Sunday Apr 28, 2024
யூக்ரேனுக்கு நூறு மில்லியன் டாலர் ராணுவ உதவி - ஆஸ்திரேலியா அறிவிப்பு
இரண்டு ஆண்டுகளைக் கடந்து யூக்ரேன் ரஷ்ய போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் யூக்ரேன் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரிச்சர்ட் மார்லஸ்
ஆஸ்திரேலியா அரசு சார்பில் யூக்ரேனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, ட்ரோன்கள், மற்றும் வெடி மருந்து உட்பட நூறு மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கப்படும் என்றும், யூக்ரேனுடன் ஆஸ்திரேலியா உறுதியாகத் துணை நிற்கும் என்றும் கூறினார்.
Saturday Apr 27,2024
பிணைக் கைதிகளை விடுவிக்கக் கடைசி வாய்ப்புத் தருகிறோம் - இஸ்ரேல் கெடு
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் வடக்கு மற்றும் மத்திய காசாவிலிருந்து பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் தெற்குக் காசாவில் உள்ள ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். ரபா நகரில் தரை வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்குக் கடைசி வாய்ப்புத் தருகிறோம் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.
Friday Apr 6, 2024
வெனிஸ் நகரைச் சுற்றி பார்க்கக் கட்டணம்
இத்தாலியின் சுற்றுலா நகரமான வெனிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடை முறையை அமல்படுத்தியுள்ளது. அதன் படி வெனிஸ் நகரைச் சுற்றி பார்க்க ஒரு நாளைக்கு ஐந்து யூரோக்கள் வசூலிக்கப் பட உள்ளது. பதினான்கு வயதுக்கு உட்படாகுழந்தைகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 262 ரன்களைத் துரத்திப பிடித்து பஞ்சாப் அணி வரலாற்று வெற்றி
பதினேழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 26ம் தேதி கொல்கத்தாவில் நடந்த 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஒவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அடுத்து 262 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை சேஸ் செய்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
Thursday Apr 25, 2024
செவ்வாய் கிரகம் போல் காட்சி அளித்த ஏதென்ஸ் நகரம் - நாசா விளக்கம்
கிரீஸ் நாட்டுத் தலைநகர் ஏதென்ஸ் நகரம் 24ம் தேதி திடீரென ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்தது. இதனால் சுற்றுலா வந்தவர்களும், உள்ளூர் வாசிகளும் பீதி அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து நாசா அளித்த விளக்கத்தில் வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சைப்ரஸ், மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சமயத்தில் மேகக் கூட்டங்கள் நகர்வது வாடிக்கைதான். இந்நிலையில் இந்தக் மேகக் கூட்டத்துடன் சஹாராப் பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் ஏதென்ஸ் நகரை ஆரஞ்சு நிறப் போர்வை போர்த்தியது போல புழுதிப் புயல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் - பதினேழு நாடுகளின் கூட்டறிக்கை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் காஸாவில் 200 நாட்களுக்கு மேல் பிடித்து வைக்கப் பட்டிருக்கும் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோருகிறோம், அவர்களில் எங்கள் நாட்டினரும் உள்ளனர், பிணைக் கைதிகளின் விடுதலை, மற்றும் காஸாவில் உடனடி மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் அந்த ஒப்பந்தம் காஸாவில் கூடுதல் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சேர்க்கும் என்பது உட்பட பல அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிக்கையில் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட பதினேழு நாடுகள் இணைந்துள்ளன.
Wednesday Apr 24, 2024
தமிழ் நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழ் நாட்டில் வெப்ப அலை காரணமாக பல இடங்களில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படியும் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், உடல் வெப்ப அலை தாக்கத்தின் போது பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Tuesday Apr 23, 2024
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி
பதினேழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 23ம் தேதி செவ்வாய்கிழமை சென்னையில் நடந்த 39வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜயன்ட் அணியும் மோதின. முதலில் விளையாடிய சென்னை அணி இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் இலக்குடன் அடுத்து விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Monday Apr 21, 2024
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
பிடே (FIDE) கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொராண்டோ நகரில் நடந்தது. இதில் கடைசி சுற்றான 14வது ஆட்டம் 22ம் தேதி திங்கட்கிழமை நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் குகேஷ் ஆட்டத்தை ட்ரா செய்ததன் மூலம் ஒன்பது புள்ளிகளைப் பெற்று முத்லிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதோடு சாம்பியன் படத்தையும் வென்றார். இந்நிலயில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குகேஷுக்குத் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் பதினேழு வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷுக்கு வாழ்த்துக்கள், உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Sunday Apr 21, 2024
சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் இயக்கம்
சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட மிகப் பெரிய சரக்கு ரயில் சோதனை ஓட்டமாக 20ம் தேதி சனிக்கிழமை இயக்கப்பட்டது. சுமார் நான்கு கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் மூலம் ஒரே நேரத்தில் 30000 டன் பொருட்கள் வரை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக இந்த ரயிலில் 4 மின்சார என்ஜின்கள் பொருத்தப் பட்டுள்ளன. நாட்டின் வர்த்தகத்தில் இந்த ரயில் முக்கிய பங்கு வகிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.
Saturday Apr 20, 2024
இந்தியாவில் 2026ம் ஆண்டு ஏர் டாக்ஸி பயன்பாட்டிற்கு வரும்
இண்டிகோவை நிர்வகித்து வரும் இன்டர்குளோப் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் ஆகியவை இணைந்து இந்தியாவில் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட வான் வெளி டாக்ஸி சேவையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வரும் 2026ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. முதற்கட்டமாக டெல்லியிலிருந்து ஹரியானாவில் குருகிராமுக்கு ஏர் டாக்ஸி இயக்கப் பட உள்ளது. டேல்லி ஹரியானா இடையிலான 125 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஏர் டாக்ஸி ஏழு நிமிடங்களில் சென்றடையும் என்று கூறப் படுகிறது.
Friday Apr 19, 2024
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு
இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட இருபத்தியொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த முதற்கட்ட வாக்குப் ப்திவு இந்திய நேரம் காலை ஏழு மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணியுடன் நிறைவடைந்தது.. தமிழகத்தில் 19ம் தேதி இரவு ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் 78.72 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிக பட்சமாகத் திரிபுராவில் 79.90 சாதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
Thursday Apr 18, 2024
போக்குவரத்துப் போலீசாருக்கு ஏ.சி. ஹெல்மெட்
இந்தியாவில் கோடை காலம் தொடங்கியது முதல் பல நகரங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்துப் போலீசாருக்கு ஏ.சி. ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்துப் போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் வலைத் தளங்களில் பரவி வருகிறது. குஜராத் ஐஐஎம் (IIM ) மாணவர்கள் உருவாக்கிய இந்த ஹெல்மெட் பேட்டரியில் இயங்கக் கூடியது.
உலகின் சிறந்த விமான நிலையம் பட்டியலில் கத்தார் முதலிடம்
ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் விமான நிலையங்களைத் தர வரிசைப் படுத்தி விருது வழங்கி வருகிறது. இந்த வகையில் இந்தஆண்டிற்கான சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கத்தார் நாட்டின் தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப்
பிடித்துள்ளது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாம் இடத்திற்கு வந்தது. தென் கொரியா தலை நகர் சியோல் இன்சீயோன் விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க் லகார்டியா விமான நிலையம் ஐம்பத்தி ஏழாவது இடத்திலிருந்து முப்பத்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
Wednesday Apr 17, 2024
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது புதிய தடைகள் - அமெரிக்கா முடிவு
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்குப் பதிலாக, இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஜி 7 தலைவர்கள்கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுலைவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நட்பு நாடுகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்றும், வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப் படும் என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எடுக்கப் பட்ட மிகக் குறைந்த பட்ச ரன்கள்!
இந்தியாவில் நடந்து வரும் பதினேழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பதினேழாம் தேதி புதன்கிழமை அகமதாபாத்தில் நடந்த 32வைத்து லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மிகக் குறைந்தபட்ச ரன்கள் இதுவாகும். அடுத்து விளையாடிய டெல்லி காப்பிடல்ஸ் அணி 8.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tuesday, Ap16, 2024
துபாய், ஷார்ஜா,அபுதாபி நாடுகளில் கனமழை
அரபு நாடுகளான துபாய், ஷார்ஜா,அபுதாபி ஆகிய நாடுகளில் பதினைந்தாம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டு போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப் பட்டது. மழை பதினேழாம் தேதி வரை நீடிக்கும் என ஐக்கிய அமீரக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டு கொள்ளப் பட்டுள்ளார்கள். மற்றொரு அரபு நாடான ஓமனில் சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
செயற்கைக் கோள் மூலம் செல்போன்களை இயக்கும் சோதனை வெற்றி பெற்றதாக சைனாஅறிவிப்பு
செல் போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக் கோள் மூலம் ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியைக் கொண்டு வர சைனா ஆய்வு மேற்கொண்டிருந்தது. இதற்காக சைனா செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பி 2016ம் ஆண்டு முதல் சோதனைகளை நடத்தி வந்தது. இந்த சோதனை வற்றி பெற்றுள்ளதாக சைனா அறிவித்துள்ளது. இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் எனக் கூறப்படுகிறது. இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலாமாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Monday Apr. 15, 2024
உலகின் மிகப் பெரிய தேர்தல் இது - ஜெர்மன் தூதர் புகழாரம்
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 19ம் தேதி முதற்கட்டமாக 21 மாநிலங்களில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் எழு வாரங்கள் தேர்தல் நடை பெறவிருக்கிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மன் அளித்துள்ள பேட்டியில், உலகின் மிகப் பெரிய தேர்தல் இது, இதைக் காண ஆவலாய் இருக்கிறேன் என்றும் , தொடர்ந்து ஏழு வாரங்கள் நடைபெறவிருக்கும் இந்த தேர்தல் முடிவுகளை ஜூன் முதல் வாரத்தில் அறிய ஆவலுடன் உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
Sunday Apr.14, 2024
இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான்
சிரியாவில் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்குப் பதிலாக, ஈரான் இருநூறுக்கும் அதிகமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. இதையடுத்து இஸ்ரேல் முழுவதும் வான்வெளித் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. இஸ்ரேல் மீது வீசப்ப பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்துத் தாக்கி அழித்தது. சில ஏவுகணைகள், மற்றும் ட்ரான்கள் இஸ்ரேலில் விழுந்து லேசான சேதங்களை ஏற்படுத்தியது.
Saturday Apr.13, 2024
தமிழ் புத்தாண்டு இந்திய ஜனாதிபதி வாழ்த்து
தமிழ் புத்தாண்டு, விசூ உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மூ தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக விளங்கும் இவ்விழாக்கள் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கின்றன. நமது வாழ்வில் புதிய சக்தியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. நமக்கு உணவு அளிப்பவர்களான விவசாயிகளின் கடின உழைப்பைக் கவுரவிப்பதோடு, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாக்கள் அனைவரின் வாழ்விலும் வளம், அமைதியைக் கொண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Friday Apr 12, 2024
விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர்
அட்லாண்டா மாநிலத்தில் வசித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சிறந்த கோபி தொடக்குரா என்பவர் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் 25 திட்டத்தின் கீழ் (New Shepard's 25th Mission) விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல தேர்வாகி உள்ளார். இவருடன் ஐந்து பேர் விண்வெளி சுற்றுலா செல்ல உள்ளனர். கோபி தொடக்குரா விண்வெளி சுற்றுலா செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
போப் பிரான்சிஸ் செப்டம்பர் மாதம் நான்கு நாடுகளுக்குப் பயணம்
போப் பிரான்சிஸ் வரும் செப்டம்பர் மாதம் இந்தோனேஷியா, கிழக்கு திமோர், பப்புவா நியூ கினி, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் வ்ன்று வாடிகன் தேவாலயம் அறிவித்துள்ளது. இதன் படி போப் பிரான்சிஸ் செப்டம்பர் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஜகார்த்தா, போர்ட் மோர்ஸ்பி, வனிமோ, பப்புவா நியூ கினி , கிழக்கு திமோர், மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு செல்கிறார். இதுவரை போப் பிரான்சிஸ் தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட பயணங்களில் மிக நீண்ட பயணம் இது என தெரிவிக்கப் பட்டுள்ளது .
Thursday Apr 11, 2024
இந்தியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையராக ( High Commisioner) லிண்டி கேமரூன் (Lindy Cameron) நியமனம்
இந்தியாவுக்கான புதிய பிரிட்டன் உயர் ஆணையராக லிண்டே கேமரூன் நியமிக்கப் பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. லிண்டி கேமரூன் தற்போது பிரிட்டனில் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். இம்மாத இறுதியில் லிண்டி கேமரூன் இந்தியாவுக்கான புதிய பிரிட்டன் உயர் ஆணையராகப் பொறுப்பேற்க டெல்லி வருகிறார.
Wednesday Apr10, 2024
சந்திராயன் மூன்று குழுவினருக்கு அமெரிக்காவில் விருது
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் மூன்று விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறக்கப் பட்டது. இதனால் நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தைத் தரை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்நிலையில் காலராடோவில் நடந்த வருடாந்திர விண்வெளி கருத்தரங்கதில் விண்வெளி ஆராய்ச்சிக்காக சந்திராயன் மூன்று திட்டக் குழுவினருக்கு மதிப்பு வாய்ந்த ஜான் எல். "ஜாக்" ஸ்விகர்ட் ஜூனியர் விருது (John L. "Jack" Swigert Jr. Award) வழங்கப் பட்டது. இந்த விருதை இஸ்ரோ சார்பில் ஹ்யூஸ்டன் நகரின் இந்திய துணைத் தூதர்
T.C. மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார்.
Tuesday Apr 9, 2024
இஸ்ரேல் ஹமாஸ் புதிய நிபந்தனைகளுடன் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை
ஏறக்குறைய ஆறுமாதங்களாகத் தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைக்கான புதிய திட்ட முன் மொழிவை இரு தரப்பிற்கும் வழங்கியுள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது. ஆறு வாரத்திற்கான போர் நிறுத்தம், ஹமாஸ் பிணைக் கைதிகள் நாற்பது பேர் விடுதலை, எழுநூறு பாலஸ்தீனர்கள் விடுதலை உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த முன் மொழிவில் இடம் பெற்றுள்ளது. ஹமாஸ் இதை பற்றிப் பரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள்ளது
Monday Apr 7, 2024
முழு சூரிய கிரகணம் - வட அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் காணலாம்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வந்து, சந்திரன் சூரியனை மறைப்பதால் சூரியகிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று ஏப்ரல் எட்டாம் தேதி நடை பெறுகிறது. வட அமெரிக்கா கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம். அமெரிக்காவில் டெக்சாஸ், ஒக்லஹோமா , இல்லினாய்ஸ், கென்டக்கி , நியூயார்க், வெர்மாண்ட் உள்ளிட்ட சில இடங்களில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி அபாரவேற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 8ம் தேதி திங்கட் கிழமை சென்னையில் நடந்த இருபத்தி இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய கொல்கட்டா அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அடுத்து 138 ரன்களில் இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Sunday Apr 7, 2024
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பத்திரமாகத் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்
அமெரிக்கா, சீன, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பலநாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதற்காக அமெரிக்க விண்வெளி வீரர் லோரல் ஓ ஹாரா, ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி, மற்றும் பெலாரஸ் நாட்டின் மெரினா வாசிலேவ்ஸ்காயா ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் அங்கு தங்கி பலவேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் சோயுஸ் விண்கலம் மூலம் 6ம் தேதி கஜகஸ்தானில் பத்திரமாகத் தரை இறங்கினர். இவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Saturday அப்பர் 6, 2024
அமெரிக்க நிலநடுக்கத்தில் குலுங்கிய சுதந்திர தேவி சிலை (Statue of Liberty)
அமெரிக்காவில் நியூயார்க், நியூ ஜெர்ஸி நகரங்களில் ஏப்ரல் 5ம் தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஐ.நா. கட்டிடம் குலுங்கியதாக செயதிகள் தெரிவித்தன. இந்நிலையில் 6ம் தேதி மீண்டும் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள சுதந்திர தேவி சிலை(Statue of Liberty) குலுங்கிய செய்தி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Friday Apr 5, 2024
காசாவுக்குக் கூடுதல் உதவிகள் கிடைக்க எரேஸ் எல்லையைத் திறக்க இஸ்ரேல் அனுமதி
போர் காரணாமாகக் கசா மக்கள் உணவு தண்ணீர் கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் காசா மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்காக, போர் காரணாமாக மூடப் பட்ட இஸ்ரேல் காசா முனை இடையே உள்ள எரேஸ் எல்லயைத் திறக்க இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Thursday Apr 4, 2024
நிலவில் வாகனம் - நாசா மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
அமெரிக்க விண்வெளி மையமான நாசா Artemis Missions திட்டத்தின் கீழ் நிலவில் இயங்கும் வாகனத்தை வடிவமைக்கும் பணியை செயல் படுத்தி வருகிறது. இந்த வாகனத்தை வடிவமைக்கும்பணி இன்டியூட்டிவ் மெஷின்ஸ் (Intuitive Machines), லுனார் அவுட்போஸ்ட் (Lunar Outpost), மற்றும் வென்டுரி ஆஸ்ட்ரோலேப் (Venturi Astrolab) ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வடிவமைப்பதற்காக 4.6 பில்லியன் டாலரை நாசா ஒதுக்கியுள்ளது. இந்த வாகனத்தில் தானியங்கி ஓட்டுநர் வசதி, வழிகாட்டி வசதிகள் ஆகியவை இணைக்கப் பட வேண்டியிருக்கும் என்றும், ஒரு ஆண்டு ஆய்வுக்குப் பின், இந்த வாகனம் நிலவுக்கு அனுப்பப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது
Wednesday Apr 3, 2024
பூமியை நெருங்கும் 12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ (Comet 12P/Pons-Brooks) வால் நட்சத்திரம்
சுமார் 30 கிலோமீட்டர் நீள மையப் பகுதியைக் கொண்ட 12 பி பான்ஸ் ப்ரூக்ஸ் என்ற வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருகிறது. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் இந்த வால் நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கி விட்டதாகவும், தொலை நோக்கி மூலம் இதை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால் நட்சத்திரம் வரும் ஜூன் மாதம் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும், இதன் பிறகு இந்த வால் நட்சத்திரம் 2095ம் ஆண்டுதான் தோன்றும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 3ம் தேதி புதன் கிழமை விசாகப் பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டெல்லி அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
Tuesday Apr 2, 2024
கனடா நாட்டிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்
தமிழ் நாட்டில் பள்ளிக்கு காலை நேரத்தில் செல்லும் குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பதைத் தடுக்கும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கனடா நாட்டிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைத் தளத்தில் கூறியிருப்பதாவது 2ம் தேதி செவ்வ்வாய்க் கிழமை கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப் போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
காங்கோ நாட்டில் முதல் பெண் பிரதமர் தேர்வு
மேற்கு மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் முதல் பெண் பிரதமராக முன்னாள் திட்டத் துறை அமைச்சர் ஜுடித் சுமின்வா டுலுக்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடை பெற்ற தேர்தலில் அந்நாட்டின் அதிபர் பெலிக்ஸ் ஷிசேக்கெடி தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டுலுக்காவை பிரதமராக நியமித்துள்ளார்.
Monday Apr 1, 2024
தமிழ் நாட்டில் எலெட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு
2021ம் ஆண்டு 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ் நாட்டின் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி தற்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் செல் போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் பங்கு வகிக்கும் நாம் நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடை போடுவோம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
துருக்கி தேர்தலில் எதிர்கட்சி வெற்றி
துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். உள்ளாட்சித் தேர்தல் தான் என்றாலும் 81 மாகாணங்களில் 35 மாகாணங்களை முக்கிய எதிர்க்கட்சியான சி.ஹெச்.பி வென்றது . அதிபர் எர்டோகன் கட்சிக்கு 24 மாகாணங்கள் மட்டுமே கிடைத்தன. முக்கிய நகரங்களான அங்காராவிலும், இஸ்தான்புல்லிலும் சி ஹெச் பி வெற்றி பெற்றது.
Sunday Mar 31, 2024
மார்ச் 31ம் தேதி ஐபில் டவர் தினம்
இன்று மார்ச் 31ம் தேதி ஐபில் டவர் தினம் மார்ச் 31ம் தேதி கடை பிடிக்கப் படுகிறது. சுமார் 1083 அடி உயரம் கொண்ட இந்த டவரை வடிவமைத்தவர் கஸ்டவ் ஐபில் என்பவராவார். இதன் கட்டுமானப் பணி 1887ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1889ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிக்கப்பட்டது. இந்த தினத்தை நினைவு படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி ஐபில் டவர் தினமாகக் கடை பிடிக்கப் படுகிறது.
Saturday Mar 30, 2024
தமிழக வேளாண் விஞ்ஞானி M.S.சுவாமிநாதன் உட்பட நான்கு பேருக்கு பாரதரத்னா விருது
தமிழகத்தைச் சேர்ந்த M.S.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் P. V. நரசிம்ம ராவ் , சவுத்ரி சரண்சிங், பீஹார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூர், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி ஆகிய ஐவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப் படும் என்று கடந்தமாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மார்ச் 30 தேதி சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடை பெற்ற விழாவில் பி.V.நரசிம்ம ராவ் , சரண்சிங், M.S.சுவாமிநாதன், கற்பூரி தாக்கூர் ஆகியோரின் குடும்பத்தினரிடம் பாரத ரத்னா விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மூ வழங்கினார். முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு அறிவிக்கப் பட்ட விருதை அவரது வீட்டிற்கு சென்று வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது
Friday Mar 29, 2024
பெண் கைதிகள் பாதங்களைக் கழுவி முத்தமிட்ட போப் ஆணடவர்
ஈஸ்டர் தவக் காலத்தை ஒட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவும் நிகழ்ச்சி மார்ச் 28ம் தேதி வியாழன் இரவு ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறைச்சாலையிலுள்ள 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களை அவர் முத்தமிட்டார். இதற்குமுன் போப் ஆணடவராக இருந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை வாடிகன் தேவாலயத்தில் தான் கடை பிடித்தார்கள். முதன் முறையாக போப் பிரான்சிஸ் சிறையில் இந்த புனித சடங்கை நடத்தியுள்ளார்.
Thursday Mar 28, 2024
அடுத்த தலைமுறை விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
பிரபல வாகன தயாரிப்பு நிறுமவனமான ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பசுமைப் புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக உள்ள இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன் படுத்தப் பட உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் தொழில் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
Wednesday Mar 27, 2024
மாஸ்கோ தாக்குதல் - அமெரிக்கா இங்கிலாந்து, உக்ரேன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இசை அரங்கில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரேன் ஆகிய நாடுகள் இருப்பதாக ரஷ்ய உளவுத் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் ஏற்கெனவே கடந்த காலங்களில் ரஷ்யாவில் இது போன்ற தாக்குதல்களை நடத்தி உள்ளன என்றும், மேற்கத்திய நாடுகளும் , உக்ரேனும் ரஷ்யாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன என்றும் அவர் கூறினார்.
ஹைதியில் ஆயுதக் குழுவினரின் தாக்குதலால் பசி பட்டினியால் வாடும் மக்கள்
கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயத்தக் குழுவினர் பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட் ஆ ப்ரின்ஸில் உள்ளகாவல் நிலையங்கள், விமான நிலையம், பள்ளிக் கூடங்கள்,
மருந்தகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஆயத்தக் குழுவினரின் வன்முறை காரணமாக உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பசி பட்டினியால் வாடத் தொடங்கியுள்ளனர். இதற்கிடேய பிரதமர் ஏரியல் ஹென்றி இடைக்கால கவுன்சில் உருவாக்கப் பட்டவுடன் பதவியை ராஜனாமா செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார்
Tuesday Mar 26, 2024
முக்கிய கோரிக்கைகளை இஸ்ரேல் புறக்கணித்ததால் போர் நிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ் அமைப்பினர்
இஸ்ரேல் தாக்குதலை தற்காலிகமாக உடனே நிறுத்த வேண்டும் எனவும், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஐ. நா. சபையில் 26ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் முழுமையான போர் நிறுத்தம் காசா முனையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுதல், பாலஸ்தீனர்கள் தங்கள் பகுதிகளுக்குத் திரும்புதல், உண்மையான கைதிகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகிய முக்கிய கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் இதுவரை பதில் அளிக்காததால் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளனர்.
Monday Mar 25, 2024
ரஷ்யத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு பூட்டின் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி அரங்கில் கடந்த மார்ச் 22ம் தேதி தாக்குதலை அடுத்து 24ம் தேதி நாள் முழுவதும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் பூட்டின் உத்தரவிட்டார். இதனால் அந்நாட்டு அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூட்டின் தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினார்.
போலந்து வான்வெளியில் நுழைந்த ரஷ்யாவின் ஏவுகணை
ரஷ்யா உக்ரேன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யா ஏவும் ஏவுகணைகளில் ஓன்று போலந்து நாட்டின் வான் வெளியில் நுழைந்ததாக போலந்து நாடு குற்றம் சாட்டியுள்ளது. உடனடியாக இது தொடர்பாக ரஷ்யா விளமளிக்க வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது. மேலும் F 16 போர் விமானத்தை செயல் படுத்த நேட்டோ உறுப்பினர் நாட்டைத் தூண்டுகின்றனர் எனவும் எச்சரித்துள்ளது.
Sunday Mar 24, 2024
ஐ.பி.எல்.தொடரில் லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 24ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டில்யில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜயன்ட் அணியும் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல் அஹமதாபாத் நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Saturday Mar 23,2024
தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது இந்த நூற்றாண்டில் மிகப்பெரும் அவலம்
மார்ச் 22ம் தேதி குன்னூர் அருகே கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப் பட்டது அப்போது ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன் பேசும்போது , 1992ம் ஆண்டு ரியோ டீ ஜெனீரோவில் கூடிய ஐ. நா.சபையின் தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22ம தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப் படுகிறது. உலக நாடுகளில் ஐந்தில் ஒரு குழந்தை தண்ணீரின்றித் தவிக்கிறது. 6.85 கோடி பேர் குடி நீர் கிடைக்காமல் புலம் பெயர்ந்துள்ளனர். 2050ம் ஆண்டுக்குள் 570 கோடி பேர் வருடத்தில் ஒரு மாதமாவது தண்ணீரின்றி அவதிப் படுவார்கள் என்ற புள்ளி விபரபங்கள் நம்மை எச்சரிப்பதாக உள்ளது. இயற்கையின் கொடையான தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் அறிய பொருளாக மாறியிருப்பது இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் அவலம் என்று கூறினார்.
Friday Mar 22, 2024
நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த இடத்தை கண்டுபிடித்த சந்திராயன் 2 ஆர்பிட்டர்
இஸ்ரோ கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நாசாவின் அப்போலோ விண்கலம் மூலம் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் தரை இறங்கினார். அப்போது தான் கால் பதித்த இடத்தில ஒரு கருவியை வைத்தார். அந்தக் கருவி தற்போதும் செயல் பட்டு வருகிறது. அந்த இடத்தை சந்திராயன் 2 ஆர்பிட்டர் கண்டுபிடித்து அதன் புகைப் படத்தை இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சூடானில் உள்நாட்டுப் போர் -இரண்டு லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம்
ஆபிரிக்க நாடான சூடானில் இராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது உள்நாட்டுப் போராக வெடித்தது. இந்தப் போரில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சண்டை தொடர்வதால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மூன்றில் ஒரு பகுதி மக்கள் பட்டினியால் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் வருகிற மாதங்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இறக்கக் கூடும் என்று ஐ .நா. மனிதாபிமான அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Thursday, Mar 21, 2024
ஐ .பி .எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கெய்க் வாட் நியமனம்
2024ம் ஆண்டின் ஐ .பி .எல் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடை பெறவிருக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சாலஞ்சஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. CSK என்று சொல்லப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோணி தலைமயில் ஐந்து முறை கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் 21ம் தேதி வியாழக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க் வாட் நியமிக்கப் பட்டார்.
Wednesday, Mar 20,2024
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - ஏழாவது முறையாக முதலிடம்
ஐ. நா .உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தனி நபர்களின் வாழ்க்கை திருத்தி, தனி நபர் மொத உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்யமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் அமைந்துள்ளது. இந்தப் பட்டியலில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து நாடு ஏழாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியநாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா இருபத்தி மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும் உள்ளது.
Tuesday Mar 19, 2024
காற்று மாசுபட்ட நாடுகளின் தலை நகரங்கள் பட்டியல் வெளியீடு
சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த காற்றுத் தர தொழில் நுட்ப நிறுவனமான IQAIR என்ற நிறுவனம் உலகம் முழுவதும் 134 நாடுகளில் ஆய்வு நடத்தி 2023ம் ஆண்டிற்கான காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளி விபரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகிலேயே அதிக மாசு பட்ட தலை நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானில் நாகூர் நகரம் இரண்டாம் இடத்தையும், காட்மாண்டு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. இது போல காற்று மாசுபட்ட நாடுகளின் தர வரிசையில் வங்காள தேசம் முத்லிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் கடற்கரைகளில் பொது மக்கள் தஞ்சம்
பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலை நகர் ரியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) பதினெட்டாம் தேதி அதிக பட்சமாக 62.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. வெப்பத்தைத் தணிப்பதற்காகவும், இதமான காற்று வாங்குவதற்காகவும், பொது மக்கள் நீர் நிலைகள் அருகேயும், கடற்கரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஈப்பனிமா , மற்றும் கோப்பகபானா கடற்கரைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
Monday Mar 18,2024
ரஷ்ய அதிபர் தேர்தலில் பூட்டின் அமோக வெற்றி
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 15ம் தேதி தொடங்கி மூன்று நாட்களாக நடைபெற்றது. மார்ச் 17ம் தேதி தேர்தல் முடிந்து உடனடியாக வாக்குகள் எண்ணப் பட்டன. இதில் பூட்டின் 87.8% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் பூட்டின் ரஷ்யாவின் அதிபராக இன்னும் ஆறு ஆண்டுகள் நீடிப்பார். இதன் மூலம் ரஷ்ய வரலாற்றில் அதிக வருடங்கள் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பூட்டின் பெற்றுள்ளார்.
Sunday Mar 17, 2024
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்குப் பாராட்டு விழா
சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்றாவது டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தினார். இவர் 100 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி முடித்திருக்கிறார். தமிழக வீரர்களில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதையொட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16ம் தேதி அஸ்வினுக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் அஸ்வினுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசும் 500 தங்கக் காசுகளால் 500 என்ற எண் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.
Saturday Mar 16, 2024
ரஷ்ய தேர்தலில் மீண்டும் பூட்டின் அதிபராக வாய்ப்பு
ரஷ்யாவில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் 15ம் தேதி தொடங்கி மார்ச் 16 மற்றும் 17ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தேர்தலில் பூட்டின் சுயேச்சையாக போட்டியிடும் சூழலில், கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இல்லாததால், பூட்டின் மீண்டும் அதிபராக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் 86% பேர் பூட்டினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உலக சாதனை படைத்தஅயர்லாந்து கிரிக்கெட் வீரர்
அயரல்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் 33 வயதான பால் ஸ்டிர்லிங் மொத்தம் 135 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3463 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 165 சிக்ஸ்சர்கள் மற்றும் 401 பவுண்டரிகள் அடித்துள்ளார். இதனால் சர்வதேதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக பவுண்டரி அடித்தவர் , அதாவது 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பால் ஸ்டிர்லிங் நிகழ்த்தியுள்ளார்
Friday Mar 15, 2024
அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் படைப்புகள் தமிழில் வெளியீடு
புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க்ரெட் ஜாண்சன் என்ற மாயா ஏஞ்சலோ கவிஞராகவும், நடிகையாகவும், மக்கள் உரிமைப் போராளியாகவும் செயல் பட்டு வந்தார். இவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் கவிதைகள் உள்ளிட்ட படைப்புகள், நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பயன் படுத்தப் பட்டுள்ளன. மாயா ஏஞ்சலோ எழுதிய கூண்டுப் பறவை ஏன் பா டுகிறதென்று எனக்குத் தெரியும் என்ற புத்தகத்தை பெர்னார்ட் சந்திரா தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மற்றொரு படைப்பான என்றாலும் நான் எழுதுகிறேன் என்ற கவிதைத் தொகுப்பை சிவகுமார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த இரண்டு புத்தகங்களின் தமிழ் பதிப்பை அமெரிக்க துணைத் தூதரகம் இன்று மார்ச் 15ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் வெளியிட்டது.
ரஷ்ய அதிபர் தேர்தல் - வாக்குப் பதிவு தொடங்கியது
ரத்யாவில் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று மார்ச் 15ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ரஷ்யாவின் பதினோரு நேர மண்டலங்களிலும் அமைதியாக வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வெளி நாடுகளில் வாழும் ரஷ்யர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர். மின்னஞ்சல் மூலமும் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.
பிரம்மாண்டமாகத் துவங்கும் ஐ.பி.எல்.2024
2024 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் 22ம் தேதி துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் துவக்க விழா பிரமாண்டமாக நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும். ஐ.பி.எல் துவக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், டைகர் ஷெராப், அக்க்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாகக் கூறப் படுகிறது.
Thursday Mar 14, 2024
மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் ஸ்விட்ஸர்லாந்து முதல் இடம்
மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் என்பது உலகளவில் வாழும் மனிதர்களின் ஆயட்காலம், கல்வி, மற்றும் தனி நபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடு ஆகும். ஐ.நா. வெளியிட்டுள்ள 2022 -2023ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளில் ஸ்விட்ஸர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. நார்வே இரண்டாவது இடமும், ஐஸ்லாண்ட் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
டிக்டாக் செயலியைத் தடைசெய்ய அமெரிக்கப் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
உலகளவில் பயன் படுத்தப்படும் டிக்டாக் செயலி சீனாவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. டிக்டாக்கில் ஒவ்வொரு செயலிகளும் பயனர்கள் ச்ம்மதம் இல்லாமலேயே முறை கேடாகத் தரவுகளை சேகரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் 2020ம் ஆண்டு டிக்டாக் செயலிக்குத் தடை விதித்தன. இந்நிலையில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் 13ம் தேதி டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப் பட்டது. மசோதாவுக்குஆதரவாக 352பேர் வாக்களித்தனர். இதை எதிர்த்து
65 பேர் வாக்களித்தனர். இதனால மசோதா நிறைவேற்றப் பட்டது.
Wednesday Mar 13, 2024
2026ல் செமி கண்டக்டர் சிப்கள் உற்பத்தி
செமி கண்டக்டர் சிப் உற்பத்தி செய்ய டாட்டா நிறுவனம் குஜராத்தில் இரண்டு தொழிற்சாலைகளையும், அசாமில் ஒரு தொழிற்சாலையையும் அமைத்து வருகிறது. குஜராத் மற்றும் அசாமில் உள்ள தொழிற்சாலைகளில் வரும் 2026ம் ஆண்டு முதல் செமி கண்டக்டர் சிப்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், சிப் உற்பத்திக்கான கெடுவைத் துரிதப் படுத்தியுள்ளது என்றும் டாட்டா நிறுவனத்தின் தலைவர் நடராஜர் கூறியுள்ளார்.
March 12,2024
போரினால் உக்ரேன் கல்வி நிறுவனங்களில் பெருத்த பொருட்சேதம் - ஐ.நா. தகவல்
உக்ரேன் ரஷ்யா போர் காரணமாக, உக்ரேனின் உள் கட்டமைப்புகளில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உக்ரேன் சேதமாகியுள்ளது. அரசு அலுவலகங்கள் மட்டுமில்லாமல்பல்கலைக்களகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் கல்வி நிறுவனங்களில் இருந்த அறிவியல் உள்கட்டமைப்புகளும் , அறிவியல் உபகரணங்களும் சேதமடைந்ததை சீரமைக்க 121 கோடி டாலர்களும், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையில் சேதமடைந்ததை சீரமைக்க 900 கோடி டாலர்களும் தேவைப்படும் என்று ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.
ஆறு மாத விண்வெளிப் பயணத்திற்குப் பின் பூமி திரும்பிய வீரர்கள்
அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யா ஆகிய நான்கு வெவேறு நாடுகளை சேர்ந்த நான்கு வீரர்கள் நாசாவின் திட்டத்திற்காக முதன் முறை விண்ணிற்குப் பயணம் செய்தனர். இந்நிலையில் ஆறு மாதங்கள் சர்வதேச விண்வெளியில் தங்கியிருந்து தங்களுடைய விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு நான்கு வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் இன்று மார்ச் 12ம் தேதி செவ்வாய்கிழமை பூமிக்குத் திரும்பினர்.
Monday Mar 11, 2024
ஜெர்மனியில் ரயில் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
ஜெர்மனியில் ரயில் ஓட்டுனர்களின் பணிச் சுமை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு வேலை நேரத்தை வாரத்திற்கு 38 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ரயில் ஓட்டுனர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பெரும்பாலான ரயில்கள் இயக்கப் படாததால் பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
போர் நடக்கும் சூழலில் ரமலான் வரவேற்கத் தயாரான காசா
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஐந்து மாதங்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், காசாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாமல் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால், காஸாவில் உணவு உள்ளிட்ட பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மார்ச் 11ம் தேதி தொடங்கி உள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை வரவேற்கத் தொடங்கி விட்டனர்.
Sunday Mar10, 2024
2024 ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஆப்பன்ஹைமர் (Oppenheimer)
லாஸ் ஏஞ்செல்ஸில் 96வது ஆஸ்கர் விருத்தி விழா கோலாகலமாக நடை பெற்றது. இதில் கிறிஸ்டோபர் ளோனன் இயக்கிய ஆப்பன்ஹைமர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் , சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படத் தொகுப்பு இந்த திரைப்படம் ஏழு விருதுகளை வென்றது. இதே போல் புவர் தீங்ஸ் (Poor Things ) நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது.
Saturday Mar 9, 2024
காசாவில் கடல் பகுதியில் துறைமுகம் அமைக்க ஜோ பைடன் உத்தரவு
காசாவுக்குள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக காஸாவின் கடலோரப் பகுதியில் தாற்காலிகத் துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார. இது குறித்து நாடடாளுமன்ற கூட்டு க் கூட்ட உரையில் அவர்
கூறியதாவது, அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்து வரும் காசா மக்களுக்கு, அந்தப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்காக காஸாவின் கடலோர பகுதியில் தாற்காலிகத் துறைமுகம் அமைக்க இராணுவத்துக்கு உத்தரவிட்டுளேன் என்று கூறினார்.
Friday Mar 8, 2024
திருப்பதியில் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக் கழக 21 வது பட்டமளிப்பு விழா பல்கலைக் கழக அரங்கில் நேற்று மார்ச் 7ம் தேதி வியாழக்கிமை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பல்கலைக் கழக வேந்தரும் ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசீர் ம்மாணவிகளுக்குப் பட்டன்களை வழங்கினார். தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அப்துல் நசீர் பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
உக்ரேனுக்குப் பத்தாயிரம் ட்ரோன்கள் வழங்கப் படும் -இங்கிலாந்து அறிவிப்பு
ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரேன் சென்றிருந்த இங்கிலாந்து நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உக்ரேன் அதிபர் ஸலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு பத்தாயிரம் ட்ரோன்கள்வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பத்தாயிரம் ட்ரோன்களில் கப்பலைகளைக் குறி வைத்துத் தாக்கும் 1000 ட்ரோன்கள் அடங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கேரள அரசின் பிரத்யேக ஓ.டி.டி. தளம் அறிவிப்பு
இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுக்கு சொந்தமானஓ.டி.டி. தளத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் அரசுக்கு சொந்தமான ஓ.டி.டி. தளத்தை கேரள முதல்வர் பினறாயி விஜயன் மார்ச் 7ம் தேதி வியாழக் கிழமை தொடங்கி வைத்தார். இந்த ஒ டி டி தளத்திற்கு சி ஸ்பேஸ் என பெயரிடப் பட்டுள்ளது. ஒ டி டி தளத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதல் மந்திரி பினறாயி விஜயன் மலையாள சினிமாவின் முன்னேற்றத்திற்கு இது முதல் படியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Thursday Mar 7,2024
பாடம் கற்பிக்கும் ஏ.ஐ. (Artificial Intelligence) ஆசிரியை கேரளாவில் அறிமுகம்
நேரடியாக மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் திறன் மிகுந்த ஏ.ஐ (Artificial Intelligence) நிரல் செய்யும் என்பதற்கு எடுத்துக் காட்டாக நாட்டிலேயே முதல் முறையாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் AI தொழில் நுட்பத்தில் உருவாக்கப் பட்ட ரோபோ ஆசிரியை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியை , எல் கே ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் திறன் கொண்டது என்றும், மூன்று மொழிகளில் உரையாடக் கூடிய வகையில் இந்த ஏ.ஐ ஆசிரியை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை உருவாக்கிய மேக்கர்ஸ் லேப் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
49000 ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்
வரலாற்றில் இது வரை இல்லாத அளவாக தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் 46.480 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக விலை அதிகரித்து வந்தது. இம்மாதம் இரண்டாம் தேதி அதிரடியாக ஒரு சவரனுக்கு மேலும் 800 ரூபாய் உயர்ந்தது. தொடர்ந்து ஏழாம் தேதி ரூபாய் நானூறு உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 48,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது
Wednesday Mar 6, 2024
பேஸ்புக் இன்ஸ்டகிராம் முடங்கியதால் மக்கள் பரிதவிப்பு
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் வலைத் தளங்கள் நேற்று மார்ச் 5ம் தேதி செவ்வாய்கிழமை ஒரு மணி நேரதிற்கும் மேல் முடங்கின. இதனால் பயனர்கள் பரிதவித்தனர். பிறகு தொழில் நுட்பக்க கோளாறு சரி செய்யப்பட்டு இரண்டு வலைத் தளங்களும் சரிசெய்யப் பட்டு ஷ்ரயால் பாட்டுக்கு வந்தன. இந்நிலையில் அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6% குறைந்தது.
ரஷ்யாவின் மற்றுமொரு போர்க் கப்பலை மூழ்கடித்த உக்ரேன்
ரஷ்யா உக்ரேன் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்த உக்ரேன், டரோன் மூலம் இரண்டு கப்பல்களை மூழ்கடித்ததாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மார்ச் 5ம் தேதி கருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செர்கெய் கொடோவ் என்ற ரஷ்ய கப்பலை டரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் 1300 டன் எடை கொண்டதாகும்.
Tuesday Mar 5, 2024
அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டொனால்டு டிரம்ப் போட்டியிடத் தடையில்லை - நீதி மன்றம் உத்தரவு
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கப் பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்ட வழக்கை விசாரித்த காலராடோ நீதிமன்றம், ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதி அற்றவர் என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து ட்ரம்ப் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட தடையில்லை எனக் கூறி காலராடோ நீதி மன்ற உத்தரவை ரத்து செய்தனர்.
உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதால் மக்கள் பாதிப்பு
இன்றய சூழலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவை மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் இன்று மார்ச் ஐந்தாம் தேதி பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளின் சேவைகள் முடங்கின. இதனால் தகவல் தொடர்பு கிடைக்காத சூழலில் பொது மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்
Monday Mar 4, 2024
பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரிப் பதவியேற்றார்
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிபிபி மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பி எம் எல் என் கட்சி அரசை அமைக்கிறது. இரு கட்சிகளின் பொது வேட்பாளராக ஷாபாஸ் ஷெரிப் அறிவிக்கப் பட்டார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று மார்ச் மூன்றாம் தேதி நடந்த வாக்கெடுப்பில், 336 உறுப்பினர்களில் 201 பேர் ஷாபாஸ் ஷெரிப் க்கு ஆதராவாக வாக்களித்தனர். இதை அடுத்து பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரிப் இன்று மார்ச் 4ம் தேதி பதவியேற்றார்.
முதல் T 20 போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி
வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர்கள், மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சிலெட் நகரில் நகரில் இன்று 4ம் தேதி நடைபெற்ற முதல் T 20 போட்டியில், முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்க தேச அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
Sunday Mar 3, 2024
காஸாவில் போரை நிறுத்த போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்
காஸாவில் போர் நடந்து வரும் நிலையில் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். பிராரத்தனைக் கூட்டமொன்றில் பேசிய பாப் பிரான்சிஸ் கூறியதாவது, இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரத்தில் தினம் தோறும் பொது மக்கள் பாதிக்கப் படுவது, ஆயிரக் கணக்கானோர் உயிரிழப்பது, படுகாயமடைவது , அகதியாவது உள்ளிட்டவை என் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது. இப்படி செய்வதை வைத்து சிறப்பான உலகைக் கட்டமைக்க முடியும் என் நினைகின்றீர்களா? உண்மையில் அமைதியை நிலை ந
Monday Feb19, 2024
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் பிரான்ஸ் முதல் இடத்தில உள்ளது. ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் முலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம். பின்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 85வது இடத்தில உள்ளது.
பிரிட்டனில் உக்ரேன் அகதிகளுக்கு மேலும் 18 மாதங்கள் விசா நீட்டிப்பு
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷயா உக்ரேன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு லட்சத்து எண்பதினாயிரதுக்கும் அதிகமான உக்ரேன் நாட்டினர் பிரிட்டனில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் அகதிகளாகத் தங்கியுள்ள உக்ரேன் நாட்டினருக்கு விசா மேலும் பதினெட்டு மாதங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. உக்ரேனில் தொடர்ந்து போர் நடந்து வருவதால் பிரிட்டனில் தங்கியுள்ள உக்ரேன் நாட்டவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விசா நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் குடியேற்றத்துறை அமைச்சர் டாம் பெஸ்குரோ தெரிவித்தார்.
Sunday Feb 18, 2024
போர் நிறுத்தப் பேச்சுக்கு இடமில்லை நேத்தன்யாஹூ
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நடந்து வரும் நிலையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின்
தலையீட்டில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ கூறும்போது, பாலஸ்தீனத்தை ஒருதலைப் பட்சமாக அங்கீகரிப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கும். ஹமாஸுடன் போர் நிறுத்தப் பேச்சு வாரத்தை இல்லை, ஹமாஸ் அமைப்பினரின் கோரிக்கை ஏமாற்றும் வகையில் உள்ளது, அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று நேத்தன்யாஹு கூறினார்.
Saturday Feb 17, 2024
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை
தமிழ் நாடு முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடைவிதித்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் ல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதால் தமிழகத்தில் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Friday Feb.16, 2024
காசா எல்லையில் புதிய சுவர் எழுப்பும் எகிப்து
இஸ்ரேல் காஸாவின் ரபா பகுதியில் தனது இராணுவ நடவடிகைகளை விரிவு படுத்த உள்ள நிலையில் எகிப்து நாடு காஸாவின் எல்லையை ஒட்டிய தனது பிராந்தியப் பகுதிகளில்சுவர் எழுப்பி வருவதை செயற்கைக் கோள் வழியாக பெறப்படும் படங்களிலிருந்து அஸோஸியேட் பிரெஸ் உறுதி செய்துள்ளது. சுவர் எழுப்பி வருவது குறித்து எகிப்து அதிகாரப்பூர்வமான எதையும் அறிவிக்கவில்லை
Thursday Feb 15, 2024
புற்று நோய்க்கு எதிராக விரைவில் தடுப்பூசி - பூட்டின் அறிவிப்பு
உலகம் முழுதும் பல அமைப்புகள் புற்று நோய் தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் பூட்டின் மாஸ்கோவில் எதிர்காலத் தொழில் நுட்பம் குறித்து உரையாற்றிய போது, எங்கள் ஆரய்ச்சியாளர்கள் புற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள் என்றும் தனிப்பட்ட வகையில் அவை நோயாளிகளுக்குப் பயன் படும் வகையில் பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என நம்புகிறேன் என்றும் கூறினார்
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட பிங்க் ஸ்குவார்ட என்ற பாதுகாப்பு சேவையை இன்று பிப்ரவரி 15ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்தக் குழுவில் முதற்கட்டமாக இருபத்தி மூன்று பெண்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மெட்ரோ பயணிகள் அதிகமாகப் பயணிக்கும் ரயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாலித் தீவிற்கு சுற்றுலா செல்ல வரி - இந்தோனேசியா அறிவிப்பு
இந்தோனேசியாவிற்கு சுற்றுலாப் பயணம் செல்பவர்களில் அதிக மக்கள் செல்லும் இடமாக பாலித் தீவு திகழ்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் இங்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர் . இந்நிலையில் பாலித் தீவுக்கு சுற்றுலா வருபவர்கள் பத்து டாலர் சுற்றுலா வரி கட்டவேண்டும் என்று இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிக்கப் படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
உலகின் பெரிய பொருளாதாரநாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை இழந்த ஜப்பான்
உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது . அதேநேரத்தில் ஜெர்மனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது
Wednesday Feb 14, 2024
இந்தியா அமெரிக்கா இடையே சிறந்த இராணுவ உறவு - பென்டகன் தகவல்
இந்திய இராணுவ தலைமைத் தளபதி அமெரிக்க்காவுக்கு நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இரு நாடுகளின் இராணுவ உறவுகள் குறித்து பென்டகனின் ஊடக துணை செயலாளர் கூறும்போது , நாங்கள் இந்தியாவுடன் சிறந்த இராணுவ ஊறவைக் கொண்டுள்ளோம் என்றும், நாங்கள் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கூறினார். இந்திய இராணுவ தலைமைத் தளபதி, அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதியுடன் உயர் மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாம்பல் புதன் - தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனை
இயேசு சிலுவையில் அறையப் பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடை பிடிக்கப் படுகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப் படுகிறது. சாம்பல் புதனை முன்னிட்டு இன்று உலகெங்கினும் தேவாலங்களில் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
Tuesday Feb 13, 2024
பெண் நீதிபதியான பழங்குடி பெண்ணிற்கு முதல்வர் வாழ்த்து
திருவண்ணாமலை புலியூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீமதி என்ற பெண் பிஏ, பி எல் சட்டப் படிப்பை முடித்து சிவில் நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதி ஆகியுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், பெரிய வசதிகள் இல்லாத மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதிலேயே இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் அமையும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றத் தயார்-அமெரிக்கா
பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
Monday Feb 12,2024
கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்ட இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை
கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் அரசு கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்திய வெளியரவுத் துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக
எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் கத்தார் அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப் பட்ட எட்டு பேரும் 12ம் தேதி திகட்கிழமை புது டெல்லி வந்து சேர்ந்தனர்.
Sunday Feb 11, 2024
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் - சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்காவில் நடந்தை பதினைந்தாவது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பதினாறு அணிகள் பங்கேற்ற நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரை இறுதிக்குத் தகுதிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி பிப்ரவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெனோனியில் நடை பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது . அடுத்து விளையாடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றி பெற்று சாம்பியன் பட்டதைக் கைப் பற்றியது.
Saturday Feb 10, 2024
கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது - அமெரிக்கத் தூதர்
படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் அமெரிக்கா ஒரு அற்புதமான இடம் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கூறினார். அவர் மேலும் கூறுகயில் உலகில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். கடந்த ஆண்டு இரண்டு லட்சம் விசாக்கள் வழங்கப் பட்டன. கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்வாரகள் எனபதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என்று அவர் கூறினார்.
Friday Feb 9, 2024
விண்வெளி நிலையம் அமைக்க பணிகளைத் தொடங்கியது இஸ்ரோ
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. சீனாவும் விண்வெளிநிலையத்தை அமைத்துள்ளது. மூன்றாவதாக இந்தியாவும் சொந்தமான விண்வெளி நிலையம் அமைக்க இஸ்ரோ தனது பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த விண்வெளி நிலையம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு 2035ம் ஆண்டிற்குள் செயல் பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Thursday Feb 8, 2024
புதிய கால நிலை செயற்கைக் கோளை செலுத்திய நாசா
உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைக் கோளை நாசா பிப்ரவரி 8ம் தேதி வியாழக் கிழமை விண்ணில் செலுத்தியது . சுற்று வெட்டப் பாதையை நிலை நிறுத்தப் பட்ட இந்த சீயற்கைக் கோள் பூமியிலிருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்த படி கடற்பகுதி மற்றும் வழி மணடலத்தை சுமார் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்யும். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த செயற்கைக் கோள் பூமியைத் தெளிவாகக் காட்டும் என்று விஞ்ஞானி வெர்டெல் தெரிவித்தார்.
வேலை நேரம் ம்முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை - புதிய சட்டம்
தொழிலார்கள் வேலை நேரம் முடிந்து சென்ற பின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள்,மின்னஞ்சலகள் போன்றவற்றை நிராகரிக்க உரிமை வழங்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் படி நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம். நியாயமற்ற காரணமாக இருந்தால் அழைப்பை நிராகரிக்கலாம். ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த புதிய சட்டத்திருத்தம் ஓரிரு நாட்களில் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Wednesday Feb 7, 2024
தற்காப்புப் போருக்குத் தயார் - போலந்து எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் போலந்து நாட்டின் கிழக்கு எல்லையில் வார்சாவிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலந்து நாட்டின் இராணுவ டாங்க்கிகள், கவச வாகனங்கள், போர் விமானங்கள் போலந்து வான் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன என்றும், தற்போதைய சூழலில் நாங்கள் தற்காப்பு நடவடிக்கையாக போருக்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்றும், ரஷயா உக்ரைனில் வெற்றி பெற்றால் உலக ஜனநாயகத்திருக்கு ஒரு பெரும் பிரச்னையாக அது இருக்கும் என்றும் போலந்து பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
காசா போர் நிறுத்தம் தொடர்பாக சவூதி மற்றும் எகிப்து நாடு தலைவர்களுடன் பிளிங்கன் பேச்சு
காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கடந்த திங்கட்கிழமை சவூதி அரேபியா வந்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பிளிங்கன், சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் எகிப்து அதிபர் அல்சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சுற்றுப் பயணத்தின் போது காஸாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும், ஹமாஸ் இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் கொள்வதற்கும் வசதியாக சண்டையை உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை உருவாக்க பிளிங்கன் தலைமையிலான குழு முயற்சிக்கும் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்
Tuesday Feb 6, 2024
18 கலைஞர்களுக்குக் கலைச் செம்மல் விருது
உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்திருந்தது. இதைக் கொண்டாடும் விதமாக சென்னை இசைக் கல்லூரியில் 5ம் தேதி திங்கட் கிழமை இசை விழா நடத்தப்பட்டது. இதில் மரபு ஓவியம், மரபு சிற்பம், நவீன ஓவியம், நவீன சிற்பம் என்னும் பிரிவுகளில் 18 சிறந்த கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் சாமி நாதன் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இருள் அடைந்த காசாவிற்கு ஒளி தரும் இளம் விங்ஞானி
இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகிய நிலையில் , அதில் கிடைத்த பொருட்களை வைத்து பதினைந்து வயதான குஸாம் அல் அத்தார் என்ற சிறுவன் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளான். இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காகக் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழி வகை செய்துள்ளார். இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன
Monday, Feb 5, 2024
இந்திய சக்தி இசைக் குழுவிற்கு கிராமி விருது
லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்து வரும் 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கிராமி விருதுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இசை, பாப், ராக், நடனம் என பல்வேறு பிரிவுகளில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப் பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழாவில், சங்கர் மஹாதேவன், விநாயக் ராம், செல்வ கணேஷ், கணேஷ் ராஜ கோபாலன், உஸ்தாத் ஜாஹிர் ஆகியோரைக் கொண்ட சக்தி இசைக் குழுவின் திஸ் மொமெண்ட் (This Moment) என்ற இசை ஆல்பத்திற்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday Feb 4, 2024
அமேசானில் புதிய செய்யறிவு அறிமுகம்
அமேசானில் நாம் பொருட்களை வாங்க உதவும் செய்யறிவை அமேசான் அறிமுகபப்டுத்தியுள்ளது. ரெபஸ் என்னும் இந்த செய்யறிவு தொழில் நுட்பம் நம்மிடம் எழுத்து வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளக் கூடியதாகும். பொருட்களை பற்றி நாம் முழுவதுமாகத் தெரிந்து கொண்டு தரமான பொருட்களை வாங்க உதவும் இந்த ரெபஸ் தொழில் நுட்பம் அமேசானில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப் படுத்துள்ளது.
Saturday Feb 3, 2024
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் 6 வது இடங்களில் இந்திய நகரங்கள்
நெதெர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் உலகின் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்த ஆய்வை நடத்தி 2023ம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் முதல் இடத்திலும், அயர்லாந்தின் டப்ளின் நகரம் இரண்டாவது இடத்திலும், கனடாவின் டொராண்டோ மூன்றாவது இடத்திலும், இத்தாலியின் மிலன் நகரம் நான்காவது இடத்திலும்,பெரு தலை நகர் லீமா ஐந்தாவது இடத்திலும், இந்தியாவின் பெங்களூரு ஆறாவது இடத்திலும், புனே நகரம் ஏழாவது இடத்திலும் உள்ளது அந்த பட்டியலில் அறிவிக்கப் பட்டுள்ளது .
காசா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்- கத்தார்
இஸ்ரேல் ஹமாசிடையேயான போரில் கத்தார் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையின் காரணமாக கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது. இந்நிலையில் மீண்டும் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் ஹமாஸிடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பேச்சு வார்த்தையை நடத்தி வரும் கத்தார் நாடு அறிவித்துள்ளது
Friday Feb 2, 2024
மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டைக் கொண்டடடும் வெனிஸ் நகரம்
உலகின் புகழ் பெற்ற வணிகப் பயணியான மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டை அவர் பிறந்த இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம் கொண்டடாடுகிறது. இத்தாலியில் பிறந்தவர் என்றாலும் இந்தியாவை உலகம் அறிய வைத்ததில் பெரும் பங்காற்றியவர் மார்க்கோ போலோ பாண்டியர்கள் மற்றும் தென்னிந்திய வரலாற்றுத் தகவல்களை தம் நூலில் பதிவு செய்து வைத்தவர் மார்க்கோ போலோ. அவரை பெருமைப் படுத்தும் வகையில் அவரின் எல்லாம் நினைவு நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வெனிஸ் நகர மக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்
Thursday Feb 1, 2024
இலங்கையில் அசோகர் தூண் - இந்திய தூதர் அடிக்கல் நாட்டினார்
இலங்கையில் அசோகர் தூண் அமைக்க இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினார். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியா இலங்கை இடையேயான கலாச்சார உறவை பலப் படுத்தும் வகையில் வஸ்கடுவவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுகுதி மகா விகாரையில் பேரரசர் அசோகரின் தர்ம தூண் கட்டுமானப் பணிகளை இந்திய தூதர் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்
Wednesday Jan 31, 2024
இஸ்ரேல் செல்லும் பத்தாயிரம் இந்தியத் தொழிலார்கள்
கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலேயான போரினால், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனை மறு கட்டமைப்பு செய்ய இஸ்ரேல் முடுவு செய்துள்ள நிலையில், அங்கு போதிய மனித வளம் இல்லாததால், வேறு நாடுகளில் இருந்து தொழிலார்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து பத்தாயிரம் தொழிலார்கள் பல கட்டங்களாக இஸ்ரேல் செல்ல உள்ளனர்
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் பதவியேற்ப
மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷாவின் பதவிக் காலம் ஜனவரி 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மலேசியாவின் பதினேழாவது புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரதுபதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
Tuesday Jan 30, 2024
ஜெர்மனியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை
ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலையும், மூன்று நாட்கள் விடுமுறையும் அளிப்பதால் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு அவர்களின் செயல் திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. பெப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த நடைமுறை சோதனை முயற்சியில் ஜெர்மனியில் உள்ள
நாற்பத்தி ஐந்து நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மனித மூளையில் சிப் சோதனை தொடங்கிய நியூரா லிங்க் நிறுவனம்
இலான் மஸ்கின் நியூரா நிறுவனம், மனித மூளையில் சிப்களைப் பொருத்தி அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் , மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறியதால் மனிதரிடம் சோதனை நடத்த, அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி கோரிய நிலையில் அதற்கான அனுமதி கிடைத்தது. இதனால் நியூரா லிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப்பைப் பொருத்தி சோதனையைத் தொடங்கி இருக்கிறது.
Monday Jan 29
2023ல் பதினான்கு லட்சம் இந்தியர்களுக்கு விசா- அமெரிக்கத் தூதரகம் தகவல்
கடந்த 2023ம் ஆண்டு பதினான்கு லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காத தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் நட்புறவு தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது. இதை அடுத்து கடந்த ஆண்டில் இந்தியர்களின் விண்ணப்பங்ளைப் பரிசீலனை செய்து ஹச் ஒன் பி விசா உட்பட 14 லட்சம் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கபப்ட்டது . இது 2022ம் ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது .
Saturday Jan 27, 2024
கூடங்குளம் அணு உலைகள் மூலம் இதுவரை 94000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகள் மூலம் இதுவரை 94,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது என்றும், கடந்த நிதி ஆண்டில் இரண்டு அணு உலைகள் மூலம் 14,226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும், முதல் அணு உலை கடந்த 2021 மார்ச் மாதம் முதல் 638 நாட்கள் தொடர்ந்து இயங்கி மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்றும் அணு மின் நிலைய வளாக இயக்குனர் R.S.ஷவான்த் கூறினார்
ஹவுதி தாக்குதலால் 42 சதவீதம் சரிந்த சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்குவரத்து
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 42 சதவீதம் குறைந்து விட்டதாக ஐநாவின் வர்த்தகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது. இது போல் கடல் வணிகம் பாதிக்கப் படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் உலக அளவில் உயர்வதற்கான அபாயம் உள்ளதென்று அந்த அமைப்பின் தலைவர் ஜான் ஹாப்மேன் தெரிவித்துள்ளார்.
Friday Jan 26, 2024
குடவோலை முறையை விளக்கும் தமிழக அலங்கார ஊர்தி
டெல்லியில் நடை பெற்ற குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெற்றது இதில் குடவோலை முறையை விளக்கும் வகையில் தமிழக அலங்கார ஊர்தி அணி வகுப்பில் வலம் வந்தது. பழங்காலத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதை ஓலையில் குறித்து , அது பானையில் சேகரிக்கப்பட்டு, பின்னர் முடிவு அறிவிக்கப் படும் முறைதான் குடவோலை முறை ஆகும்.
பாலஸ்தீனர்களைப் பாதுக்காக்க வேண்டியது - உரிமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் தொடரும் நிலையில் , காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தி ஐய்யாயிரத்தைத் தாண்டியுள்ளது. இது தொடர்பாக தென் ஆப்ரிக்கா சர்வதேச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 26ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், தென் ஆப்ரிக்காவின் நியாயமான கோரிக்கையை ஏற்று , காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் இனப் படுகொலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது, இதை சர்வதேச நீதிமன்றம்
அங்கீகரிக்கிறது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .
Thursday Jan 25, 2024
தமிழகத்தைச் சேர்ந்த பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது
இந்தியாவின் குடியரசசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புர கலைஞர் பத்திரப்பன் என்பவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் படுகிறது. பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது
Wednesday Jan 24, 2024
இன்று ஜனவரி 24ம் தேதி பெண் குழந்தைகள் தினம்
இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் பெண் குழந்தைகள் தான் மாற்றத்தை உருவாக்குபர்கள், பெண் குழந்தைகள் கல்வி கற்று வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழத் தேவையான அணைத்து முயற்சிகளையும் தானுந்து அரசு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகள் வருகைப் பட்டியலில் தமிழகம் முதலிடம்
மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது, கடைந்த 2021ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் மொத எண்ணிக்கை 67.8 கோடி பேர். அதே நேரத்தில் மாநிலங்கள் வாரியாகச் சென்றோரின் பட்டியலில் 15,53 கோடிஎன்ற எண்ணிக்கையில் தமிழ் நாடு முதளிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 10.97 கோடி பேர் என்ற எண்ணிக்கையுடன் உததிரப் பிரதேசமும், 8.14 கோடி பயணிகள் சுற்றுப் பயணம் செய்த கர்நாடகா மூன்றாவது இடத்தையும், 4.37 கோடி சுற்றுலாப்பயணிகளுடன் மஹாராஷ்டிரா நான்காவது இடத்திலும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது
Tuesday Jan 23, 2024
வெளிநாட்டு மாணவர் விசாக்களுக்கு 2 வருட வரம்பு - கனடா புதிய உத்தரவு
கனடாவிற்குக் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப் படும் விசா காலம் 2 வருடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குக் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35% அளவுக்கு மாணவர் விசாக்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் இதனால் 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப் படும் என்றும் இந்த விசா இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கனடா குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார்
Monday Jan 22, 2024
மின்மினி என்னும் உலகின் முதல் தமிழ் ஹைப்பர் லோக்கல் செயலி அறிமுகம்!
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மின் மினி என்ற தமிழ் செயலி ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மல்டி சானல் மற்றும் நெட் ஒர்க்குகளைக் கொண்ட மின்மினி செயலியானது கான்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிகாப் பட்ட செய்தியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் , சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும் என்றும், அங்கீகரிக்கப் பட்ட செய்தியாளர்கள் ப்ளூ டிக் மூலம் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் கூறப் படுகிறது.
Saturday Jan 20, 2024
விக்ரம் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா விண்கலம்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லாண்டரும் பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப் பட்டது இந்நிலையில் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர்கருவி விக்ரம் லாண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டரின் லேசர் அல்ட்டிமீட்டர் கருவி விக்ரம் லாண்டரை சுட்டிக் காட்டியது என தெரிவித்துள்ளது.
Friday Jan 19, 2024
ஜப்பான் விண்கலம் நிலவில் தரை இறங்கியது
நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் இன்று 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நிலவில் தரை இறங்கியது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் நிலவின் ஸ்னைப்பர் என அழைக்கப் படுகிறது. இந்த விண்கலம் நிலவில் தரை இறங்கியதன் மூலம், நிலவில் வெற்றி கரமாக விண்கலத்தைத் தரை இறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
Thursday Jan.18 2024
உலகின் மிகப் பெரிய அம்பேத்கார் சிலை ஆந்திராவில் இன்று திறப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் 125 அடி உள்ள சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது 81 அடி உயர பீடத்திற்கு மேல் அமைக்கப் பட்டுள்ளதால் இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப் பட்டு, இந்தப் பகுதிக்கு ஸ்மிரிதி வனம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. சிலை அமைக்கப் பட்டுள்ள மைதானத்தில், அருங்காட்சியகம், மினி தியேட்டர், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 18ம் தேதி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார்
Wednesday Jan.17 2024
உலகின் வலிமையான கரன்சி - 10 வது இடத்தில அமெரிக்க டாலர்
உலகின் வலிமையான 10 கரன்சிகளின் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குவைத் டினார் முதல் இடத்திலும், பஹரைன் டினார் இரண்டாவது இடத்திலும், ஓமன் ரியால் மூஒன்றாவது இடத்திலும், ஜோர்டான் டினார் நான்காவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த வரிசையில அமெரிக்க டாலர் பத்தாவது இடத்திலும், இந்திய ரூபாய் 15 வது இடத்திலும் உள்ளது.
Tuesday Jan.16 2024
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழினத்தில் பிறந்து அவர் தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான் புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துக்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அரண் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். குரள் நெறி நம் வழி . குறள் வழியே நம் நெறி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் முதல் முறையாக விமானத்திர்க்குள் உணவகம்
சுற்றுலாத் தலமான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் உணவகம் ஓன்று ஒரு விமானத்தை விலைக்கு வாங்கி அதில் உணவகம் நடத்தி வருகிறது. மலைப் பிரதேசத்தில் பெரிய விமானம் ஓன்று இருப்பதைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் அருகில் சென்று பார்க்கும் போது விமானத்துக்குள் உணவகம் செயல் படுவது தெரிய வருகிறது. இந்த விமான உணவகத்திற்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. வணிக நோக்கில் வித்தியாசமான முறையில் தனியார் நிறுவனம் செய்துள்ள இந்த ஏற்பாடு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Monday Jan15 2024
அவனியாபுரம் ஜல்லிகட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது காலை ஏழு மணிக்குத் தொடங்கிய ஜல்லிகட்டுப் போட்டி மாலை 5.15க்கு நிறைவுபெற்றது. இந்தப் போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்குக் கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு பதினேழு காளைகளை அடக்கி இரு சக்கர வாகனத்தைப் பரிசாகப்பெற்றிருந்தார். அடுத்து அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 14 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் பத்து காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
Sunday Jan 14 2024
சீனப் பெருசுவரில் உலகின்மிக நீளமான ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்
உலக அதிசயங்களில் ஒன்றான சீனாப் பெருஞ்சுவர் ஏறக்குறைய 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட சுவராகும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர் சீனப் பெருஞ்சுவரின் மேல் அறுபது நாட்களுக்கு மேலாக அமர்ந்து 1014 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஓவியத்தை வரைந்துள்ளார். இதன் மூலம் இந்தப் பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Saturday Jan.13 2024
உலகின் சிறந்த அரிசியாக பாசுமதி அரிசி தேர்வு
பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ், 2023-24ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாசுமதி அரிசியை அறிவித்துள்ளது. நீளமான, தனித்துவமான, சுவை மற்றும் வாசனை கொண்ட பாசுமதி அரிசி இந்திய துணைக் கண்டத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்திய பாசுமதி அரசிக்கு அடுத்த படியாக இத்தாலியைச் சேர்ந்த ஆர்போரியோ அரிசி இரண்டாவது இடத்தையும், போர்ச்சுகலின் கரோலினோ அரிசி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஆயிரத்து அறுநூறு ஆண்டு பழமையான வழிபாட்டுத்தலம் கண்டு பிடிப்பு
அமெரிக்காவின் மிசௌரி மாநிலம் செயின்ட் லூயிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் டக்லஸ் தலைமயில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழாராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது கான்ஸ்டன்டைன் நகர மக்கள் பேரரசரின் மூதாதையருக்கு அமைத்துக் கொடுத்த வழிப்படுத்தலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது . இத்தாலி தலை நகர் ரோமிலிருந்து நூற்றி அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்பேல்லோ என்னும் நகரில் 1600 வருட பழமையான இந்த வழிபாட்டுத் தலத்தை டக்லஸ் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்
Friday Jan12 2024
ஹமாசின் 700 ஏவுகணைத் தளங்கள் அழிப்பு - இஸ்ரேல் அறிவிப்பு
காஸாவில் சோதனைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரின் நூற்றுக் கணக்காண சிறிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும், ஏவுகணைத் தளங்களையும் அளித்துள்ளது. அந்த வஃயில் இதுவரை எழுநூறுக்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் திறன்களை அழித்து, இஸ்ரேல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Thursday Jan.11 2024
அயலக தமிழர் தின விழா இன்று தொடங்கியது
தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலக தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவை இன்று ஜனவரி 11ம் தேதி வியாழக் கிழமை சென்னை நந்தம் பாகம் வர்த்தக மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டலின் தோடங்கி வைத்தார். பதினொன்று மற்றும் பனிரெண்டு ஆகிய இரு தினங்கள் நடை பெறும் இந்த விழாவில் இலங்கை மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் , இங்கிலாந்து,அமெரிக்கா உட்பட 58 நாடுகளில் இருந்துதமிழ் வம்சா வழியினர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகிய வற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் பங்கேற்றனர்.
Wednesday Jan.3 2024
சென்னையில் புத்தகக் கண் காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், 47 வது சென்னை புத்தகக் கண் காட்சி நந்தனம் ymca மைதானத்தில் ஜனவரி 3ம் தேதி புதன்கிழமை தொடங்கியது. இந்த புத்தகக் கண் காட்சியை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இந்த புத்தகக் கண் காட்சி வரும் 21ம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த புத்தகக் கண் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் கண் காட்சிக்கு சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது
புத்தகக் கண் காட்சி
Tuesday Jan.2 2024
குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 2 நாட்களில் 15,500 பேர் பார்வை
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக , இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 15,500 பேர் சுற்றுலாப் படகில் சவாரி செய்து கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தைக் கண்டு மகிழந்ததாக பூம்புகார் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Thursday Dec.21 2023
100 அடி உயரத்தில் இந்தியாவின் உயரமான கிறிஸ்துமஸ் மரம்
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் போது , ஆலயங்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் கிறிஸ்துமஸ் மரம் , கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் ஸ்டார் ஆகியவற்றால் அலங்கரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கர்ணாவதாக மாநிலம் பெங்களூருவில் பிரபல மால் ஒன்றில் வைக்கப் பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் இந்தியாவின் மிகப் பெரிய மரமாக காண்போரைக் கவர்ந்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் செயற்கை நீரூற்றுக்கு மத்தியில், நூறு அடி உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஓங்கி உயர்ந்து காட்சி அளிக்கிறது. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்தும் , புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
அகதிகள் வருவதைத் தடுக்க பிரான்சில் புதிய சட்டம்
அல்ஜீரியா, போர்ச்சுகல் , மொராக்கோ, துருக்கி உட்பட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்ட விரோதமாக அகதிகள் நுழைவது வழக்கமாக உள்ளது, அகதிகளால் உல் நாட்டுப் பிரச்சனைகள் எழுவதால்,பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து , சட்ட மாற்றங்களைக் கொண்டு வர புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் , அகதிகளால் அமைதியின்மை தோன்றக் கூடிய நிலை இருந்ததாகவும், அதனைத் தடுக்க வெட்னரியது அரசின் கடமை என்றும் , வெள்ளம் போல் நுழையும் அகதிகளைத் தடுக்குக் கவசமாக இந்த சட்டம் அமையும் என்றும் தெரிவித்தார்.
Wednesday Dec.20 2023
எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது
எழுத்தார்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் சாஹித்ய அகாடமி விருது வழங்கி வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகங்களுக்கான சாஹித்ய அகாடமி விருது இன்று 20ம் தேதி புதன் கிழமை அறிவிக்கப் பட்டது. இந்த விருது 24 மொழிகளில் வெளிவந்த புத்தகங்களுக்காக அறிவிக்கப்பட்டது. அந்த வாயில் தமிழில் நீர்வழிப் படூஉம் என்ற நாவலுக்காக, எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்ப ட்டுள்ளது . விருது அறிவிக்கப் பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி விருதுகள் வழங்கப் பட உள்ளன.
உலகில் முதல் முறையாக தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம்
கலிஃபோர்னியா மாகாணத்தில் பசடேனா பகுதியில் கலி எக்ஸ்பிரஸ் என்ற தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம் திறக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் தானியங்கி சமையல் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் மிஸோ ரோபோட்டிக்ஸ், கலி குழுமம் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு உதவும் பாப் ஐடி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த உணவகத்தை
செயல் படுத்தி உள்ளன. இங்குள்ள மிசோ ரோபோடிக்ஸ் இயந்திரங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ருசிகரமான உணவுகளைத் தயார் செயகின்றன. பாப் ஐடி தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை படம் பிடித்து அவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து உணவுக்குத் தேவையான பணம் பெறப்படுகிறது
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜூனா விருது
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு நாட்டின் இறங்காவது உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப் படுகிறது .இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி , தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேர் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
Tuesday, Dec.19 2023
ஐ பி எல் வரலாற்றில் அதிகதொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ பி எல் 20 ஓவர் கிரிக்கெட் பதினேழாவது சீசன் போட்டிக்கான மினி ஏலம் கடந்த 19ம் தேதி டுபாயில் நடந்தது. இந்த ஏலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 333 வீரர்களில் 77 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அதிக பட்சமாக ஆஸ்திரேலிய அணி வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கோல்கட்டா அணியால் ஏலத்தில் எடுக்கப் பட்டார். ஐ பி எல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறையாகும்.
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் இண்டிகோ சாதனை
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ விமான நிறுவனம் பெற்றுள்ளது கடந்த 2022ம் ஆண்டு இண்டிகோ விமானங்களில் 7.8 கோடி பேர் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு இண்டிகோ விமானம் 10 கோடி பேரை ஏற்றிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளது . கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 22 சதவீதம் அதிகமாகும். 18ம் தேதி டெல்லி பெங்களூரு விமானப் பயணம் முடிவடைந்த நிலையில் இண்டிகோ இந்த சாதனையை எட்டியுள்ளது .
Monday, Dec.18 2023
போரை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்
காசாமீது இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில், போரை நிறுத்த பிரான்ஸ் நாடு வலியுறுத்தி உள்ளது. இந்தப் போரில் அப்பாவி மக்கள் அதிக அளவில் கொல்லப் படுவதாக பிரான்ச கடந்த ஞாயிற்றுக் கிழமை வருத்தம் தெரிவித்த நிலையில், அந்நாட்டில் கவலையை பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா இஸ்ரேலிடம் தெரிவித்தார்.
சுவீடன் நாட்டில் புதிய விசா கட்டுப் பாடுகள்
ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் ஷெங்கன் விசா எனப்படும் ஒரே விசா முறை நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் நாடும் அங்கீகரித்து வந்தது. இந்நிலையில் சுவீடெனில் தங்க விரும்புபவர்கள் தாங்களாகவே வேலை தெடிக் கொள்ள வேண்டும் என்றும் , சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூகக் குறீயியீடுகளைக் குறித்த புரிதல் இருக்க வேண்டுமென்பது கட்டாயம் என்றும், சுவீடிஷ் மொழயில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப் படுவர் என்றும், சுவீடெனில் கல்வி கற்று,வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப் படும் என்றும், சுவீடெனில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.
Sunday, Dec.17.2023
ஹோட்டலில் உணவு விநியோகிக்கும் பணியில் ரோபோ
திருப்பூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் முதல் முறையாக ரோபோ பயன்படுத்தப் படுகிறது. உணவகத்தில் உள்ள சப்ளையர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்து சமையல் செய்பவர்களிடம் வழங்கி, உணவு தயாரானதும் ரோபோவின் அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் வைக்கப் படுகிறது. ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் டேபிள் எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், வாடிகையாளர்கள் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்துச் செல்கிறது
Saturday, Dec.16 2023
துணிச்சலான நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்-ஜனாதிபதி திரௌபதி முர்மு
பாகிஸ்தானுடன் 1971ம் ஆண்டுப் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டு தோறும் வெற்றிகரமாகக் கடை பிடிக்கப் படுகிறது. வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ முகாமில் டிசம்பர் 15ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இது குறித்து டிசம்பர் 16ம் தேதி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,1971 போரின் போது நமது ஆயுதப் படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூறுகிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு வெற்றி தினம் அன்று தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் செல்ல 33 நாடுகளுக்கு விசா தேவையில்லை
இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் நாட்டுக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை என டிசம்பர் 15ம் தேதி அந்நாட்டு அரசு அறிவித்தது. இது குறித்து ஈரான் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில் ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்றும், இதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
Friday, Dec.15 2023
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இணைய சேவை முடக்கம்
ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஏறக்குறைய இரண்டரை மாதங்களாக நடந்து வருகிறது. காஸாவின் வடக்கு , மத்திய மற்றும் தெற்கு காசா என அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் காஸாவில் மீண்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், காசாவில் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப் பட்டதால், பலியான மக்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் என்றும் பாலஸ்தீன தொலைத்த தொடரபு நிறுவனங்கள் கூறியுள்ளன
Thursday Dec.14.2023
ஒடிசாவில் ஐந்து ரூபாய் கட்டணத்தில் அதி நவீன பேருந்துப் பயணம்
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவையை முதற்கட்டமாக ஒடிசாவில் கோரபத் மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார். கிராமப்புறங்களில் இருந்து மாவட்டத்தின் தலைநகருக்கு செல்ல விரும்பும் பெண்கள் மாணவர்கள் , மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஐந்து ரூபாய் கட்டணத்தில்இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதற்கட்டமாக ஆறு மாவட்டங்களில் 234 கிராமப் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி திரைப்படம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த சிவா கார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்த கொட்டுக்காளி திரைப்படம் எழுபத்தி நான்காவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதசே திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்திரைப் படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றுள்ளது.
Wednesday, Dec.13 2023
காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் உடனடியாக மனிதாபிமானப் போர் நிறுத்தம் கோரி, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலை நிறுத்துதல் என்ற தீர்மமானத்தை ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கிற்கான ஐக்கியநாடுகளின் பொதுச்சபை அவசர அமர்வில் இந்தியா போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
போலந்து நாடு பிரதமராக டொனால்ட் டஸ்க் பதவியேற்பு
போலந்தில் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி நடை பெற்ற பொதுத் தேத்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மத்தியவாதக் கட்சித் தலைவர் டொனால்டு டஸ்க் தலைமையில் அரசு அமைக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் டிசம்பர் 12ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் டொனால்டு டஸ்க் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றதால் இன்று 13ம் தேதி புதன் கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் டொனால்டு டஸ்க் பிரதமராகப் பதவியேற்றார்.
Tuesday, Dec.12 2023
சிங்கப்பூரில் தானியங்கி பேருந்துகள் இயக்கம்
சிங்கப்பூரில் மக்கள் பயன்பாட்டிற்கு தானியங்கி பேருந்துகளை இயக்க வீரைட் (Weride) என்னும் தனியார் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. வீரைட் நிறுவனம் தானியங்கி போக்குவரத்துத் தொழில் நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த வீரைட் தானியங்கிப் பேருந்துகள் குறைந்த வேகத்தில், குறிப்பிட்ட வழிகளில், குறைந்த போக்குவரத்து நெரிசல்கள் உள்ள பகுதிகளில் தற்போது இயக்கப்படுகிறது. இது சோதனை ஓட்டம் என்பதால் பேருந்தில் ஒரு ஓட்டுநர் அவசரகால பாதுகாப்பிற்காக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தானியங்கிப் பேருந்துகளை இயக்க சிங்கப்பூரின் தரை வழிப் போக்குவரது ஆணையம் M 1மற்றும் D1 என்னும் இரண்டு அதிகாரப் பூர்வ அனுமதிகளை வழங்கி உள்ளது.
Monday , Dec.11 2023
வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதகளைப்பெற இணையதளம்
மிக்ஜாம் புயலால் சென்னையில் பெய்த கன மழையின் பாதிப்பால் மாணவ மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சேதமடைந்த சான்றிதழ்களுக்குப் பதிலாக நகல்களைப் பெற்றிட இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ள செய்தியில், சேதமடைந்த கல்வி சான்றிதழ்களை www.mycertificates.in என்ற இணைய தளத்தில் மாணவ மாணவிகள் தங்கள் சான்றிதழ் விபரங்களைப் பதிவேற்றி , சான்றிதழ்களின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரான்சில் திருவள்ளுவர் சிலை
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகரில் திருவள்ளுவரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது இந்த சிலையை புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் பிரான்ஸின் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது நமது கலாச்சார பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்.அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்
Sunday, Dec.10 2023
இருபது நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசா இந்தோநேஷியா அறிவிப்பு
இந்தோனேஷியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க இந்தோனேஷியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் முன்வந்துள்ளது. தற்போதுள்ள விசா விலக்குகள் உள்ள நாடுகளைத் தவிர அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்தது.என்று ஜகார்த்தாவில் சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் சான்டியாயாகா தெரிவித்தார்
Saturday, Dec.9 2023
உலகின் மிகப் பெரிய வர்த்தக மையக் கட்டிடம்
குஜராத் மாநிலம் சூரத் நகரில் 35.54 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வைர வர்த்தக மையம் 9 செவ்வக வடிவ அமைப்புகளாக, ஒவ்வொரு அமைப்புகளிலும் 15 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவ தலைமை அலுவலகம் பென்டகன் கட்டிடம்தான் உலகிலேயே மிகப் பெரிய கட்டிடமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வர்த்தக மையம் உலகின் மிகப் பெரிய கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இக்கட்டிடத்தை வரும் டிசம்பர் பதினேழாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் .
Friday , Dec.8 2023
சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா L 1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ கடந்த செப்டேம்பேர் 2ம் தேதிஆதித்யா L 1 விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலத்தில் பொறுத்தப்பட்டுள்ள சூட் எனப்படும் தொழில் நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படமெடுக்கப் பட்டுள்ளன . சூரியனின் ஒளிக் கோளம் கிரோமோஸ்பியர் குறித்த சிக்கலான வடிவம் பற்றிய தெளிவான புகைப் படங்களை ஆதித்யா L 1 விகண்கலம் படம்பிடித்துள்ளதாகவும், சூரியனைப் பற்றிய பல புதிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Thursday, Dec.7 2023
கொடி நாள் நிதி அளிக்க பிரதமர் வேண்டுகோள்
இந்திய இராணுவத்தின் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி படை வீரார்க்கொடி நாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஏழாம் தேதி வியாழக் கிழமை கொடி நாள் தினத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த கொடி நாளை நம் இராணுவ வீரர்களை அவர்களின் தைரியம்,நம்பிக்கை, தியாகத்துக்காக அங்கீகரிப்போம். நம் தேசத்தை காப்பதில் அவையே ஒப்பற்றது. இந்த நாளில் ஆயுதப் படை வீரர்களின் கொடி நாள் நிதியை அளிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் உயரிய விருது பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர்
சிங்கப்பூரில் ஆண்டு தோறும் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது வழக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான கலை விருதை இந்திய பெண் எழுத்தாளர் மீரா சந்த் பெற்றுள்ளார். இந்த விருது நாற்பத்தி ஒன்பது லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதாகும். சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்
Wednesday, Dec.6 2023
டாக்டர் அம்பேத்கார் நினைவு தினம்
சட்ட மேதை அம்பேத்காரின் 67வது நினைவு தினம் இன்று புதன் கிழமை அனுசரிக்கப்பட்டது . இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் அபேதகர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்தில் உள்ள அபேதகர் சிலை முன் வைக்கப்டட்டிருந்த அம்பேத்கார் உருவப் படத்திற்கு ஜனாதிபதி திரௌபதி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5ம் தேதி செவ்வாய்கிழமை இரவு 8.15 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது இந்த நில நடுக்கம் ரிக்டர்
அளவில் 4.7 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது . இந்த நிலா நடுக்கத்தால் உயிரிழப்புகளோ மற்ற சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாவோ எந்த தகவலும் இல்லை
சென்னை மக்களுக்கு ஆதரவு தெரிவித்த டேவிட் வார்னர்
புயலால் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஆதரவுதெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் பாதித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப் பட்ட அனைவரையும் பற்றித்தான் எனது எண்ணங்கள் உள்ளன ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். தேவைப்பட்டால் உயரமான இடத்தில பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதையோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் வழங்குவதையோ பரிசீலிக்கவும் நம்மால் முடிந்தவரை ஆதரவு அளிக்க ஒன்றுபடுவோம்.இவ்வாறு டேவிட் வார்னேர் கூறி உள்ளார்
ஞாயிற்று கிழமை கன்னியாகுமரியில் க