 29 அணிகள் பங்கேற்றன. இதற்கிடையில் கூனான் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 420 படகோட்டிகள் வரை அமர்ந்து செல்லும் 100.97மீட்டர் நீளம் கொண்ட படகு உலகின் மிக நீளமான படகு என்றகிண்ணஸ் சாதனையைப் படைத்தது.
Thursday June 6, 2024
T 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஓமனை வீழ்த்திய ஆஸ்திரேலியா
அமெரிக்காவில் நடந்துவரும் T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6ம் தேதி பிரிட்ஜ் டவுனில் நடந்த ஆட்டத்தில் ஓமன் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இருபது ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து 165 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி இருபது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மேட்டுமே எடுத்தது. இதனால் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
Wednesday June 5, 2024
T 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
T 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஐந்தாம் தேதி நியூயார்க்கில் நடை பெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும், அயர்லாந்து அணியும் மோதின. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி பதினாறு ஓவர்களில் 96 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய இந்திய அணி 12.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tuesday June 4, 2024
இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவு - தமிழகத்தில் 40 கூட்டணிகளையும் கைப் பற்றிய தி.மு.க. கூட்டணி
தமிழ் நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக பாரளுமன்றத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நான்காம் தேதி செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். வாக்களித்த மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
டிக் டாக்கில் இணைந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் - ஒரே நாளில் 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்
அமரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் சீன செயலியான டிக் டாக்கில் புதிய கணக்கு துவங்கியுள்ளார். டிரம்ப் புதிய கணக்கு தொடங்கியதும் ஒரே நாளில் 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
Monday June 3, 2024
இஸ்ரேலியர்கள் மாலத் தீவிற்கு வரத் தடை
இஸ்ரேல் நாட்டினர் மாலத் தீவிற்கு வரக் கூடாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரின் தொடர்ச்சியாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. கடந்த 27ம் தேதி காஸாவில் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டதற்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டினர் யாரும் தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என மாலத்தீவு அதிபர் முய்ஸு தலைமையிலான மாலத் தீவு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது
Sunday June 2, 2024
ஐஸ்லாந்தின் அதிபராக பெண் தோழிலதிபர் தேர்வு
ஐஸ்லாந்து நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடை பெற்றது. இதில் பெண் தொழிலதிபரான ஹல்லா டோமஸ் டோட்டிர் என்பவரும், முன்னாள் பிரதமர் கேத்ரின் ஜாகோப்ஸ் டோட்டிரும் போட்டியிட்டனர். இதில் பெண் தொழிலதிபர் ஹல்லா டோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதை அடுத்து ஹல்லா டோமஸ் டோட்டிர் ஐஸ்லாந்து நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
Saturday June 1, 2024
தைவான் பிரிந்து செல்ல அனுமத்திக்க மாட்டோம் - சீன ராணுவம்
சீனாவிடமிருந்து தைவானை சுதந்திரமாகப் பிரிந்து செல்ல ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவத்தின் லெப்டினென்டன்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் (Jing Jianfeng) கூறினார். தைவானில் சுதந்திரத்திற்காகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்வதற்காகவும்,
சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை ஊக்குவிப்பதற்காகவும், வெளிப் புறத் தலையீடுகளை எதிர்ப்பதற்கும், சீன ராணுவத்திற்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Friday May 31, 2024
அஸ்ஸாம் பள்ளியில் AI தொழிநுட்ப ஆசிரியர் அறிமுகம்
அஸ்ஸாமில் தனியார் பள்ளியொன்றில் அமைக்கப்பட்ட AI என்று அழைக்கப் படும் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியர் மாணவர்கள் எந்தப் பாடம் தொடர்பாக கேள்வி கேட்டாலும் தகுந்த உதாரணங்களுடன் பதில் அளித்து வருகிறது. ஐரிஸ் எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆப் மூலம் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
Thursday May 30, 2024
நார்வே செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய ப்ரக்யானந்தா
நார்வேயில் நடந்து வரும் செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நடப்பு உலகச் சாம்பியன் டிங் லிரென் , கார்ல்சன், தமிழகத்தின் ப்ரக்யானந்தா உட் பட ஆறு பேர் பங்கேற்று விளையாடினர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற ப்ரக்யானந்தா, இரண்டாவது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் 30ம் தேதி வியாழக்கிழமை நடந்த மூன்றாவது சுற்றுப் போட்டியில் ப்ரக்யானந்தா அபாரமாக விளையாடி
கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ப்ரக்யானந்தா 5.5 புள்ளிகளுடன் ம்முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Wednesday May 29, 2024
ஒரே நேர்கோட்டில் ஆறு கோள்கள் தெரியும் அறிய நிகழ்வு
ஆறு கிரகங்களை ஒரே நேர்கோட்டில் காண முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனைச் சுற்றி வரும் கிரஹங்களில் மூன்று அல்லது நான்கு கோள்களை ஒரே நேர்கோட்டில் காணும் வாய்ப்பு சில சமயங்களில் ஏற்படும். இந்நிலையில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் ஆகிய ஆறு கிரகங்களை வரும் ஜூன் மூன்றாம் தேதி ஒரே நேர்கோட்டில் காண முடியும் என்றும், கிழக்குத் திசையில் சூரிய உதயத்திற்கு முன்னர் இதை வெறும் கண்களால் காணலாம் என்றும்வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tuesday May 28, 2024
இஸ்ரேலுடன் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை இல்லை - ஹமாஸ் அறிவிப்பு
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலின் தொடர்ச்சியாக கடந்த 26ம் தேதி ரபா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 35 பாலஸ்தீனியர் உயிரிழந்தனர். இதற்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் துரதிஷ்டவசமான தவறு என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாஹூ தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரபா மீது தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை இல்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
Monday May 27, 2024
T 20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி நியூயார்க் வந்தனர்
20 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்படுகிறது. வரும் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் நியூயார்க் நகரை வந்தடைந்தனர்.
Sunday May 26, 2024
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கொல்கட்டா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
பதினேழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 26ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கோல்கட்டா அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கட்டா அணி 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கட்டா அணி கைப்பற்றியது.
Saturday May 25, 2024
சர்வதேச உத்தரவை நிராகரித்த இஸ்ரேல்
இஸ்ரேல் ஹாமாஸ் இடையிலான போரின் தொடர்ச்சியாக காஸாவின் ராபா நகரின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் ராபா நகரில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும் என்றும், உதவிப் பொருட்கள் செல்ல எல்கைகளை உடனே தீர்க்க வேண்டும் என்றும் சர்வ்தேச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சர்வ்தேச நீதி மன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
Friday May 24, 2024
ஐ.பி.எல். இரண்டாவது தகுதி சுற்றில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் 24ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியம், ராஜஸ்தான் அணியும் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 26ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு ஹைதராபாத் அணி தகுதி பெற்றது.
Thursday May 23, 2024
அக்கார்டியன் இசைக் கருவிக்குக் காப்புரிமை கிடைத்த நாள்
அக்கார்டியன் என்பது கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஒரு காற்றிசைக் கருவி. அக்கார்டியன் இசைக் கருவிக்கு வியன்னா நாட்டைச் சேர்ந்த சிறில் டானியன் என்பவர் 1829ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி காப்புரிமை பெற்றார். இதைச் சிறப்பிக்கும் வகையில் இன்று மே 23 வியாழக்கிழமை அன்று கூகிள் நிறுவனம் சிறப்பு டூடில் வெளியியி ட்டு சிறப்பித்துள்ளது
Wednesday May 22, 2024
பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் - நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் அறிவிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீனத்திற்குத் தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே போருக்குத் தீர்வாகும் என பல ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருந்த நிலையில், நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இது குறித்துப் பேசிய நார்வே பிரதமர் ஜோனாஸ், பாலஸ்தீனத்திற்குத் தனி நாடு அங்கீகாரம் அளிக்காவிட்டால், மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது என்றார். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது என அயர்லாந்து பிரதமர் தெரிவித்தார்.
Tuesday May 21, 2024
பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக மாரியப்பன் தங்கம் வென்றார்
ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம்தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்
பதக்கம் வென்று சாதனை படைத்தார். மாரியப்பன் இதற்கு முன் 2016ம் ஆண்டு ரியோ போட்டியில் தங்கப் பதக்கமும், 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Monday May 20, 2024
தைவானில் புதிய பிரதமர் பதவியேற்பு
தைவான் நாட்டில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முனேற்றக் கட்சி வெற்றி பெற்று லாய்சிங்ங்-தே (Lai Ching-te)அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சி ஆதரவுடன் புதிய அதிபர் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் சர்வதேசப் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Sunday May 19, 2024
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு ஹைதராபாத் அணி முன்னேறியது
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 19.1 ஒவரில், ஆறு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
Saturday May 18 2024
அயலக தமிழர்கள் பதிவு செய்ய தமிழக அரசு அழைப்பு
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேர தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது . இதில் உறுப்பினராக இணைவதில் மூலம் விபத்துக்கு காப்பீடு, கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களைப் பெறலாம். இதற்காக அயலக நலத் துறையின் https;//nrtamils.tn.gov.in என்னும் இணையத்தைப் பார்வையிடுமாறு கூறப் பட்டுள்ளது.
Thursday May 16, 2024
சைனா சென்ற பூட்டினுக்கு உற்சாக வரவேற்பு
சீன அதிபர் சீ சின்பிங் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ரஷ்ய அதிபர் பூட்டின் 16ம் தேதி வியாழக்கிழமை சைனா சென்றார். சைனா சென்ற பூட்டினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்தாவது முறையாக அதிபர் பதவி ஏற்ற பிறகு பூட்டின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சைனா சென்ற பூட்டின் இரு நாட்டு உறவு குறித்து சீன அதிபருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Wednesday May 15, 2024
உக்ரேனில் கார்கிவ் நகரில பதுங்குகுழி பள்ளிக்கூடம்
ரஷ்யா உக்ரேன் போர் நடந்து வரும் நிலையில் உக்ரேனின் கார்கிவ் நகரில் பங்கர் பள்ளி எனப்படும் பதுங்குகுழி பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதுங்குகுழி பள்ளிக்கு வந்த குழந்தைகள், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து உற்சாகமடைந்தனர். இந்தப் பதுங்குகுழி பள்ளிகள், ரஷ்யாவில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பூமிக்கு அடியில் ஆறு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
Tuesday May 14, 2024
சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்ய ஏற்பாடு
சென்னையில் மக்கள் பயணம் செய்ய பேருந்து, மின்சாரா ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றிற்கு தனித்தனியாகப் பயணச் சீட்டு வாங்கி பயணித்து வருகின்றனர். இம்மூன்றிற்கும் ஒரே டிக்கெட் முறை அமல் படுத்தப்படும் என்று ஏற்கெனெவே அறிவிக்கப் பட்டிருந்து. இந்நிலையில் பேருந்து, மின்சாரா ரயில், மெட்ரோ ரயில் ஆகிய மூன்றிலும் பயணிக்க வசதியாக வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் பிரதியேகக் கார்ட் அறிமுகப் படுத்தப் பட உள்ளது. இந்த அட்டையை ரீசார்ஜ் செய்து பயணிகள் பயணிக்கும்வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது
Monday May 13, 2024
மழையால் கை விடபப்பட்ட ஐ.பி.எல். ஆட்டம்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 13ம் தேதி திங்கட்கிழமை அகமதாபாத்தில் நடக்கவிருந்த 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கை விடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டம் கை விடப் பட்டதன் காரணமாக குஜராத் அணி பிளே ஆஃப் வாய்ப்பினை இழந்து மூன்றாவது அணியாக வெளியேறியது.
Thursday May 9, 2024
பிரான்ஸில் ஓலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு
33 வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி கடந்த ஏப்ரல் மாதம் கிரீஸ் நாட்டில் ஒலிம்பியா ஆடுகளத்தில் ஏற்றப்பட்டு, பின்னர் கிரீஸ் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, பிரான்ஸ் ஒலிம்பிக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. அங்கிருந்து பில்லம் என்ற பாரம்பரியம் மிக்கமூன்று அடுக்கு பாய்மரப் படகு மூலம் பிரான்ஸின் மார்செய் நகருக்கு 8ம் தேதி புதன்கிழமை கொண்டு வரப் பட்டது. பிரான்ஸ் வந்தடைந்த ஒலிம்பிக் ஜோதிக்கு வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது
Wednesday May 8, 2024
கொரோனா தடுப்பூசியைத் திரும்பப்பெறும் அஸ்ட்ரா ஜெனகா
கொரோனா தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாக அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை உண்டாக்குவதாக செய்திகள் வெளியாகின. அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, உயிரிழப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக அந்நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு தரக் கோரியும் இங்கிலாந்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மாணவர்களுக்கான விசா கொள்கையில் மாற்றம்
ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் முறை கேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்ததால் விசா வழங்குவதற்கான நடை முறையில் ஆஸ்திரலிய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி மாணவர்கள் விசா பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவோர் வங்கி கணக்கில் வைக்க வேண்டிய சேமிப்புத் தொகையை 21041 ஆஸ்திரேலிய டாலரிலிருந்து 24505 ஆஸ்திரெலிய டாலராக உயர்த்தி உள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் எனக் கூறப் படுகிறது.
Tuesday May 7, 2024
ரஷ்ய அதிபராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்ற பூட்டின்
ரஷ்யாவில் கடந்த மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் பூட்டின் 88 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் பூட்டின் ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக, ஏழாம் தேதி செவ்வாய்கிழமை பொறுப்பேற்றார. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இன்னும் ஆறு ஆண்டுகள் பூட்டின் அதிபராக நீடிப்பார்.
Monday May 6, 2024
ராபாவில் மக்களை இடம்பெயர இஸ்ரேல் அறிவுறுத்தல்
காஸாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்களை இடம்பெயர இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் நடவ் ஷோஷானி கூறுகையில் ஏறத்தாழ ஒரு லட்சம் மக்களை இஸ்ரேல் அறிவித்த மனிதநேய மண்டலமான முவாசி பகுதிக்கு இடம் பெயர அறிவுறுத்தி உள்ளோம் என்றும், இஸ்ரேல் சில வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கான நடவடிககைக்குத் திட்டமிட்டு வருகிறது என்றும் கூறினார். ரபாவுக்குள் தரைவழி ராணுவ நடவடிக்கைக்கான அறிகுறியாக இந்த அறிவிப்பு கருதப் படுகிறது.
Sunday May 5, 2024
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக் கான் தேர்வு
பிரிட்டனில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடை பெறுவதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் மேயர் தேர்வுக்கானத் தேர்தல் நடந்தது. இதில் தொழிலாளர் காட்சியைச் சேர்ந்தவரும் தற்போது மேயராக இருப்பவருமான சாதிக் கான் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் மேயராகத் தேர்வு செய்யப் பட்டார். கடந்த 2016ம் ஆண்டு முதல் இரண்டு முறை மேயராகப் பதவி வகித்த சாதிக் கான் தற்போது மூஒன்றாவது முறையாக மீண்டும் மேயராகத் தேர்வு பெற்றுள்ளார்.
Saturday May 4, 2024
ஈரான் சிறை பிடித்த கப்பலில் இருந்த பதினாறு இந்திய மாலுமிகள் விடுவிப்பு
இஸ்ரேல் தொடர்புடைய எம்எஸ்சி ஏரீஸ் (MSC ARIES) என்ற சரக்குக் கப்பல் கடந்த மாதம் 13ம் தேதி ஈரான் கடற்படையினரால் சிறை பிடிக்கப் பட்டது. இந்த கப்பலில் பதினேழு இந்திய மாலுமிகள் உட்பட இருபத்தி ஐந்து மாலுமிகள் பணியில் இருந்தனர். பதினேழு இந்தியர்களில் ஒரு பெண் மாலுமி மட்டும் விடுவிக்கப் பட்டார். இந்நிலையில் மீதமுள்ள பதினாறு இந்தியர்கள் உட்பட இருபத்தி நான்கு மாலுமிகளும் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை விடுவிக்கப் பட்டனர். இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் கூறும்போது மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும், அனைத்து மாலுமிகளும் அவரவர் சொந்த நாட்டுக்குச் செல்லலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும் என்றார்.
Friday May 3 , 2024
விவேகானந்தர் மண்டபம் -திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடிக் கூண்டு பாலம்
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்க நடை பாலம் அமைக்க 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடிக் கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்தப் பாலத்துக்கான
கட்டுமானப் பணிகள் திருவள்ளுவர் சிலை உள்ள பாறையில் தொடங்கப்பட்டு இருபுறமும் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டன . இந்தப் பாலத்துக்கான கூண்டு புதுச்சேரியில் தயாரிக்கப் பட்டு வருகிறது. இதன் பணி நிறைவடைந்ததும் அவை பாறைகளில் உள்ள தூண்களில் இணைக்கப்பட்டுக் கண்ணாடிக் கூண்டு பொருத்தப் பட உள்ளது.
Thursday மாய , 2024
14 கோடி தொலைவிலிருந்து பூமிக்கு வந்த சிக்னல் - நாசா ஆச்சரியம்
வேற்று கிரகங்களில் உயிரங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆய்விற்காக நாசா கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் சைக்கி என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் பொருத்தப் பட்டிருக்க்கும் DSOC எனப்படும் Deep Space Optical Communications மூலம் விண்வெளியில் நீண்ட தூரத்திற்கு லேசர் தகவல் தொடர்புகளை அனுப்ப முடியும். இந்நிலையில் சைக்கி விண்கலம் 14 கோடி மைல்கள் தொலைவிலிருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இதில் பொருத்தப் பட்டிருந்த DSOC சாதனம் விண்கலத்தின் ரேடியோ ட்ரான்ஸ்மீட்டறுடனும் தொடர்பு கொண்டு அதில் வெற்றியடைந்து உள்ளது.
Wednesday May 1, 2024
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் நடுகல் திறப்பு விழா
இரண்டாம் உலகப் போரின்போது தாய்லாந்தின் சியாம்-பர்மா ரயில் பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தாய்லலாந்து நாட்டின் காஞ்சனபுரியில் மே ஒன்றாம் தேதி புதன் கிழமை தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடுகல் திறப்பு விழா நடை பெற்றது. இந்தத் திறப்பு விழாவில் தமிழக அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி.ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
Tuesday Apr 30, 2024
துபாயைத் தொடர்ந்து சவூதி அரேபியாவிலும் கன மழை
அரபு நாடுகளான துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளில் கடந்த 15ம் தேதி முதல் மூன்று நாட்கள் கனமழை பெய்தது. ஓமான் நாட்டிலும் கனமழை பெய்திருந்தது. இந்நிலையில் சவுதி அரேபியாவிலும் 29ம் தேதி திங்கட்கிழமை கனமழை பெய்தது. புனித நகரமான மெதினாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடியது. மெதினா மட்டுமல்லாமல் ரியாத், ஜெட்டா, நகர்களிலும் கனமழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபப்ட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப் பட்டன.
Monday Apr 29, 2024
ஸ்பெயின் நாட்டு தெரேசா வின்செண்டேய்வுக்கு பசுமை நோபல் விருது
ஸ்பெயின் நாட்டின் மர்ஷியாவைச் சேர்ந்த சட்டப் பேராசிரியையான தெரேசா வின்ஸெண்ட்டே என்பவருக்கு 2024ம் ஆண்டிற்கான கிரீன் நோபல் எனப்படும் பசுமை நோபல் விருது வழங்கப் பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மர்ஷியாவில் உள்ள மார் மெனோர் என்ற சிறிய கடல் போன்ற உப்பு நீர் தடாகத்தைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப் போராடியதற்காக தெரேசா வின்செண்டேவுக்கு இந்தப் பசுமை நோபல் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளது.
Sunday Apr 28, 2024
யூக்ரேனுக்கு நூறு மில்லியன் டாலர் ராணுவ உதவி - ஆஸ்திரேலியா அறிவிப்பு
இரண்டு ஆண்டுகளைக் கடந்து யூக்ரேன் ரஷ்ய போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் யூக்ரேன் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரிச்சர்ட் மார்லஸ்
ஆஸ்திரேலியா அரசு சார்பில் யூக்ரேனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, ட்ரோன்கள், மற்றும் வெடி மருந்து உட்பட நூறு மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கப்படும் என்றும், யூக்ரேனுடன் ஆஸ்திரேலியா உறுதியாகத் துணை நிற்கும் என்றும் கூறினார்.
Saturday Apr 27,2024
பிணைக் கைதிகளை விடுவிக்கக் கடைசி வாய்ப்புத் தருகிறோம் - இஸ்ரேல் கெடு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் வடக்கு மற்றும் மத்திய காசாவிலிருந்து பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் தெற்குக் காசாவில் உள்ள ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். ரபா நகரில் தரை வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்குக் கடைசி வாய்ப்புத் தருகிறோம் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.
Friday Apr 6, 2024
வெனிஸ் நகரைச் சுற்றி பார்க்கக் கட்டணம்
இத்தாலியின் சுற்றுலா நகரமான வெனிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடை முறையை அமல்படுத்தியுள்ளது. அதன் படி வெனிஸ் நகரைச் சுற்றி பார்க்க ஒரு நாளைக்கு ஐந்து யூரோக்கள் வசூலிக்கப் பட உள்ளது. பதினான்கு வயதுக்கு உட்படாகுழந்தைகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 262 ரன்களைத் துரத்திப பிடித்து பஞ்சாப் அணி வரலாற்று வெற்றி
பதினேழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 26ம் தேதி கொல்கத்தாவில் நடந்த 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஒவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அடுத்து 262 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை சேஸ் செய்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
Thursday Apr 25, 2024
செவ்வாய் கிரகம் போல் காட்சி அளித்த ஏதென்ஸ் நகரம் - நாசா விளக்கம்
கிரீஸ் நாட்டுத் தலைநகர் ஏதென்ஸ் நகரம் 24ம் தேதி திடீரென ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்தது. இதனால் சுற்றுலா வந்தவர்களும், உள்ளூர் வாசிகளும் பீதி அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து நாசா அளித்த விளக்கத்தில் வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சைப்ரஸ், மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சமயத்தில் மேகக் கூட்டங்கள் நகர்வது வாடிக்கைதான். இந்நிலையில் இந்தக் மேகக் கூட்டத்துடன் சஹாராப் பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் ஏதென்ஸ் நகரை ஆரஞ்சு நிறப் போர்வை போர்த்தியது போல புழுதிப் புயல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் - பதினேழு நாடுகளின் கூட்டறிக்கை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் காஸாவில் 200 நாட்களுக்கு மேல் பிடித்து வைக்கப் பட்டிருக்கும் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோருகிறோம், அவர்களில் எங்கள் நாட்டினரும் உள்ளனர், பிணைக் கைதிகளின் விடுதலை, மற்றும் காஸாவில் உடனடி மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் அந்த ஒப்பந்தம் காஸாவில் கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சேர்க்கும் என்பது உட்பட பல அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிக்கையில் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட பதினேழு நாடுகள் இணைந்துள்ளன.
Wednesday Apr 24, 2024
தமிழ் நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழ் நாட்டில் வெப்ப அலை காரணமாக பல இடங்களில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், உடல் வெப்ப அலை தாக்கத்தின் போது பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Tuesday Apr 23, 2024
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி
பதினேழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 23ம் தேதி செவ்வாய்கிழமை சென்னையில் நடந்த 39வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜயன்ட் அணியும் மோதின. முதலில் விளையாடிய சென்னை அணி இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் இலக்குடன் அடுத்து விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Monday Apr 21, 2024
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
பிடே (FIDE) கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொராண்டோ நகரில் நடந்தது. இதில் கடைசி சுற்றான 14வது ஆட்டம் 22ம் தேதி திங்கட்கிழமை நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் குகேஷ் ஆட்டத்தை ட்ரா செய்ததன் மூலம் ஒன்பது புள்ளிகளைப் பெற்று முத்லிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதோடு சாம்பியன் படத்தையும் வென்றார். இந்நிலயில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குகேஷுக்குத் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் பதினேழு வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷுக்கு வாழ்த்துக்கள், உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Sunday Apr 21, 2024
சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் இயக்கம்
சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட மிகப் பெரிய சரக்கு ரயில் சோதனை ஓட்டமாக 20ம் தேதி சனிக்கிழமை இயக்கப்பட்டது. சுமார் நான்கு கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் மூலம் ஒரே நேரத்தில் 30000 டன் பொருட்கள் வரை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக இந்த ரயிலில் 4 மின்சார என்ஜின்கள் பொருத்தப் பட்டுள்ளன. நாட்டின் வர்த்தகத்தில் இந்த ரயில் முக்கிய பங்கு வகிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.
Saturday Apr 20, 2024
இந்தியாவில் 2026ம் ஆண்டு ஏர் டாக்ஸி பயன்பாட்டிற்கு வரும்
இண்டிகோவை நிர்வகித்து வரும் இன்டர்குளோப் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் ஆகியவை இணைந்து இந்தியாவில் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட வான் வெளி டாக்ஸி சேவையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் 2026ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. முதற்கட்டமாக டெல்லியிலிருந்து ஹரியானாவில் குருகிராமுக்கு ஏர் டாக்ஸி இயக்கப் பட உள்ளது. டேல்லி ஹரியானா இடையிலான 125 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஏர் டாக்ஸி ஏழு நிமிடங்களில் சென்றடையும் என்று கூறப் படுகிறது.
Friday Apr 19, 2024
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு
இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட இருபத்தியொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த முதற்கட்ட வாக்குப் ப்திவு இந்திய நேரம் காலை ஏழு மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணியுடன் நிறைவடைந்தது.. தமிழகத்தில் 19ம் தேதி இரவு ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் 78.72 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிக பட்சமாகத் திரிபுராவில் 79.90 சாதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
Thursday Apr 18, 2024
போக்குவரத்துப் போலீசாருக்கு ஏ.சி. ஹெல்மெட்
இந்தியாவில் கோடை காலம் தொடங்கியது முதல் பல நகரங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில
Monday Feb19, 2024
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் பிரான்ஸ் முதல் இடத்தில உள்ளது. ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் முலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம். பின்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 85வது இடத்தில உள்ளது.
பிரிட்டனில் உக்ரேன் அகதிகளுக்கு மேலும் 18 மாதங்கள் விசா நீட்டிப்பு
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷயா உக்ரேன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு லட்சத்து எண்பதினாயிரதுக்கும் அதிகமான உக்ரேன் நாட்டினர் பிரிட்டனில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் அகதிகளாகத் தங்கியுள்ள உக்ரேன் நாட்டினருக்கு விசா மேலும் பதினெட்டு மாதங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. உக்ரேனில் தொடர்ந்து போர் நடந்து வருவதால் பிரிட்டனில் தங்கியுள்ள உக்ரேன் நாட்டவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விசா நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் குடியேற்றத்துறை அமைச்சர் டாம் பெஸ்குரோ தெரிவித்தார்.
Sunday Feb 18, 2024
போர் நிறுத்தப் பேச்சுக்கு இடமில்லை நேத்தன்யாஹூ
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நடந்து வரும் நிலையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின்
தலையீட்டில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ கூறும்போது, பாலஸ்தீனத்தை ஒருதலைப் பட்சமாக அங்கீகரிப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கும். ஹமாஸுடன் போர் நிறுத்தப் பேச்சு வாரத்தை இல்லை, ஹமாஸ் அமைப்பினரின் கோரிக்கை ஏமாற்றும் வகையில் உள்ளது, அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று நேத்தன்யாஹு கூறினார்.
Saturday Feb 17, 2024
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை
தமிழ் நாடு முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடைவிதித்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் ல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதால் தமிழகத்தில் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Friday Feb.16, 2024
காசா எல்லையில் புதிய சுவர் எழுப்பும் எகிப்து
இஸ்ரேல் காஸாவின் ரபா பகுதியில் தனது இராணுவ நடவடிகைகளை விரிவு படுத்த உள்ள நிலையில் எகிப்து நாடு காஸாவின் எல்லையை ஒட்டிய தனது பிராந்தியப் பகுதிகளில்சுவர் எழுப்பி வருவதை செயற்கைக் கோள் வழியாக பெறப்படும் படங்களிலிருந்து அஸோஸியேட் பிரெஸ் உறுதி செய்துள்ளது. சுவர் எழுப்பி வருவது குறித்து எகிப்து அதிகாரப்பூர்வமான எதையும் அறிவிக்கவில்லை
Thursday Feb 15, 2024
புற்று நோய்க்கு எதிராக விரைவில் தடுப்பூசி - பூட்டின் அறிவிப்பு
உலகம் முழுதும் பல அமைப்புகள் புற்று நோய் தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் பூட்டின் மாஸ்கோவில் எதிர்காலத் தொழில் நுட்பம் குறித்து உரையாற்றிய போது, எங்கள் ஆரய்ச்சியாளர்கள் புற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள் என்றும் தனிப்பட்ட வகையில் அவை நோயாளிகளுக்குப் பயன் படும் வகையில் பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என நம்புகிறேன் என்றும் கூறினார்
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட பிங்க் ஸ்குவார்ட என்ற பாதுகாப்பு சேவையை இன்று பிப்ரவரி 15ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்தக் குழுவில் முதற்கட்டமாக இருபத்தி மூன்று பெண்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மெட்ரோ பயணிகள் அதிகமாகப் பயணிக்கும் ரயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாலித் தீவிற்கு சுற்றுலா செல்ல வரி - இந்தோனேசியா அறிவிப்பு
இந்தோனேசியாவிற்கு சுற்றுலாப் பயணம் செல்பவர்களில் அதிக மக்கள் செல்லும் இடமாக பாலித் தீவு திகழ்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் இங்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர் . இந்நிலையில் பாலித் தீவுக்கு சுற்றுலா வருபவர்கள் பத்து டாலர் சுற்றுலா வரி கட்டவேண்டும் என்று இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிக்கப் படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
உலகின் பெரிய பொருளாதாரநாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை இழந்த ஜப்பான்
உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது . அதேநேரத்தில் ஜெர்மனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது
Wednesday Feb 14, 2024
இந்தியா அமெரிக்கா இடையே சிறந்த இராணுவ உறவு - பென்டகன் தகவல்
இந்திய இராணுவ தலைமைத் தளபதி அமெரிக்க்காவுக்கு நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இரு நாடுகளின் இராணுவ உறவுகள் குறித்து பென்டகனின் ஊடக துணை செயலாளர் கூறும்போது , நாங்கள் இந்தியாவுடன் சிறந்த இராணுவ ஊறவைக் கொண்டுள்ளோம் என்றும், நாங்கள் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கூறினார். இந்திய இராணுவ தலைமைத் தளபதி, அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதியுடன் உயர் மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாம்பல் புதன் - தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனை
இயேசு சிலுவையில் அறையப் பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடை பிடிக்கப் படுகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப் படுகிறது. சாம்பல் புதனை முன்னிட்டு இன்று உலகெங்கினும் தேவாலங்களில் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
Tuesday Feb 13, 2024
பெண் நீதிபதியான பழங்குடி பெண்ணிற்கு முதல்வர் வாழ்த்து
திருவண்ணாமலை புலியூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீமதி என்ற பெண் பிஏ, பி எல் சட்டப் படிப்பை முடித்து சிவில் நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதி ஆகியுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், பெரிய வசதிகள் இல்லாத மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதிலேயே இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் அமையும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றத் தயார்-அமெரிக்கா
பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
Monday Feb 12,2024
கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்ட இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை
கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் அரசு கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்திய வெளியரவுத் துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக
எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் கத்தார் அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப் பட்ட எட்டு பேரும் 12ம் தேதி திகட்கிழமை புது டெல்லி வந்து சேர்ந்தனர்.
Sunday Feb 11, 2024
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் - சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்காவில் நடந்தை பதினைந்தாவது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பதினாறு அணிகள் பங்கேற்ற நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரை இறுதிக்குத் தகுதிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி பிப்ரவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெனோனியில் நடை பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது . அடுத்து விளையாடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றி பெற்று சாம்பியன் பட்டதைக் கைப் பற்றியது.
Saturday Feb 10, 2024
கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது - அமெரிக்கத் தூதர்
படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் அமெரிக்கா ஒரு அற்புதமான இடம் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கூறினார். அவர் மேலும் கூறுகயில் உலகில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். கடந்த ஆண்டு இரண்டு லட்சம் விசாக்கள் வழங்கப் பட்டன. கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்வாரகள் எனபதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என்று அவர் கூறினார்.
Friday Feb 9, 2024
விண்வெளி நிலையம் அமைக்க பணிகளைத் தொடங்கியது இஸ்ரோ
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. சீனாவும் விண்வெளிநிலையத்தை அமைத்துள்ளது. மூன்றாவதாக இந்தியாவும் சொந்தமான விண்வெளி நிலையம் அமைக்க இஸ்ரோ தனது பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த விண்வெளி நிலையம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு 2035ம் ஆண்டிற்குள் செயல் பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Thursday Feb 8, 2024
புதிய கால நிலை செயற்கைக் கோளை செலுத்திய நாசா
உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைக் கோளை நாசா பிப்ரவரி 8ம் தேதி வியாழக் கிழமை விண்ணில் செலுத்தியது . சுற்று வெட்டப் பாதையை நிலை நிறுத்தப் பட்ட இந்த சீயற்கைக் கோள் பூமியிலிருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்த படி கடற்பகுதி மற்றும் வழி மணடலத்தை சுமார் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்யும். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த செயற்கைக் கோள் பூமியைத் தெளிவாகக் காட்டும் என்று விஞ்ஞானி வெர்டெல் தெரிவித்தார்.
வேலை நேரம் ம்முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை - புதிய சட்டம்
தொழிலார்கள் வேலை நேரம் முடிந்து சென்ற பின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள்,மின்னஞ்சலகள் போன்றவற்றை நிராகரிக்க உரிமை வழங்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் படி நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம். நியாயமற்ற காரணமாக இருந்தால் அழைப்பை நிராகரிக்கலாம். ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த புதிய சட்டத்திருத்தம் ஓரிரு நாட்களில் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Wednesday Feb 7, 2024
தற்காப்புப் போருக்குத் தயார் - போலந்து எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் போலந்து நாட்டின் கிழக்கு எல்லையில் வார்சாவிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலந்து நாட்டின் இராணுவ டாங்க்கிகள், கவச வாகனங்கள், போர் விமானங்கள் போலந்து வான் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன என்றும், தற்போதைய சூழலில் நாங்கள் தற்காப்பு நடவடிக்கையாக போருக்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்றும், ரஷயா உக்ரைனில் வெற்றி பெற்றால் உலக ஜனநாயகத்திருக்கு ஒரு பெரும் பிரச்னையாக அது இருக்கும் என்றும் போலந்து பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
காசா போர் நிறுத்தம் தொடர்பாக சவூதி மற்றும் எகிப்து நாடு தலைவர்களுடன் பிளிங்கன் பேச்சு
காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கடந்த திங்கட்கிழமை சவூதி அரேபியா வந்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பிளிங்கன், சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் எகிப்து அதிபர் அல்சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சுற்றுப் பயணத்தின் போது காஸாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும், ஹமாஸ் இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் கொள்வதற்கும் வசதியாக சண்டையை உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை உருவாக்க பிளிங்கன் தலைமையிலான குழு முயற்சிக்கும் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்
Tuesday Feb 6, 2024
18 கலைஞர்களுக்குக் கலைச் செம்மல் விருது
உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்திருந்தது. இதைக் கொண்டாடும் விதமாக சென்னை இசைக் கல்லூரியில் 5ம் தேதி திங்கட் கிழமை இசை விழா நடத்தப்பட்டது. இதில் மரபு ஓவியம், மரபு சிற்பம், நவீன ஓவியம், நவீன சிற்பம் என்னும் பிரிவுகளில் 18 சிறந்த கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் சாமி நாதன் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இருள் அடைந்த காசாவிற்கு ஒளி தரும் இளம் விங்ஞானி
இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகிய நிலையில் , அதில் கிடைத்த பொருட்களை வைத்து பதினைந்து வயதான குஸாம் அல் அத்தார் என்ற சிறுவன் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளான். இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காகக் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழி வகை செய்துள்ளார். இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன
Monday, Feb 5, 2024
இந்திய சக்தி இசைக் குழுவிற்கு கிராமி விருது
லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்து வரும் 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கிராமி விருதுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இசை, பாப், ராக், நடனம் என பல்வேறு பிரிவுகளில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப் பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழாவில், சங்கர் மஹாதேவன், விநாயக் ராம், செல்வ கணேஷ், கணேஷ் ராஜ கோபாலன், உஸ்தாத் ஜாஹிர் ஆகியோரைக் கொண்ட சக்தி இசைக் குழுவின் திஸ் மொமெண்ட் (This Moment) என்ற இசை ஆல்பத்திற்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday Feb 4, 2024
அமேசானில் புதிய செய்யறிவு அறிமுகம்
அமேசானில் நாம் பொருட்களை வாங்க உதவும் செய்யறிவை அமேசான் அறிமுகபப்டுத்தியுள்ளது. ரெபஸ் என்னும் இந்த செய்யறிவு தொழில் நுட்பம் நம்மிடம் எழுத்து வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளக் கூடியதாகும். பொருட்களை பற்றி நாம் முழுவதுமாகத் தெரிந்து கொண்டு தரமான பொருட்களை வாங்க உதவும் இந்த ரெபஸ் தொழில் நுட்பம் அமேசானில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப் படுத்துள்ளது.
Saturday Feb 3, 2024
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் 6 வது இடங்களில் இந்திய நகரங்கள்
நெதெர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் உலகின் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்த ஆய்வை நடத்தி 2023ம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் முதல் இடத்திலும், அயர்லாந்தின் டப்ளின் நகரம் இரண்டாவது இடத்திலும், கனடாவின் டொராண்டோ மூன்றாவது இடத்திலும், இத்தாலியின் மிலன் நகரம் நான்காவது இடத்திலும்,பெரு தலை நகர் லீமா ஐந்தாவது இடத்திலும், இந்தியாவின் பெங்களூரு ஆறாவது இடத்திலும், புனே நகரம் ஏழாவது இடத்திலும் உள்ளது அந்த பட்டியலில் அறிவிக்கப் பட்டுள்ளது .
காசா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்- கத்தார்
இஸ்ரேல் ஹமாசிடையேயான போரில் கத்தார் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையின் காரணமாக கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது. இந்நிலையில் மீண்டும் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் ஹமாஸிடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பேச்சு வார்த்தையை நடத்தி வரும் கத்தார் நாடு அறிவித்துள்ளது
Friday Feb 2, 2024
மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டைக் கொண்டடடும் வெனிஸ் நகரம்
உலகின் புகழ் பெற்ற வணிகப் பயணியான மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டை அவர் பிறந்த இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம் கொண்டடாடுகிறது. இத்தாலியில் பிறந்தவர் என்றாலும் இந்தியாவை உலகம் அறிய வைத்ததில் பெரும் பங்காற்றியவர் மார்க்கோ போலோ பாண்டியர்கள் மற்றும் தென்னிந்திய வரலாற்றுத் தகவல்களை தம் நூலில் பதிவு செய்து வைத்தவர் மார்க்கோ போலோ. அவரை பெருமைப் படுத்தும் வகையில் அவரின் எல்லாம் நினைவு நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வெனிஸ் நகர மக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்
Thursday Feb 1, 2024
இலங்கையில் அசோகர் தூண் - இந்திய தூதர் அடிக்கல் நாட்டினார்
இலங்கையில் அசோகர் தூண் அமைக்க இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினார். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியா இலங்கை இடையேயான கலாச்சார உறவை பலப் படுத்தும் வகையில் வஸ்கடுவவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுகுதி மகா விகாரையில் பேரரசர் அசோகரின் தர்ம தூண் கட்டுமானப் பணிகளை இந்திய தூதர் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்
Wednesday Jan 31, 2024
இஸ்ரேல் செல்லும் பத்தாயிரம் இந்தியத் தொழிலார்கள்
கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலேயான போரினால், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனை மறு கட்டமைப்பு செய்ய இஸ்ரேல் முடுவு செய்துள்ள நிலையில், அங்கு போதிய மனித வளம் இல்லாததால், வேறு நாடுகளில் இருந்து தொழிலார்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து பத்தாயிரம் தொழிலார்கள் பல கட்டங்களாக இஸ்ரேல் செல்ல உள்ளனர்
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் பதவியேற்ப
மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷாவின் பதவிக் காலம் ஜனவரி 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மலேசியாவின் பதினேழாவது புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரதுபதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
Tuesday Jan 30, 2024
ஜெர்மனியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை
ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலையும், மூன்று நாட்கள் விடுமுறையும் அளிப்பதால் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு அவர்களின் செயல் திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. பெப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த நடைமுறை சோதனை முயற்சியில் ஜெர்மனியில் உள்ள
நாற்பத்தி ஐந்து நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மனித மூளையில் சிப் சோதனை தொடங்கிய நியூரா லிங்க் நிறுவனம்
இலான் மஸ்கின் நியூரா நிறுவனம், மனித மூளையில் சிப்களைப் பொருத்தி அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் , மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறியதால் மனிதரிடம் சோதனை நடத்த, அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி கோரிய நிலையில் அதற்கான அனுமதி கிடைத்தது. இதனால் நியூரா லிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப்பைப் பொருத்தி சோதனையைத் தொடங்கி இருக்கிறது.
Monday Jan 29
2023ல் பதினான்கு லட்சம் இந்தியர்களுக்கு விசா- அமெரிக்கத் தூதரகம் தகவல்
கடந்த 2023ம் ஆண்டு பதினான்கு லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காத தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் நட்புறவு தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது. இதை அடுத்து கடந்த ஆண்டில் இந்தியர்களின் விண்ணப்பங்ளைப் பரிசீலனை செய்து ஹச் ஒன் பி விசா உட்பட 14 லட்சம் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கபப்ட்டது . இது 2022ம் ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது .
Saturday Jan 27, 2024
கூடங்குளம் அணு உலைகள் மூலம் இதுவரை 94000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகள் மூலம் இதுவரை 94,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது என்றும், கடந்த நிதி ஆண்டில் இரண்டு அணு உலைகள் மூலம் 14,226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும், முதல் அணு உலை கடந்த 2021 மார்ச் மாதம் முதல் 638 நாட்கள் தொடர்ந்து இயங்கி மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்றும் அணு மின் நிலைய வளாக இயக்குனர் R.S.ஷவான்த் கூறினார்
ஹவுதி தாக்குதலால் 42 சதவீதம் சரிந்த சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்குவரத்து
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 42 சதவீதம் குறைந்து விட்டதாக ஐநாவின் வர்த்தகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது. இது போல் கடல் வணிகம் பாதிக்கப் படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் உலக அளவில் உயர்வதற்கான அபாயம் உள்ளதென்று அந்த அமைப்பின் தலைவர் ஜான் ஹாப்மேன் தெரிவித்துள்ளார்.
Friday Jan 26, 2024
குடவோலை முறையை விளக்கும் தமிழக அலங்கார ஊர்தி
டெல்லியில் நடை பெற்ற குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெற்றது இதில் குடவோலை முறையை விளக்கும் வகையில் தமிழக அலங்கார ஊர்தி அணி வகுப்பில் வலம் வந்தது. பழங்காலத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதை ஓலையில் குறித்து , அது பானையில் சேகரிக்கப்பட்டு, பின்னர் முடிவு அறிவிக்கப் படும் முறைதான் குடவோலை முறை ஆகும்.
பாலஸ்தீனர்களைப் பாதுக்காக்க வேண்டியது - உரிமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் தொடரும் நிலையில் , காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தி ஐய்யாயிரத்தைத் தாண்டியுள்ளது. இது தொடர்பாக தென் ஆப்ரிக்கா சர்வதேச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 26ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், தென் ஆப்ரிக்காவின் நியாயமான கோரிக்கையை ஏற்று , காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் இனப் படுகொலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது, இதை சர்வதேச நீதிமன்றம்
அங்கீகரிக்கிறது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .
Thursday Jan 25, 2024
தமிழகத்தைச் சேர்ந்த பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது
இந்தியாவின் குடியரசசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புர கலைஞர் பத்திரப்பன் என்பவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் படுகிறது. பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது
Wednesday Jan 24, 2024
இன்று ஜனவரி 24ம் தேதி பெண் குழந்தைகள் தினம்
இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் பெண் குழந்தைகள் தான் மாற்றத்தை உருவாக்குபர்கள், பெண் குழந்தைகள் கல்வி கற்று வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழத் தேவையான அணைத்து முயற்சிகளையும் தானுந்து அரசு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகள் வருகைப் பட்டியலில் தமிழகம் முதலிடம்
மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது, கடைந்த 2021ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் மொத எண்ணிக்கை 67.8 கோடி பேர். அதே நேரத்தில் மாநிலங்கள் வாரியாகச் சென்றோரின் பட்டியலில் 15,53 கோடிஎன்ற எண்ணிக்கையில் தமிழ் நாடு முதளிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 10.97 கோடி பேர் என்ற எண்ணிக்கையுடன் உததிரப் பிரதேசமும், 8.14 கோடி பயணிகள் சுற்றுப் பயணம் செய்த கர்நாடகா மூன்றாவது இடத்தையும், 4.37 கோடி சுற்றுலாப்பயணிகளுடன் மஹாராஷ்டிரா நான்காவது இடத்திலும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது
Tuesday Jan 23, 2024
வெளிநாட்டு மாணவர் விசாக்களுக்கு 2 வருட வரம்பு - கனடா புதிய உத்தரவு
கனடாவிற்குக் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப் படும் விசா காலம் 2 வருடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குக் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35% அளவுக்கு மாணவர் விசாக்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் இதனால் 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப் படும் என்றும் இந்த விசா இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கனடா குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார்
Monday Jan 22, 2024
மின்மினி என்னும் உலகின் முதல் தமிழ் ஹைப்பர் லோக்கல் செயலி அறிமுகம்!
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மின் மினி என்ற தமிழ் செயலி ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மல்டி சானல் மற்றும் நெட் ஒர்க்குகளைக் கொண்ட மின்மினி செயலியானது கான்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிகாப் பட்ட செய்தியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் , சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும் என்றும், அங்கீகரிக்கப் பட்ட செய்தியாளர்கள் ப்ளூ டிக் மூலம் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் கூறப் படுகிறது.
Saturday Jan 20, 2024
விக்ரம் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா விண்கலம்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லாண்டரும் பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப் பட்டது இந்நிலையில் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர்கருவி விக்ரம் லாண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டரின் லேசர் அல்ட்டிமீட்டர் கருவி விக்ரம் லாண்டரை சுட்டிக் காட்டியது என தெரிவித்துள்ளது.
Friday Jan 19, 2024
ஜப்பான் விண்கலம் நிலவில் தரை இறங்கியது
நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் இன்று 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நிலவில் தரை இறங்கியது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் நிலவின் ஸ்னைப்பர் என அழைக்கப் படுகிறது. இந்த விண்கலம் நிலவில் தரை இறங்கியதன் மூலம், நிலவில் வெற்றி கரமாக விண்கலத்தைத் தரை இறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
Thursday Jan.18 2024
உலகின் மிகப் பெரிய அம்பேத்கார் சிலை ஆந்திராவில் இன்று திறப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் 125 அடி உள்ள சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது 81 அடி உயர பீடத்திற்கு மேல் அமைக்கப் பட்டுள்ளதால் இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப் பட்டு, இந்தப் பகுதிக்கு ஸ்மிரிதி வனம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. சிலை அமைக்கப் பட்டுள்ள மைதானத்தில், அருங்காட்சியகம், மினி தியேட்டர், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 18ம் தேதி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார்
Wednesday Jan.17 2024
உலகின் வலிமையான கரன்சி - 10 வது இடத்தில அமெரிக்க டாலர்
உலகின் வலிமையான 10 கரன்சிகளின் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குவைத் டினார் முதல் இடத்திலும், பஹரைன் டினார் இரண்டாவது இடத்திலும், ஓமன் ரியால் மூஒன்றாவது இடத்திலும், ஜோர்டான் டினார் நான்காவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த வரிசையில அமெரிக்க டாலர் பத்தாவது இடத்திலும், இந்திய ரூபாய் 15 வது இடத்திலும் உள்ளது.
Tuesday Jan.16 2024
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழினத்தில் பிறந்து அவர் தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான் புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துக்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அரண் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். குரள் நெறி நம் வழி . குறள் வழியே நம் நெறி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் முதல் முறையாக விமானத்திர்க்குள் உணவகம்
சுற்றுலாத் தலமான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் உணவகம் ஓன்று ஒரு விமானத்தை விலைக்கு வாங்கி அதில் உணவகம் நடத்தி வருகிறது. மலைப் பிரதேசத்தில் பெரிய விமானம் ஓன்று இருப்பதைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் அருகில் சென்று பார்க்கும் போது விமானத்துக்குள் உணவகம் செயல் படுவது தெரிய வருகிறது. இந்த விமான உணவகத்திற்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. வணிக நோக்கில் வித்தியாசமான முறையில் தனியார் நிறுவனம் செய்துள்ள இந்த ஏற்பாடு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Monday Jan15 2024
அவனியாபுரம் ஜல்லிகட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது காலை ஏழு மணிக்குத் தொடங்கிய ஜல்லிகட்டுப் போட்டி மாலை 5.15க்கு நிறைவுபெற்றது. இந்தப் போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்குக் கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு பதினேழு காளைகளை அடக்கி இரு சக்கர வாகனத்தைப் பரிசாகப்பெற்றிருந்தார். அடுத்து அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 14 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் பத்து காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
Sunday Jan 14 2024
சீனப் பெருசுவரில் உலகின்மிக நீளமான ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்
உலக அதிசயங்களில் ஒன்றான சீனாப் பெருஞ்சுவர் ஏறக்குறைய 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட சுவராகும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர் சீனப் பெருஞ்சுவரின் மேல் அறுபது நாட்களுக்கு மேலாக அமர்ந்து 1014 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஓவியத்தை வரைந்துள்ளார். இதன் மூலம் இந்தப் பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Saturday Jan.13 2024
உலகின் சிறந்த அரிசியாக பாசுமதி அரிசி தேர்வு
பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ், 2023-24ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாசுமதி அரிசியை அறிவித்துள்ளது. நீளமான, தனித்துவமான, சுவை மற்றும் வாசனை கொண்ட பாசுமதி அரிசி இந்திய துணைக் கண்டத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்திய பாசுமதி அரசிக்கு அடுத்த படியாக இத்தாலியைச் சேர்ந்த ஆர்போரியோ அரிசி இரண்டாவது இடத்தையும், போர்ச்சுகலின் கரோலினோ அரிசி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஆயிரத்து அறுநூறு ஆண்டு பழமையான வழிபாட்டுத்தலம் கண்டு பிடிப்பு
அமெரிக்காவின் மிசௌரி மாநிலம் செயின்ட் லூயிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் டக்லஸ் தலைமயில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழாராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது கான்ஸ்டன்டைன் நகர மக்கள் பேரரசரின் மூதாதையருக்கு அமைத்துக் கொடுத்த வழிப்படுத்தலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது . இத்தாலி தலை நகர் ரோமிலிருந்து நூற்றி அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்பேல்லோ என்னும் நகரில் 1600 வருட பழமையான இந்த வழிபாட்டுத் தலத்தை டக்லஸ் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்
Friday Jan12 2024
ஹமாசின் 700 ஏவுகணைத் தளங்கள் அழிப்பு - இஸ்ரேல் அறிவிப்பு
காஸாவில் சோதனைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரின் நூற்றுக் கணக்காண சிறிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும், ஏவுகணைத் தளங்களையும் அளித்துள்ளது. அந்த வஃயில் இதுவரை எழுநூறுக்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் திறன்களை அழித்து, இஸ்ரேல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Thursday Jan.11 2024
அயலக தமிழர் தின விழா இன்று தொடங்கியது
தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலக தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவை இன்று ஜனவரி 11ம் தேதி வியாழக் கிழமை சென்னை நந்தம் பாகம் வர்த்தக மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டலின் தோடங்கி வைத்தார். பதினொன்று மற்றும் பனிரெண்டு ஆகிய இரு தினங்கள் நடை பெறும் இந்த விழாவில் இலங்கை மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் , இங்கிலாந்து,அமெரிக்கா உட்பட 58 நாடுகளில் இருந்துதமிழ் வம்சா வழியினர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகிய வற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் பங்கேற்றனர்.
Wednesday Jan.3 2024
சென்னையில் புத்தகக் கண் காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், 47 வது சென்னை புத்தகக் கண் காட்சி நந்தனம் ymca மைதானத்தில் ஜனவரி 3ம் தேதி புதன்கிழமை தொடங்கியது. இந்த புத்தகக் கண் காட்சியை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இந்த புத்தகக் கண் காட்சி வரும் 21ம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த புத்தகக் கண் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் கண் காட்சிக்கு சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது
புத்தகக் கண் காட்சி
Tuesday Jan.2 2024
குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 2 நாட்களில் 15,500 பேர் பார்வை
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக , இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 15,500 பேர் சுற்றுலாப் படகில் சவாரி செய்து கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தைக் கண்டு மகிழந்ததாக பூம்புகார் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Thursday Dec.21 2023
100 அடி உயரத்தில் இந்தியாவின் உயரமான கிறிஸ்துமஸ் மரம்
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் போது , ஆலயங்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் கிறிஸ்துமஸ் மரம் , கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் ஸ்டார் ஆகியவற்றால் அலங்கரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கர்ணாவதாக மாநிலம் பெங்களூருவில் பிரபல மால் ஒன்றில் வைக்கப் பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் இந்தியாவின் மிகப் பெரிய மரமாக காண்போரைக் கவர்ந்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் செயற்கை நீரூற்றுக்கு மத்தியில், நூறு அடி உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஓங்கி உயர்ந்து காட்சி அளிக்கிறது. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்தும் , புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
அகதிகள் வருவதைத் தடுக்க பிரான்சில் புதிய சட்டம்
அல்ஜீரியா, போர்ச்சுகல் , மொராக்கோ, துருக்கி உட்பட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்ட விரோதமாக அகதிகள் நுழைவது வழக்கமாக உள்ளது, அகதிகளால் உல் நாட்டுப் பிரச்சனைகள் எழுவதால்,பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து , சட்ட மாற்றங்களைக் கொண்டு வர புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் , அகதிகளால் அமைதியின்மை தோன்றக் கூடிய நிலை இருந்ததாகவும், அதனைத் தடுக்க வெட்னரியது அரசின் கடமை என்றும் , வெள்ளம் போல் நுழையும் அகதிகளைத் தடுக்குக் கவசமாக இந்த சட்டம் அமையும் என்றும் தெரிவித்தார்.
Wednesday Dec.20 2023
எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது
எழுத்தார்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் சாஹித்ய அகாடமி விருது வழங்கி வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகங்களுக்கான சாஹித்ய அகாடமி விருது இன்று 20ம் தேதி புதன் கிழமை அறிவிக்கப் பட்டது. இந்த விருது 24 மொழிகளில் வெளிவந்த புத்தகங்களுக்காக அறிவிக்கப்பட்டது. அந்த வாயில் தமிழில் நீர்வழிப் படூஉம் என்ற நாவலுக்காக, எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்ப ட்டுள்ளது . விருது அறிவிக்கப் பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி விருதுகள் வழங்கப் பட உள்ளன.
உலகில் முதல் முறையாக தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம்
கலிஃபோர்னியா மாகாணத்தில் பசடேனா பகுதியில் கலி எக்ஸ்பிரஸ் என்ற தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம் திறக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் தானியங்கி சமையல் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் மிஸோ ரோபோட்டிக்ஸ், கலி குழுமம் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு உதவும் பாப் ஐடி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த உணவகத்தை
செயல் படுத்தி உள்ளன. இங்குள்ள மிசோ ரோபோடிக்ஸ் இயந்திரங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ருசிகரமான உணவுகளைத் தயார் செயகின்றன. பாப் ஐடி தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை படம் பிடித்து அவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து உணவுக்குத் தேவையான பணம் பெறப்படுகிறது
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜூனா விருது
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு நாட்டின் இறங்காவது உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப் படுகிறது .இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி , தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேர் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
Tuesday, Dec.19 2023
ஐ பி எல் வரலாற்றில் அதிகதொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ பி எல் 20 ஓவர் கிரிக்கெட் பதினேழாவது சீசன் போட்டிக்கான மினி ஏலம் கடந்த 19ம் தேதி டுபாயில் நடந்தது. இந்த ஏலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 333 வீரர்களில் 77 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அதிக பட்சமாக ஆஸ்திரேலிய அணி வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கோல்கட்டா அணியால் ஏலத்தில் எடுக்கப் பட்டார். ஐ பி எல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறையாகும்.
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் இண்டிகோ சாதனை
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ விமான நிறுவனம் பெற்றுள்ளது கடந்த 2022ம் ஆண்டு இண்டிகோ விமானங்களில் 7.8 கோடி பேர் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு இண்டிகோ விமானம் 10 கோடி பேரை ஏற்றிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளது . கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 22 சதவீதம் அதிகமாகும். 18ம் தேதி டெல்லி பெங்களூரு விமானப் பயணம் முடிவடைந்த நிலையில் இண்டிகோ இந்த சாதனையை எட்டியுள்ளது .
Monday, Dec.18 2023
போரை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்
காசாமீது இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில், போரை நிறுத்த பிரான்ஸ் நாடு வலியுறுத்தி உள்ளது. இந்தப் போரில் அப்பாவி மக்கள் அதிக அளவில் கொல்லப் படுவதாக பிரான்ச கடந்த ஞாயிற்றுக் கிழமை வருத்தம் தெரிவித்த நிலையில், அந்நாட்டில் கவலையை பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா இஸ்ரேலிடம் தெரிவித்தார்.
சுவீடன் நாட்டில் புதிய விசா கட்டுப் பாடுகள்
ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் ஷெங்கன் விசா எனப்படும் ஒரே விசா முறை நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் நாடும் அங்கீகரித்து வந்தது. இந்நிலையில் சுவீடெனில் தங்க விரும்புபவர்கள் தாங்களாகவே வேலை தெடிக் கொள்ள வேண்டும் என்றும் , சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூகக் குறீயியீடுகளைக் குறித்த புரிதல் இருக்க வேண்டுமென்பது கட்டாயம் என்றும், சுவீடிஷ் மொழயில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப் படுவர் என்றும், சுவீடெனில் கல்வி கற்று,வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப் படும் என்றும், சுவீடெனில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.
Sunday, Dec.17.2023
ஹோட்டலில் உணவு விநியோகிக்கும் பணியில் ரோபோ
திருப்பூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் முதல் முறையாக ரோபோ பயன்படுத்தப் படுகிறது. உணவகத்தில் உள்ள சப்ளையர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்து சமையல் செய்பவர்களிடம் வழங்கி, உணவு தயாரானதும் ரோபோவின் அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் வைக்கப் படுகிறது. ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் டேபிள் எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், வாடிகையாளர்கள் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்துச் செல்கிறது
Saturday, Dec.16 2023
துணிச்சலான நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்-ஜனாதிபதி திரௌபதி முர்மு
பாகிஸ்தானுடன் 1971ம் ஆண்டுப் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டு தோறும் வெற்றிகரமாகக் கடை பிடிக்கப் படுகிறது. வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ முகாமில் டிசம்பர் 15ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இது குறித்து டிசம்பர் 16ம் தேதி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,1971 போரின் போது நமது ஆயுதப் படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூறுகிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு வெற்றி தினம் அன்று தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் செல்ல 33 நாடுகளுக்கு விசா தேவையில்லை
இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் நாட்டுக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை என டிசம்பர் 15ம் தேதி அந்நாட்டு அரசு அறிவித்தது. இது குறித்து ஈரான் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில் ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்றும், இதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
Friday, Dec.15 2023
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இணைய சேவை முடக்கம்
ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஏறக்குறைய இரண்டரை மாதங்களாக நடந்து வருகிறது. காஸாவின் வடக்கு , மத்திய மற்றும் தெற்கு காசா என அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் காஸாவில் மீண்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், காசாவில் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப் பட்டதால், பலியான மக்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் என்றும் பாலஸ்தீன தொலைத்த தொடரபு நிறுவனங்கள் கூறியுள்ளன
Thursday Dec.14.2023
ஒடிசாவில் ஐந்து ரூபாய் கட்டணத்தில் அதி நவீன பேருந்துப் பயணம்
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவையை முதற்கட்டமாக ஒடிசாவில் கோரபத் மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார். கிராமப்புறங்களில் இருந்து மாவட்டத்தின் தலைநகருக்கு செல்ல விரும்பும் பெண்கள் மாணவர்கள் , மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஐந்து ரூபாய் கட்டணத்தில்இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதற்கட்டமாக ஆறு மாவட்டங்களில் 234 கிராமப் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி திரைப்படம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த சிவா கார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்த கொட்டுக்காளி திரைப்படம் எழுபத்தி நான்காவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதசே திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்திரைப் படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றுள்ளது.
Wednesday, Dec.13 2023
காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் உடனடியாக மனிதாபிமானப் போர் நிறுத்தம் கோரி, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலை நிறுத்துதல் என்ற தீர்மமானத்தை ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கிற்கான ஐக்கியநாடுகளின் பொதுச்சபை அவசர அமர்வில் இந்தியா போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
போலந்து நாடு பிரதமராக டொனால்ட் டஸ்க் பதவியேற்பு
போலந்தில் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி நடை பெற்ற பொதுத் தேத்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மத்தியவாதக் கட்சித் தலைவர் டொனால்டு டஸ்க் தலைமையில் அரசு அமைக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் டிசம்பர் 12ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் டொனால்டு டஸ்க் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றதால் இன்று 13ம் தேதி புதன் கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் டொனால்டு டஸ்க் பிரதமராகப் பதவியேற்றார்.
Tuesday, Dec.12 2023
சிங்கப்பூரில் தானியங்கி பேருந்துகள் இயக்கம்
சிங்கப்பூரில் மக்கள் பயன்பாட்டிற்கு தானியங்கி பேருந்துகளை இயக்க வீரைட் (Weride) என்னும் தனியார் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. வீரைட் நிறுவனம் தானியங்கி போக்குவரத்துத் தொழில் நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த வீரைட் தானியங்கிப் பேருந்துகள் குறைந்த வேகத்தில், குறிப்பிட்ட வழிகளில், குறைந்த போக்குவரத்து நெரிசல்கள் உள்ள பகுதிகளில் தற்போது இயக்கப்படுகிறது. இது சோதனை ஓட்டம் என்பதால் பேருந்தில் ஒரு ஓட்டுநர் அவசரகால பாதுகாப்பிற்காக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தானியங்கிப் பேருந்துகளை இயக்க சிங்கப்பூரின் தரை வழிப் போக்குவரது ஆணையம் M 1மற்றும் D1 என்னும் இரண்டு அதிகாரப் பூர்வ அனுமதிகளை வழங்கி உள்ளது.
Monday , Dec.11 2023
வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதகளைப்பெற இணையதளம்
மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த கன மழையின் பாதிப்பால் மாணவ மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சேதமடைந்த சான்றிதழ்களுக்குப் பதிலாக நகல்களைப் பெற்றிட இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ள செய்தியில், சேதமடைந்த கல்வி சான்றிதழ்களை www.mycertificates.in என்ற இணைய தளத்தில் மாணவ மாணவிகள் தங்கள் சான்றிதழ் விபரங்களைப் பதிவேற்றி , சான்றிதழ்களின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரான்சில் திருவள்ளுவர் சிலை
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகரில் திருவள்ளுவரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது இந்த சிலையை புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் பிரான்ஸின் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது நமது கலாச்சார பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்.அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்
Sunday, Dec.10 2023
இருபது நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசா இந்தோநேஷியா அறிவிப்பு
இந்தோனேஷியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க இந்தோனேஷியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் முன்வந்துள்ளது. தற்போதுள்ள விசா விலக்குகள் உள்ள நாடுகளைத் தவிர அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்தது.என்று ஜகார்த்தாவில் சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் சான்டியாயாகா தெரிவித்தார்
Saturday, Dec.9 2023
உலகின் மிகப் பெரிய வர்த்தக மையக் கட்டிடம்
குஜராத் மாநிலம் சூரத் நகரில் 35.54 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வைர வர்த்தக மையம் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக, ஒவ்வொரு அமைப்புகளிலும் 15 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவ தலைமை அலுவலகம் பென்டகன் கட்டிடம்தான் உலகிலேயே மிகப் பெரிய கட்டிடமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வர்த்தக மையம் உலகின் மிகப் பெரிய கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இக்கட்டிடத்தை வரும் டிசம்பர் பதினேழாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் .
Friday , Dec.8 2023
சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா L 1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ கடந்த செப்டேம்பேர் 2ம் தேதிஆதித்யா L 1 விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் பொறுத்தப்பட்டுள்ள சூட் எனப்படும் தொழில் நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படமெடுக்கப் பட்டுள்ளன . சூரியனின் ஒளிக் கோளம் கிரோமோஸ்பியர் குறித்த சிக்கலான வடிவம் பற்றிய தெளிவான புகைப் படங்களை ஆதித்யா L 1 விகண்கலம் படம்பிடித்துள்ளதாகவும், சூரியனைப் பற்றிய பல புதிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Thursday, Dec.7 2023
கொடி நாள் நிதி அளிக்க பிரதமர் வேண்டுகோள்
இந்திய இராணுவத்தின் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி படை வீரார்க்கொடி நாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஏழாம் தேதி வியாழக் கிழமை கொடி நாள் தினத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த கொடி நாளை நம் இராணுவ வீரர்களை அவர்களின் தைரியம்,நம்பிக்கை, தியாகத்துக்காக அங்கீகரிப்போம். நம் தேசத்தை காப்பதில் அவையே ஒப்பற்றது. இந்த நாளில் ஆயுதப் படை வீரர்களின் கொடி நாள் நிதியை அளிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் உயரிய விருது பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர்
சிங்கப்பூரில் ஆண்டு தோறும் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது வழக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான கலை விருதை இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்த் பெற்றுள்ளார். இந்த விருது நாற்பத்தி ஒன்பது லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதாகும். சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்